Archive for the ‘சிவன் சொத்து குலநாசம்’ Category

பாரம்பரிய கட்டடங்கள் என்று போலிவேடம் போட்டு ஏமாற்றும் முத்தையா போன்றவர்கள் வெளிப்படுகிறார்கள்

மே4, 2010

பாரம்பரிய கட்டடங்கள் என்று போலிவேடம் போட்டு ஏமாற்றும் முத்தையா போன்றவர்கள் வெளிப்படுகிறார்கள்

சரித்திரம், சரித்தரம் எழுதும் முறை, சரித்திர வரைவியல் என்றேல்லாம் சொல்லும் போது, அத்தகைய வேலையில், தொழிலில், கடமையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாரபட்சம், உண்மைகளை மறைக்கும் போக்கு, ஆதாரங்களை ஒதுக்கும் பாங்கு முதலியவை இருக்கக் கூடாது.

பாரம்பரியம், கலாச்சாரம், பன்பாடு, நாகரிகம் என்றெல்லாம் பார்க்கும் போதும், அத்தகைய பேத பாவங்கள் இருக்கக் கூடாது.

ஆனால், பணம், பதவி, பட்டம், சலுகைகள், வசதிகள், உல்லாச வாழ்க்கை,……………….இலவசமாக சில கிடைக்கின்றன எனும்போது, இக்கால எழுத்தாளர்கள், சரித்திர ஆசிரியர்கள், சரித்திர வரைவியலில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் தார்மீக, தொழிற்-நெறிமுறைகள், கண்ணியம் முதலியவற்றை அடகு வைத்துவிட்டு வேலைசெய்யும் போக்குதான் முத்தையா போன்ற எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது.

ஐரொப்பிய காலத்தைய கட்டடம் / கட்டிடம் இடிக்கப்படுகிறது என்றால், உடனே வரிந்து கட்டிக் கொண்டு வந்து, “தி ஹிந்து” மற்றும் “மெட்ராஸ் ம்யூஸிங்ஸ்” முதலியவற்றில் எழுதித் தள்ளீவிடுவார். ஆனால், மற்றவை இடிக்கப் பட்டால் கண்டுகொள்ளமாட்டார்.

அத்தகைய போக்கு உண்மைகளை மறைப்பதுடன், வருங்கால சந்ததியர்களுக்கு நாம் செய்யும் மாபெரும் துரோகமும் இருக்கிறது என்பதை எழுதுபவர்கள் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆர். முத்தைய்யா என்பவர் “தி ஹிந்து”வின் பாரம்பரிய கட்ட்டிடங்கள், ஐரொப்பியர்களால் கட்டப் பட்ட கட்டிடங்கள், சென்னை வரலாறு என்பது போன்ற விஷயங்களைப் பற்றி எழுதி வரும் ஆஸ்தான எழுத்தாளர்.

இவருக்கு அத்தகைய கட்டிடங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும், மற்றவை தெரியாது. ஐரோப்பியர்-அல்லாத-கட்டிடங்கள் / கட்டுமானங்கள், நினைவிடங்கள் இடிக்கப் பட்டால், பழுதடைந்தால், சிதலமடைந்தால்…………….அதைப் பற்றிக் கவலை இல்லை. எதுவும் எழுதமாட்டார். ஆய்வரங்களில் மூச்சுக் கூட விடமாட்டால். கேள்விகள் கேட்டாலும், பதில் சொல்லாமல், காரில் ஏரி பறந்து விடுவார். அப்படியொரு “சரித்திர ஆசிரியர்”!

யாழ்ப்பாணம், நல்லூர் ஆறுமுக நாவலர் வித்தியாநுபாலன அச்சகத்தை ஆரம்பித்து பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

அந்த  அச்சகம் நெ.300, தங்கசாலைதெ தெரு, சென்னையில் 1980கள் வரை இருந்தது.

ஒரே ஒரு ஆள் இருப்பார், வந்தவர்கள் புத்தகங்களைக் கேட்டால் எடுத்து கொடுப்பார்.மிகவும் பழையதாக இருந்தாலும் சரிசெய்து கொடுப்பார். அந்த காலத்தில் ஆறுமுக நாவலரே வாங்கிய அச்சு யந்திரங்கள் கூட அங்கு இருந்தன.

ஆனால், அந்த கட்டடம் இப்பொழுது மறைந்து விட்டது.

ஏன் தமிழ் பெயர் சொல்லும் தமிழாளிகள், தமிழிற்காக உயிர் விடுகிறேன் என்று ஊலையிடும் கோஷ்டிகள் கவலைப் படவில்லை, ஏன் கண்டு கொள்ளாவே இல்லையே?

நடு-நடுவே, வேண்டுமென்றே கிருத்துவ மோசடி கும்பல் பரப்பி வரும் தாமஸ் கட்டுக் கதைகளுக்கு பேராதரவு கொடுப்பார். என்ன இது இப்படி பொய்யாக எழுதுகிறீர்களே, என ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி “ஆசிரியர் கடிதம்” / அவருக்கேக் கடிதம் எழுதினாலும் கண்டுக் கொள்ளப் படாது. அப்படி பட்ட “சரித்திர ஆசிரியர்”!

சென்னையில் கோகலே ஹால் இடிப்பு விவகாரத்தில், கோர்ட் உத்தரவின்றி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என, ஐகோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது. சென்னை பிராட்வேயில் கோகலே ஹால் உள்ளது. இதை இடித்து விட்டு புதிதாக கட்டடம் எழுப்ப ஒய்.எம்.ஐ.ஏ., அமைப்பு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கட்டடத்தை இடிப்பதற்கான பணிகள் துவங்கின. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’90 ஆண்டுகளுக்கும் மேலானது இந்தக் கட்டடம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் இங்கு கூடி பேசியுள்ளனர். எனவே, இதற்கு விடுதலைப் போராட்ட முக்கியத்துவம் உள்ளது. இந்தக் கட்டடத்தை இடிக்கக் கூடாது. தடை விதிக்க வேண்டும்’ என கோரினார். இதையடுத்து, இந்தக் கட்டடத்தை இடிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், ஜனார்த்தனராஜா அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. ஒய்.எம்.ஐ.ஏ., சார்பில் ஆஜரான வக்கீல், ‘தற்போது புதிய தலைவர் பொறுப்பேற்றுள்ளார். கட்டடத்தை ஆய்வு செய்த பின் முடிவெடுக்கப்படும். புராதன பாதுகாப்புக் குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது. குழுவின் பரிந்துரைகள் அவசியம். கோர்ட் உத்தரவின்றி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’ என்றார். பின், விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ‘டிவிஷன் பெஞ்ச்’ தள்ளிவைத்தது.

புராதன கட்டடங்கள், இடங்களை பாதுகாக்க ஐகோர்ட் உத்தரவு
மே 06,2010,00:00  IST

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள புராதன கட்டடங்கள், இடங்களை பாதுகாக்க, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட் டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி., கட்டடம் அருகில் பாரத் இன்சூரன்ஸ் பில்டிங் உள்ளது. கார்டில் பில்டிங் என முன்னர் அழைக்கப்பட்டது; 1897ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இந்தக் கட்டடத்தின் உரிமையாளர் எல்.ஐ.சி., நிறுவனம். இந்தோ – சாராசெனிக் கட்டடக் கலைக்கு இந்த பில்டிங் ஒரு சிறந்த உதாரணம். கட்டடக் கலை மற்றும் பாரம் பரிய புராதன பாதுகாப்புக்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) பட்டியலிட்டுள்ள புராதன கட்டட பட்டியலில், கிரேடு-ஏ வரிசையில் பாரத் பில்டிங் வருகிறது. இந்தக் கட்டடத்தின் பல பகுதிகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. மோசமான நிலையில் கட்டடம் இருப்பதால், வாடகைக்கு இருந்தவர்களை வெளியேறுமாறு எல்.ஐ.சி., தரப்பில் நோட் டீஸ் அனுப்பப்பட்டது. பாரத் இன்சூரன்ஸ் பில்டிங்கை இடிப்பதற்கு பரிசீலிப்பதாகக் கருதிய ‘இன்டாக்’ அமைப்பு, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

புராதன கட்டடத்தை பாதுகாக்க வேண்டுமென அம் மனுவில் கோரப்பட் டது. ஐகோர்ட் உத்தரவுபடி, நிபுணர்கள் குழு இந்தக் கட்டடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. கட்டடத்தை புதுப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிக்கையில் கூறப் பட்டது. புராதன கட்டட பாதுகாப்பு குழுவை அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த மாதம் குழுவை அரசு நியமித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், ஜனார்த்தனராஜா அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. ‘இன்டாக்’ சார்பில் வக்கீல் என்.எல். ராஜா, சி.எம்.டி.ஏ., சார்பில் வக்கீல் பரந்தாமன், சென்னை மாநகராட்சி சார்பில் வக்கீல் பாரதிதாசன், எல்.ஐ.சி., சார்பில் சீனியர் வக்கீல் சோமயாஜி, வக்கீல் பார்த்திபன் ஆஜராகினர்.

‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: சென்னை பெருநகர பகுதிக்கான வளர்ச்சி கட்டுப்பாட்டு விதியை பின்பற்றாமல், பாரத் இன்சூரன்ஸ் கட்டடத்தை இடிப் பதற்கு எல்.ஐ.சி.,க்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டடத்தின் மதிப்பை ஆராயவும், கட்டடத்தை அப்படியே வைத்திருப்பதற்கான சாத் தியக் கூறுகளையும் புராதன பாதுகாப்புக் குழு ஆராய வேண்டும். முடிந்தவரை, இக்கட்டடத்தை பாதுகாக்க வேண்டும். புராதன பாதுகாப்புக் குழுவிடம் சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சி கலந்து ஆலோசித்து, கட்டடத்தை முழுவதுமாக இடிப்பதில் இருந்து பாதுகாக்க உத்தரவிட வேண் டும். அல்லது கட்டடத்தில் எவ் வளவு பகுதியை பாதுகாக்க முடியுமோ அதை செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இந்த முடிவை எடுக்க வேண்டும். முழு கட்டடத்தையும் அப்படியே வைத்திருக்க முடியாது என புராதன பாதுகாப்புக் குழு கருதினால், அதில் உள்ள சிறு கோபுரங்கள், கல் தூண்கள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். முதல் ஹாலை வைத்து விட்டு மீதியுள்ள நிலத்தில் எல்.ஐ.சி., விரும்பியபடி மேம்பாடுகளை செய்து கொள்ள ஆராயலாம். புராதன கட்டடங்களின் பட்டியலை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு புராதன பாதுகாப்புக் குழு பரிந்துரைக்க வேண்டும்.

நீதிபதி பத்மநாபன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட் டீஸ் அனுப்ப வேண்டும். அப்போது தான், அந்த கட்டடங்களை இடிக்கவோ, மாற்றம் செய்யவோ, புராதன மதிப்பை குறைக்கும் வகையிலோ எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள். நீதிபதி பத்மநாபன் அறிக்கையில், கிரேடு-2ஏ, 2 பி, கட்டடங் களை அரசு பட்டியலிட வேண் டும். அந்தக் கட்டடங்களை புராதன கட்டடங்களாக அறிவிப்பது தொடர்பாக குழுவின் கருத்தை பெற வேண்டும். நீதிபதி அறிக்கையில் உள்ள கட்டடங்களை எப்படி பாதுகாப்பது, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக எப்படி கண்டறிவது என, புராதன பாதுகாப்புக் குழு ஆராய்ந்து, உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அப்போது தான், சென்னையில் வசிப்பவர்களுக்கும், சுற்றுலா வாசிகளுக்கும் புராதன கட்டடம் பற்றி தெரிய வரும். புராதன கட்டடங்கள், இடங் கள் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் அவற்றை பாதுகாக்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

கோவையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த, ‘குதிரை வண்டி கோர்ட்’ சமூக விரோதிகளின் அடைக்கலமாக உள்ளது. நீதிபதி பத்மநாபன் தலைமையிலான குழு தயாரித்த இந்த அறிக்கை பிரமாதமாக உள்ளது. எங்கள் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

# ஆனால், அவஎருக்கு மற்ற கட்டடங்கள், நினைவு சின்னங்களைப் பற்றிக் கவலையில்லை!

# இராமலிங்க அடிகள் சென்னையில்தான் இருந்தார். அவருடன் சம்பந்தப் பட்ட பல கட்டடங்கள் இருந்தன.

# “தியாகராஜர்” பெயரைச் சொல்லிக் கொண்டு லட்சங்களை, கோடிகளை பணம் பண்ணும் கோஸ்ட்கள் இருக்கின்றன. ஆனால், அவர் சென்னையில் வந்து தங்கிய கட்டடம் எங்கே?

# “சென்னையிலே திருவையாறு” என கதறும் அந்த போலிகளுக்கு இதைப் பற்றித் தெரியுமா? தெரிந்தால் ஏன் இப்படி மௌனமாக இருந்தார்கள்?

# அருணகிரிநாதர் வந்த கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவிலில்வழிபட்டுச் சென்றார். அந்த கோவில் எங்கே?

# திருஞான சம்பந்தர் சென்னைக்கு வந்து பூம்பாவை பதிகம் பாடி, உயிரெழுப்பினார். அந்த இடம் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் இருந்தது. அது எங்கே?

# விவேகானந்தர் வந்தபோது, தங்கிய இடங்கள் எங்கே?

# சாரதா அம்மையார் சென்னைக்கு வந்தபோது தங்கிய இடங்கள் எங்கே?

# அம்பேத்கர் சென்னைக்கு வந்து தங்கிய வீடுகள் எங்கே? [அம்பேத்கர் பெரைச் சொல்லி வியாபாரம் செய்யும் கூட்டங்களுக்கு இது பற்றி யாதாவது தெரியுமா?]

இது மாதிரி லட்சத்திற்கும் மேற்பட்ட உதாரணங்களைக் கொடுக்க முடியும்.

உண்மையென்னவென்றால், தமிழனுக்குத் தனது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என்றால், கேவலமாக நினைக்கிறான். கேவலப் படுத்தினால் மகிழ்கின்றான். அத்தகைய நிலைக்குக் கொண்டு வைத்துள்ளனர், அந்நியர்களும், அவர்களின் அடிவருடி சித்தாந்தக் கூட்டங்களும்.

காலனிக் கட்டடங்களைக் கட்டிக் கொண்டு கதறுவது ஏன்?

ஏப்ரல்24, 2010

காலனிக் கட்டடங்களைக் கட்டிக் கொண்டு கதறுவது ஏன்?

பாரம்பரிய கட்டடங்களைக் காப்போம் என்று அடிக்கடி கிளம்பி விடுகிறார்கள் சிலர். உடனே ஆங்கில பத்திரிக்கை-நாளிதழ்களில் வரிந்து கட்டிக் கொண்டு எழுத ஆரம்பித்து விடுகிறர்கள் திரும்ப-திரும்ப மியூஸியம், ஆர்ட்-காலரி, மவுண்ட் ரோடில் உள்ல சில பழைய கட்டடங்கள் இவற்றின் புகைப் படங்களை போட்டு, ஏதோ இந்த கட்டடங்கள் இல்லாவிட்டால் இந்திய, தமிழ் நாட்டு பாரம்பரியமே போய் விடும், கலாச்சாரம் மறைந்துவிடும், நாகரிகம் நசிந்துவிடும் என்ற ரீதியில் கதை விடுவார்கள். இதில் முதன்மையாக இருந்து, பிரச்சாரத்தை செய்து, பொய்களை, பற்பல மாயைகளைப் பரப்பி வருவதில், இருப்பவர் “சரித்திர என்ற போர்வையில் உலா வரும் ஆர். முத்தையா. இவருக்கு சென்னையில் உள்ள மற்ற எந்த புராதான, பழங்கால, பாரம்பரிய கட்டடமும் கண்ணில் படாது. ஆனால், ஐரோப்பியர், ஆங்கிலேயர் கட்டிய காலனிய சின்னங்களை அடிமை-கூலிக்கார மனப்பாங்குடன் கண் மூடித் தனமாக ஆதரித்து, அவை சிதலமடைகின்றன, இடிக்கப் போகிறார்கள் என்றதும் “குய்யோ, முறையோ” என்று அலரி பக்கம்- பக்கமாக எழுதித் தள்ளிவிடுவார்! அதற்கு “தி ஹிந்து” பிரத்யேகமாக இடம் கொடுக்கும்.

ஏன் இந்த பிரச்சாரம்? சென்னையில், தமிழ்நாட்டில், இந்தியாவில் அத்தகைய பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், ஞாபக கட்டடங்கள், கலாச்சார கட்டிட அமைப்புகள் இல்லையா? பல இடங்களில் நூறு-இருநூறு-முன்னூறு என்ற கால ரீதியில் உள்ள வீடுகள், கட்டடங்கள், அரசர்களின் மாளிகைகள், தங்கும் இடங்கள், ஏன் சாதாரண மக்கள், வழிப்போக்கர்கள் தங்க கட்டப் பட்டுள்ள கட்டடங்கள்….இவற்றை ஏன் கண்டு கொள்ளமல் இருக்கிறார்கள்?  அவையெல்லாம் நமது பரம்பரியத்துள் வராதா? கலச்சார சின்னங்களில் இடம் பெறாதா? பண்பாட்டில் பயனிக்காதா?

CMDA to maintain heritage buildings Special Correspondent

A separate zonal planning committee to clear plans for buildings on ECR

http://www.hindu.com/2010/04/23/stories/2010042358420100.htm

The decision to hand over conservation of heritage buildings to the CMDA will benefit several structures. A picture of Victoria Hall.

CHENNAI: The Chennai Metropolitan Development Authority (CMDA) will take up maintenance and conservation of heritage buildings in Chennai, Slum Clearance and Accommodation Control Minister Suba Thangavelan told the Assembly on Thursday. “Chennai has many heritage buildings with historical significance and architectural excellence. The list of buildings will be released and the CMDA will maintain them,” he said replying to the debate on demands for grants for his department.

The Minister said the government would implement a housing project under public-private partnership mode to meet requirements in the Chennai Metropolitan Area. The government will enter into an agreement with those who have more than 100 acres. A separate zonal planning committee would be created for plans and plot approvals for buildings on East Coast Road, stretching from Neelankarai to Puducherry.

Development plans: The Minister said under the second master plan, development plans would be prepared in the current year for Villivakkam, Velachery, Ambattur, Nazarethpet and Perumbakkam. Local bodies would give planning approval for buildings constructed within 4,000 sq ft outside the Chennai Metropolitan Area. A commercial complex will be constructed above the Chennai Mofussil Bus Terminus (CMBT) building at Koyambedu.

‘சிவன் சொத்து குலநாசம்’ – அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆவேசம்
ஏப்ரல் 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17913

Latest indian and world political news information

கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவில் நிலத்தை கள்ளத்தனமாக எப்படி விற்க்கப் பட்டது? சென்னை : ”கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவில் நிலத்தை கள்ளத்தனமாக விற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,” என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சேகர்பாபு கேள்வி எழுப்பினார். சட்டசபையில், கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது நடந்த விவாதம்:

சேகர்பாபு – அ.தி.மு.க.,: கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 3.3 ஏக்கர் நிலத்தில் 1.26 ஏக்கர் நிலம் மத்திய அரசின் பொதுப்பணித்துறைக்கு விற்கப்பட்டதாகவும்,கோவில் நிலம் காப்பாற்றப்படுமென்றும் சபையில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது அமைச்சர் உறுதியளித்தார். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்க வேண்டுமானால், கோவிலின் அனுமதியைப் பெறாமல் விற்கக்கூடாது என்ற நிபந்தனையிருந்தும், அதை கள்ளத்தனமாக விற்றவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஏற்கனவே இருக்கும் நிலை தொடர வேண்டும் என 2008ல் கோர்ட் தீர்ப்பு வந்த நிலையில், அதன்மீது மேல்முறையீடு செய்து வழக்கை துரிதப்படுத்தாதது ஏன்?
தற்போது, முதல்வரின் துணைச் செயலராக உள்ள ஜெயகாந்தன், டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, சி.எம்.டி.ஏ.,விற்கு எழுதிய கடிதத்தில், ‘இந்த 42 ஏக்கரில் அரசு நத்தம் புறம்போக்கு நிலம் பெருவாரியாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, 100 அடி சாலை இணைப்பு பகுதியில், 41 சென்ட் அரசின் நத்தம் புறம்போக்கு இடத்தில் ஓசோன் குழுமம் தன்னுடைய அலுவலகத்தை கட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த இடத்தில், கட்டுமானப் பணி தொடர்வதால், அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புகள் அதிர்கிறது என்று திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டும், இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஓசோன் குழுமம் வரைபட அனுமதி வழங்கியதில், இந்த 3. 3 ஏக்கர் நிலத்தையும் சேர்த்துதான் மனுவில் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, முறையான அனுமதி இல்லாததால், ஓசோன் குழுமத்தின் வரைபட அனுமதியை ரத்து செய்து, கோவில் நிலத்தை காப்பாற்ற வேண்டும். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று சொல்வார்கள். அது போல, சிவனுக்குண்டான இந்த சொத்தில், யார் தவறு செய்தாலும், அவர் குலம் நாசமாகிவிடும்.

ஞானசேகரன் – காங்கிரஸ்: கோவில் நிலத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அந்த இடத்தில் கட்டுமானப்பணி நடப்பதால், அருகில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராட்சச போர்வெல் மூலம் நிலத்தடி நீரை, அந்த நிறுவனம் உறிஞ்சிக் கொள்வதால், மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

வேல்முருகன் – பா.ம.க.,: எந்த அதிகார மையத்தின் உத்தரவு மூலம், இந்த கோவில் நிலம் தனியாருக்கு வழங்கப்பட்டது? சென்னையில் பல இடங்களை, இதே போல், தனியார் வளைத்து வருகின்றனர்.

சிவபுண்ணியம் – இந்திய கம்யூனிஸ்ட் : சாதாரண மக்கள் ஆக்கிரமிப்பு செய்தால், போலீசைக் கொண்டு காலி செய்கிறீர்கள். கோவில் நிலத்தில், எல்லா விதிமுறைகளை மீறி, அனுமதி எப்படி வழங்கப்பட்டது?

அமைச்சர் பரிதி இளம்வழுதி: கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 120 கோடி ரூபாய் சொத்தை தனியார் அபகரித்துள்ளதாக சொல்கிறார்கள். பிரச்னைக்குரிய நிலம் 1.77 ஏக்கர் மட்டுமே. அந்த நிலத்திற்கு இவ்வளவு மதிப்பு வருமா? மொத்த நிலத்தில், 1.77 ஏக்கர் நிலம் தற்போதுள்ள நிலையில் தொடர வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த இடத்தைத் தவிர்த்துதான் பணிகள் நடக்கிறது. அரசின் உத்தரவை ஓசோன் குழுமம் மீறவில்லை. குற்றச்சாட்டு எழுப்பியவர்கள் விரும்பினால், அவர்களோடு சேர்ந்து நானும் சம்பந்தப்பட்ட  இடத்தை பார்வையிடத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.