புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடந்த விதம் (1)
புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்: “உலக வரலாற்று காங்கிரஸ்” புதுச்சேரியில் குறுகி விட்ட நிலைதான் தென்படுகிறது. புதுச்சேரியின் வரலாற்று பின்னணியை விளக்கும் வகையில், இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[1]. உண்மையில், “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” [Puducherry World Histoy Congress, PWHC] என்ற அமைப்பு, உலக சரித்திரத்தை ஆய்வோம் என்றுதான் ஆரம்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால், இவ்வாறு செய்தி வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது[2]. இதன், ஆலோசனை கூட்டம், தாகூர் அரசு கல்லுாரி வளாகத்தில் 06-09-2023 அன்று நடந்தது[3]. அமைப்பின் பொதுச் செயலரான பேராசிரியர் சந்தீப் குமார் தாசரி தலைமை தாங்கினார்[4]. நிர்வாகிகள், இரண்டு நாள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கினர். தினமலர் மற்றும் ஏதோ ஒரு உள்ளூர் ஊடகத்தில் மட்டும் இதைப் பற்றிய செய்து வெளிவந்துள்ளது. மற்ற ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை போலும்.
சரித்திரப் பாடம், வரலாறு கல்வி முதலியவற்றிற்கு மவுசு குறைந்து வருகிறது: இப்பொழுதெல்லாம் சரித்திர பாடத்தை யாரும் கண்டுகொள்வதில்லை எனலாம். ஏனெனில், அதைப் படித்து என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், பெரும்பாலான பல்கலைக் கழகங்களில், இத்துறை மூடப் பட்டு வருகிறது. மேலும், சேரும் எண்ணிக்கை குறைவதுடன், போதிக்கும் ஆசிரியர்களும் குறைந்து வருகின்றனர். இந்நிலையில், சரித்திர மாநாடு, கருத்தரங்கம் என்றெல்லாம்நடத்தினால் யார் வருவார்கள் என்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக, சுற்றுலா போல, ஊரைச் சுற்ரிப் பார்க்க கூட்டம் வருவது சகஜமாக இருந்தது. ஆனால், இப்பொழுதெல்லாம், கலந்து கொள்ள ரூ 3000/-முதல் ரூ 5000/- வரை வசூலிக்கப் படுவதால், அத்தகைய கூட்டமும் குறைந்து விட்டது. அந்நிலையில், உண்மையில் ஆராய்ச்சி, கட்டுரை வாசிப்பு என்று வருவது சிலரே. இருப்பினும், ஓய்வு பெற்ற சரித்திராசிரியர்கள் முதலியோர்களுக்கு இது ஒரு கிளப் போன்றுசெயல்படுகிறது. வருடத்திற்கு மூன்று நாட்கள் வந்து ஜாலியாக தங்கி, பழைய நண்பர்களைப் பார்த்து செல்ல வசதியாக இருக்கிறது.
மாநாடு பற்றிய விவரம்: பின், வரலாற்று காங்கிரசின் பொதுச் செயலர் சந்தீப் தாசரி அளித்த பேட்டி: “புதுச்சேரிக்கு செழுமையான வரலாற்று பின்னணி உள்ளது. புதுச்சேரியின் கலாசாரமும் தனித்துவம் வாய்ந்தது. புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் உள்ளிட்டவைகள் இங்கு அமைந்துள்ளன. மேலும், பண்டைய வாணிப தொடர்புக்கும், கடல் வழி வணிகத்துக்கும் சாட்சியாக விளங்கும் அரிக்கமேடு புதுச்சேரியில் அமைந்துள்ளது. புதுச்சேரியின் வரலாற்றை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கத்தில், உலக வரலாற்று காங்கிரஸ் கடந்தாண்டு அக்டோபரில் துவங்கப்பட்டது. இந்நிலையில், அரசின் சுற்றுலாத் துறை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுலா படிப்புகள் துறையுடன் இணைந்து, வரும் 9, 10 ஆகிய தேதிகளில் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். புதுச்சேரி பல்கலையில் நடக்கும் இந்த மாநாட்டில் நாடு முழுதும் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் வரலாறு சார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் 600 பேரும், வரலாற்று துறை மாணவர்கள் 200 பேரும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை, பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங் துவக்கி வைக்கிறார். பழங்கால உலகம், இடைக்கால உலகம், நவீனகால உலகம், இந்தியா மற்றும் அயல்நாட்டு சமகால வரலாறு, கடல் சார் உலகம், உலக சுற்றுலா ஆகிய தலைப்புகளில் அறிஞர்கள் பேசுகின்றனர். 150 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன,” இவ்வாறு அவர் கூறினார். ஆக, இவரும் இவ்வாறு குறுக்கி விளக்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
09-09-2023 அன்று இம்மாநாடு துவக்கி வைக்கப் பட்டது. குறிப்பிட்டது போல, கவர்னர், முதலமைச்சர் என்றெல்லாம் யாரும் வரவில்லை. உள்ளூர் காலாப்பேட்டை எம்.எல்.ஏ மற்றும் சபாநாயகர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இவ்விவரமும் அந்த எம்.எல்.ஏ இணைதளத்திலிருந்து அறியப் படுகிறது. போதிய கூட்டமும் இல்லை. விசாரித்த போது, இந்த அமைப்பில் ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது. ஏற்கெனவே “புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ்” [Pucherry History Congress, PHC] என்று ஒரு அமைப்பு செயல்பட்டு வந்தது தெரிகிறது. ஆனால், ஏதோ காரணங்களுக்காக இப்பொழுது செயல்படவில்லை. மாற்றாக, இன்னொரு அமைப்பு ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதே பெயரை உபயோகிக்காமல், இவ்வாறு, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” என்று டாம்பீகமாக பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது. ஆனால், உன்மையில் வெளிநாட்டவர் யாரும் வரவில்லை, சுற்றுலாவுக்கு வந்தவர்களை, மாநாட்டுக்கு வந்தவர்கள் போன்று அறிவித்துள்ளனர். புதுச்சேரிக்கு சாதாரணமாக அயல்நாட்டவர் வந்து செல்வது சகஜம் தான். அதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
இந்தியாவில் “உலக வரலாற்றுக் காங்கிரஸின்” பரபரப்பான விசயமானது: பங்கேற்கும் பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அமர்வுகள் என்று வைத்துக் கொன்உ, “உலக வரலாற்றுக் காங்கிரஸை” உலக அளவில் நடத்தலாம், இதில். கடந்த 100 ஆண்டுகளாக வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்கேற்புடன் “சர்வதேச” மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்போது, இது ஒன்று அல்லது சில NRIகள் பங்கேற்கும் நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது, உறுகியுள்ளது. அவர்கள் தங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடும், அதை இங்கே விவரிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அத்தகைய நபர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், உள்ளூர் கூட்டத்தை கூட அத்தகைய “சர்வதேச மாநாட்டிற்கு” மாற்றுவதற்கும் வழிகள் காணப்படுகின்றன. சென்னையில், மூன்று நட்சத்திர ஹோட்டலில் பல தலைப்புகளில் பல “சர்வதேச மாநாடுகளை” நடத்தும் குழுக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கின்றன. இதுபோன்ற பல “சர்வதேச,” “உலகளாவிய,” “கண்டங்களுக்கு இடையேயான,” “உலகளாவிய” போன்றவை தோன்றி மறைந்தன. எனவே, ஆரம்பிக்கப் பட்ட தமிழ்நாடு உலக வரலாற்று மாநாடு, ஆந்திரப் பிரதேச உலக வரலாற்று மாநாடு, தெலுங்கானா உலக வரலாற்று மாநாடு, கர்நாடகா உலக வரலாற்று மாநாடு, கேரள உலக வரலாற்று மாநாடு, ஒடிஷா உலக வரலாற்று மாநாடு போன்றவற்றின் எண்ணம் குறித்து ஆச்சரியப்பட முடியாது. சமீபகாலமாக, “உலகத் தமிழ் மாநாடு” போன்றவை பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. எனவே, ஒருவர் பேசுவது, செய்தது, நடப்பது பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும்.
இது பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நுகர்வோர் கொண்ட எல்பிஜி உலகம்: பொதுமக்கள் அல்லது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படும் போது, இயற்கையாகவே, அவர்கள் விலை மற்றும் தரத்தைப் பார்க்கிறார்கள். உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் “பொருட்கள் மற்றும் சேவைகளை” சந்தையில் கொட்டலாம், ஆனால் “நுகர்வோர்” தமது விருப்பத்திற்கு-தேவௌக்கு ஏற்ப வாங்கலாம் அல்லது வாங்காமல் இருக்கலாம், இருப்பினும் வாங்குபவர்களும் விற்பவர்களும் தங்கள் வணிகத்தைச் செய்கிறார்கள். எந்தவொரு நுகர்வோரும், “நான் 2,000, 3,000 அல்லது 5,000 ரூபாய் செலுத்தி, பயணத்திற்கும் மற்ற செலவுகளுக்கும் செலவழித்தால், அத்தகைய மதிப்புக்கு ஈடாக என்ன கிடைக்கும்?” என்று நினைப்பார்கள். நுகர்வோர் பெறவில்லை என்றால், அவர் ஏன் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்? எனவே, வரலாற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் நுகர்வோர் என்றால், நிச்சயமாக, அவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு செலுத்தியதை திரும்பப் பெற வேண்டும். மேலும், இங்கு, ஸ்பான்சர்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் லட்சங்கள் பெறப்படுகின்றன, எனவே, சேகரிக்கப்பட்ட பிரதிநிதி கட்டணத்தில் இருந்து அமைப்பாளர்கள் செலவிடுகிறார்கள் என்று யாரும் நினைக்க முடியாது. உண்மையில், பெறப்பட்ட லட்சக்கணக்கான நிதியில், அவர்கள் பிரதிநிதி கட்டணத்தை குறைக்கலாம்.
ஏறக்குறைய 100 உறுப்பினர்களுக்கு பிரதிநிதி கட்டண விலக்கு கிடைக்கும், என்பதால், மற்றவர்கள் இலவச சவாரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்களா?: ஏற்கனவே “ஜம்போ சைஸ்” செயற்குழுவில் சுமார் 100 நபர்கள் இருக்கிறார்கள். உண்மையில் 100 உறுப்பினர்களுடன், படிப்பு-ஆராய்ச்சி, கல்வி ரீதியாகவும் ஒரு மாநாட்டை நடத்தலாம். இங்கு, பிரதிநிதிக் கட்டணமாக ரூ.100 கொடுப்பார்களா என்பது தெரியவில்லை. 3,500 அல்லது இல்லையா, அப்படியானால், ஒருவர் சிந்திக்க வேண்டும், அவர்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் தேவையில்லை, அவர்களில் 90% பேர் பார்வைக்காக வருகிறார்கள், மீதமுள்ள 10% பேர் ஆய்வுக்கட்டுரைகளில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் வாசித்து முடிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள். மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்குள் ஆய்வுக் கட்டுரையை முடித்து விட்டு, பீச், ரிசார்ட், கோவில் மற்றும் பலவற்றிற்குச் சென்று மகிழத் தான் சமயம் பார்ப்பார்கள். எனவே, கல்வி சாரா செயல்பாடுகளை விட, கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
10-09-2023
[1] தினமலர், புதுச்சேரி வரலாற்றை விளக்க 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு, பதிவு செய்த நாள்: செப் 07,2023 07:15.
[2] https://m.dinamalar.com/detail.php?id=3425347
[3] தினமலர், புதுச்சேரியின் வரலாற்றை விளக்க இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு, பதிவு செய்த நாள்: செப் 07,2023 05:03.