Archive for the ‘ஆங்கிலேயர்’ Category

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ் ஆக நடந்து முடிந்த விதம் (2)

செப்ரெம்பர்11, 2023

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ் ஆக நடந்து முடிந்த விதம் (2)

மாணவர்களிடம் அடாவடி வசூல்: மாணவர்களிடம் பணம் [delegate fees] வசூலிக்கப் பட்ட முறை பரிதாபகரமான நிலையை அடைந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், ஒருவரால் ரூ.3500/- செல்லுத்துவது என்பது இயலாத விசயமாகும். குறைந்த அளவில் தான் டெலிகேட்டுகள் கலந்து கொண்டனர். ஆய்வுக்கட்டுரைகள் கூட அதிகமாக வரவில்லை. 150 வந்ததாகச் சொல்லிக் கொண்டாலும், அவ்ற்றை சமர்ப்பிக்க வந்தனரா இல்லையா என்ற விவரமும் தெரியாது. அந்நிலையில், ஒவ்வோரு மாணவரிடமும் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டதும், அவர்கள் செல்லுத்த முடியாத நிலை ஏற்பட்டதும் வருத்ததிற்கு உகந்ததாக இருக்கிறது. இரண்டு நாட்கள் மாநாடு என்று சொல்லிக் கொண்டாலும், ஒன்றரை நாட்களிலேயே முடித்து விட்டனர். அந்நிலையில் இம்மாந்நாட்டிற்கு நிச்சயமாக லட்சங்களில் கொடையாக, நன்கொடையாக, ஸ்பான்சர்சிப் என்று வசூல் செய்திருப்பர். அந்நிலையில், மாணவர்களுக்கு ரூ 1000/- என்று கூட வசூலித்திருக்கலாம். ஆனால், விடாப்பிடியாக ரூ. 2500/- வசூலித்தது அதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஆய்வுக் கட்டுரை வாசிக்க வரும் மாணவர்கள் வாசித்து விட்டு, சான்றிதழைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவர். ஆகவே, ஒரூ இரவு தங்கினாலும், அவர்களால் அந்த அளவுக்கு செலவினம் ஏற்படாது.

600 சரித்திராசிரியர்களும், 200 மாணவர்களும்: இப்படித்தான் கலந்து கொள்வதாக, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” அறிவித்துக் கொண்டது. பிறகு, மாணவர்களுக்கு இவர்கள் என்ன சலுகை கொடுத்தனர் என்று தெரியவில்லை. ஒவ்வொரு தலைவர், உபதலைவர், போன்றோர் தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ள முயன்றனரே தவிர, மாநாட்டைப் பற்றிக் கவலைப் படவில்லை. கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த முறைகளில் கவனம் செல்லுத்துவதில்லை என்று அவர்களது சுய-விளம்பர யுக்திகளில் வெளிப்பட்டது. பல மாணவ உறுப்பினர்கள் வராத அளவுக்கு கெடுபிடிகள் செய்யப் பட்டன[1].  ஆரம்பத்திலேயே இரண்டு-மூன்று குழுக்கள் இதில் உருவாகி விட்டதால், இப்பொழுதுள்ள ஆதிக்கக் குழு மற்றவர்களை அமுக்கி ஆதிக்கம் செல்லுத்தப் பார்க்கிறது. இதில், மாணவர்கள், உண்மையான ஆராய்ச்சியாளர்கள் பலிகடா ஆகின்றனர். ஸ்டேஜ் மேலே நின்று கொண்டு போட்டோ  செல்பி எடுத்துக் கொள்வது ஓன்ற விசயங்களில் அதிகமாகவே ஆய்வம் காட்டியது புலப் பட்டது. ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்கும் அறைகளில் 10-20 பேர் தான் இருந்தனர். அவர்களும் பெப்பரைப் படித்து விட்டு ஓடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது போல தெரிந்தது. அந்தந்த துணைப்பிரிவு தலைவரும் அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” உருவான கதை: ஏற்கெனவே குறிப்பிட்டது போல, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” “புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ்” ஆக மாறி, அதிலும் குறுகி, சிறுத்து விட்டது போலிருக்கிறது. “புதுச்சேரி வரலாற்றுப் பேரவை,” என்று ஒரு அம்மைப்பு ஏற்கெனவே இயங்கி வருகின்றது[2]. விவரித்ததில், திண்டுக்கல்லில், தென்னிந்திய வரலாற்று மாநாடு நடந்த பொழுது, சில குழுக்களில் ஏற்பட்ட அதிருப்தி, தேர்தலில் நடந்த முறைகேடுகள், முதலியவற்றை தட்டிக் கேட்ட போது நடந்த விவகாரங்கள் இவற்றால், சிலர் “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” துவங்க முடிவு செய்தனராம்[3]. “தேர்தல்” என்றால் அவர்களது நிர்வாகத்திற்கு நடத்தப் படுவது, ஆனால், அதில் கூட, அரசியல்வாதிகளைப் போன்று ஓட்டுகளை முறையாக போடாதது, எண்ணிக்கையில் மோசடி செய்வது, சண்டை போட்டுக் கொள்வது, டித்துக் கொள்ளும் நிலைக்குச் செல்வது என்றெல்லாம் நடக்கும் பொழுது அவர்களது நிலையை அறிந்து கொள்ளலாம்[4]. இது ஏதோ ஒரு பெரிய அமைப்பு போலவும், இதன் தலைவர் சரித்திரத்தையே ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்கி விட்டது போலவும் நடந்து கொள்கின்றனர்[5]. இதைப் பற்றி ஏற்கெனவே விவரமாக எழுதி பதிவு செய்துள்ளேன்[6]. அதற்காக, இந்திய வரலாற்று பேரவை இதர மாநாடுகள் நடந்த போது, அங்கெல்லாம் சென்று, இதைப் பற்றி விளக்கி, உறுப்பினர்களை சேர்த்ததாகத் தெரிகின்றது.

வரலாற்றுப் பேரவைகளிடம் ஒற்றுமை இல்லை: ஏற்கெனவே சரித்திராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களிடையே ஒற்றுமை இல்லாதலால், இந்திய வரலாற்று பேரவை உடைந்து இந்திய கலை மற்றும் வரலாறு பேரவை, தென்னிந்திய வரலாற்று பேரவை, தமிழ்நாடு வரலாற்று பேரவை என பல மாநில “வரலாற்று பேரவைகள்” உருவாகி விட்டன. ஆகவே “உலக” என்று அடைமொழி வைத்துக் கொண்டாலும், குறுகிய, தன்னலம் கொண்ட ஆட்களால், இதுவும் சுறுங்கி விட்டது. மேலும் இப்பொழுதெல்லாம் சரித்திரம் என்றால் யாரும் மதிப்பதில்லை. அதனால், இவர்கள் அரசியலை கலந்து, அரசியல் கட்சிகளுக்கு ஜால்றா போட்டுக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டு வருகின்றனர். அவ்வாறுதான், இப்பொழுது, தென்னிந்திய வரலாற்று பேரவை, கேரளத்தவர்களின் ஆதிக்கத்திற்கு சென்று விட்டது. இதனால், அதனை “கேரள வரலாற்று பேரவை” என்று கூட சொல்லலாம். ஏற்கெனவே அதில் பிரச்சினை இருந்ததால், நீதிமன்றம் வரை சென்று மீட்டு வந்துள்ளது. இருப்பினும் அவர்களிடையே ஒற்றுமை இல்லை. சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவர். இல்லையென்றால் சண்டை ஆரமித்து விடும்.

ஆரம்ப விழா முதல் நிறைவு விழா வரை சுணக்கம் தான்:  ஆரம்ப விழாவுக்கு காலாப்பேட்டை எம்.எல்.ஏ, ஒரு அமைச்சர் மற்றும் சபாநாயகர் வந்திருந்தனர். நிறைவு விழாவிற்கும் எந்த விஐபியும் வரவில்லை. இருந்தவர்களும் சென்று விட்டார்கள் போலும். 40-50 பெயர்கள் அழைப்பிதழ், இணைதளங்களில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் காணவில்லை, அதாவது வரவில்லை. இவர்களே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்கள். மாநாட்டிற்கு சேவை செய்பவர்களைப் பாராட்டி, நினைவு பரிசு வழங்கப் பட்டது. இருப்பினும், பலரை மறந்து விட்டனர் என்பதை அவர்களுக்கேப் புரியும் வண்ணம், மற்றவர்கள் இல்லாதது எடுத்துக் காட்டியது. துவக்க நிகழ்ச்சியில் இருந்த கூட்டமும் இல்லை. தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே சென்று விட்டனர். அந்த அளவுக்கு அவசர-அவசரமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டு முடித்து விட்டது போன்று தெரிந்தது. மதிய உணவுடன் முடித்த்க் கொண்டதால், இரவு உணவு செலவும் மிச்சம் என்று நினைத்திருப்பர்.

சுயநலம், விருப்பு-வெறுப்பு நீங்கி செயல்பட்டால் தான் அமைப்பு வளரும், நிலைக்கும்: ஆரம்பநிலையிலே இத்தகைய சுயநலம், தனிமனித விருப்பு-வெறுப்பு போன்றவை, சரித்திராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களிடம் இருப்பது திகைப்பாக இருக்கிறது. ஏற்கெனவே சரித்திர பாடத்திற்கு முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில், இவர்களது இத்தகைய நடத்தைகளும் வருத்த அளிப்படாக உள்ளது. இப்படியே தொடர்ந்தால், இந்த அமைப்புகள் எல்லாம் கூடிய சீக்கிரத்தில், நடைபெறா நிலைக்குச் சென்று மறைந்து விடும் போலிருக்கிறது. ஒரு சொசைடி, சங்கம் என்று பதிவு செய்து கொண்டு தான் இவை இயங்கி வருகின்றன. அந்நிலையில் உற்ப்பினர்களின் நலன்களை கண்டுகொள்ளாமல், தங்களுக்கு விளம்பரம் தேடும் முறைகளில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால், அவர்களுக்கு லாபம் கிடைக்குமே தவிர, உறுப்பின்னர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே, முதலில் இவ்ர்கள் தங்களைத் திருத்தி, மாறீக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

11-09-2023


[1]  குறிப்பிட்ட கெயிட் / எச்.ஓ.டி என்று அடையாளம் காணப்பட்டு, நடத்தப் பட்டதாக மாணவர்கள் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டார்கள். உண்மையில் மாணவர்களுக்கும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிகிறது.

[2]    புதுச்சேரி வரலாற்றுப் பேரவை,  https://www.facebook.com/PuducherryHistoricalCouncil/

[3]  வேதபிரகாஷ், 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1), ஆகஸ்ட் 30, 2022.

[4] https://indianhistoriography.wordpress.com/2022/08/30/south-indian-history-congress-session-held-at-tindigul/

[5] வேதபிரகாஷ், 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1), ஆகஸ்ட் 30, 2022.

[6] https://indianhistoriography.wordpress.com/2022/08/30/south-indian-history-congress-tindugal-session-mismanaged-and-not-handled-properly/

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – 27-12-2022 அன்று மோடி, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது (4)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – 27-12-2022 அன்று மோடி, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது (4)

மதசார்பின்மை கதையும், வரலாறும்: வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “இந்த உண்மையான வரலாற்றை மறைத்து, தமிழர்களை ஏமாற்றும் தந்திரத்தைதான், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விமர்சித்திருப்பார் என நம்புகிறேன். என்னதான் தி.மு..வினர் மறைத்தாலும், உண்மை தான் இறுதியில் வெல்லும். அதுவும் இது, தகவல் தொழில்நுட்ப யுகம். இப்போது எதையும் மறைக்க முடியாது. இனம், மொழி வெறியைத் தூண்டி, குடும்ப அரசியலை நீண்ட காலத்திற்கு நடத்த முடியாது என்பதை தி.மு..வினர் உணர வேண்டும். காலம் அதனை நிச்சயம் உணர்த்தும். இதே மாநாட்டில் பேசும்போது, “மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைஎன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார். அவருக்கு ஓர் உண்மை வரலாற்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 1950-ல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அரசியலமைப்பின் முகப்புரையில்மதச்சார்பின்மைஎன்ற வார்த்தை சேர்க்கப்படவில்லை. 1975-ல் நாட்டில் நெருக்கடியை நிலையை அறிவித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, மிசா சட்டத்தின்கீழ், எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்து விட்டு, கொடுங்கோல் ஆட்சி நடத்தினார்எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிறையில் அடைத்துவிட்டு, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையை எல்லாம் முடக்கிவிட்டுதான், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை, இந்திரா காந்தி சேர்த்தார்.”

தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்; வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “இந்த வரலாற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மதச்சார்பின்மைஎன்பது மதங்களைமறுப்பதுஅல்ல. அனைத்து மதங்களையும்சமமாகபேணுவதே. ஆனால், தி.மு..வின் மதச்சார்பின்மை என்பது, இந்து மதத்தற்கு மட்டும் எதிராக செயல்படுவது. அதனால்தான், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இந்த மாநாட்டில், “பொய் வரலாறுகளை புறந்தள்ளி, மக்களை மையப்படுத்திய உண்மை வரலாறு எழுதப்பட வேண்டும்என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியதையே நானும் வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் கட்டிய இந்து கோவில்கள் பற்றியும், அவர்கள் பின்பற்றிய இந்து தர்மம், கலாசாரம் பண்பாடு பற்றியும், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகள், மொகலாய மன்னர்கள், சுல்தான்கள் ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்கள் பற்றிய வரலாறும் எழுதப்பட வேண்டும். இந்த உண்மைகளை எல்லாம் குறிப்பிட வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி,” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

27-12-2022 அன்று மோடி, பினாராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது[1]: கடந்த நவம்பர் மாதம், 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் படைகளை வென்ற லச்சித் பர்புகானின் 400-ம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி[2], “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்தியப் பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்நியர்கள் ஆட்சிக்காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறுதான் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. அந்நியர்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து, தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நாட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்என்றார். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆனால், இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றனஎன்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், “வீர பாலகர் தினம் என்பது இந்தியாவின் வீரம், தியாகம், சீக்கிய பாரம்பர்யத்தின் அடையாளம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு சம்கவுர், சிர்ஹிந்த் போர்கள் நடைபெற்றன. மதஅடிப்படைவாதத்தைப் பின்பற்றிய முகலாயப் படைகளுக்கு எதிராக நமது குருக்கள் துணிச்சலாகப் போராடினர். சீக்கிய குரு கோவிந்த் சிங்கும், அவரின் மகன்களும் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை. யார் முன்பும் தலைவணங்கவில்லை. கோவிந்த் சிங்கின் சிறுவயது மகன்கள் உயிருடன் சமாதி கட்டப்பட்டனர். ஒருபுறம் மிருகத்தனம், மறுபுறம் பொறுமை, வீரம் வெளிப்பட்டது,” என்றார்.

27-12-2022 அன்று கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியது: இவ்வாறு இந்திய வரலாறு குறித்து பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பாறப்புறத்தில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய கேரளா முதல்வர், “சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் செய்தவர்களைத் துணிச்சலான தேசபக்தர்கள் என்றும், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் இன்றைய ஆட்சியாளர்கள் சித்திரித்துவருகின்றனர்” என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை விமர்சித்தார். “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பரிவாரங்களால் துணிச்சலான தேசபக்தர் என்று போற்றப்பட்ட சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு அந்தமான் சிறையிலிருந்து விடுதலை பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தை எந்தெந்த வழிகளில் சிதைக்கலாம் என்று சிந்தித்தார்கள். தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் முக்கியப் பங்கு வகித்தனர்” என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கேகூட இந்தக் கருத்தைக் குறிப்பிட்டார்.

27-12-2022 அன்று ஸ்டாலின் பேசியது: இந்தப் பின்னணியில்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். மேலும், “கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. அதை ஏற்கக் கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்” என்று பா.ஜ.க-வை மறைமுகமாகச் சாடினார் ஸ்டாலின். ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்ட வரலாற்று அறிஞர்களின் ஆய்வு நூல்களை பா.ஜ.க ஏற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களின் நூல்களையெல்லாம் மனதில் வைத்துத்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசுகிறார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 1990களில் சரித்திராசிரியர்கள் வேறுபட்டு சண்டை போட்டுக் கொண்டனர். இப்பொழுது அவர்களில் பாதி பேர் காலமாகி விட்டனர், சிலருக்கு 70-80-90 என்று வயாதாகி விட்டது. மற்றவர்களோ உண்மையினை மறைத்து பேசி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] விகடன், இந்திய வரலாற்றைக் குறை கூறிவரும் பிரதமர் மோடிபாஜக மாற்றி எழுத விரும்புவது எதை?!, ஆ.பழனியப்பன்,  Published:Today at 7 AM; Updated: 7.30 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/politics/the-prime-minister-modi-reiterates-to-rewrite-indian-history

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – இந்திய சரித்திரத்திற்கு பதிலாக தமிழக சரித்திரம் பற்றி பேசியது! (3)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியது – இந்திய சரித்திரத்திற்கு பதிலாக தமிழக சரித்திரம் பற்றி பேசியது! (3)

கோடிகளில் நிதியுதவி பெற்று நடத்தப் படும் மாநாடுகள்: கல்லூரி முதல்வர் வில்சன் ஆங்கிலத்தில் பேசினாலும், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று வரவேற்று பேசி, அரசியல் ரீதியில் தான் பேசினார். தமிழ்நாடு அரசு ரூ.35 லட்சங்கள் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மற்ற கல்வி நிறுவனங்கள் முதலியனவும் நிதியுதவி அளித்துள்ளன. சுமார் 2500 பேர் பதிவு செய்ததாகச் சொல்லப் படுகிறது, அப்படியென்றால், சுமார் ரூ 75 லட்சம் மேலாக தொகை வந்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ரூ.35 லட்சங்கள் கொடுத்துள்ளது என்றால், ரூ 1 கோடிக்கு மேலாக வசூலாகியிருக்கிறது. ஆனால், நிச்சயமாக, இவ்வளவு தொகையும் செலவழிக்கப் படவில்லை. ஏனெனில், பாதிக்கு மேற்பட்டவர்கள் தங்காமல், ஆய்வு கட்டுரை கொடுத்து சென்று விட்டானர்.  30-40% பேர் வழக்கம் போல சுற்றிப் பார்க்கச் சென்று விட்டனர். ஆய்வுக் கட்டுரை படிக்கும் அறைகளில் சுமார் 100 பேர் தான் இருந்தனர். மதியத்திற்கு மேல், 5-10 பேர் தான் இருந்தனர். பிறகு, ஒவ்வொருவரிடமிருந்து ஏன் ரூ 4750/-, 3,500/- என்றெல்லாம் வசூலிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வழக்கம் போல நடந்த சடங்குகள்: மஹாலக்ஷ்மி ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஷிரீன் மூஷ்வி, சுப்பராயலு கேசவன் தலைவராக முன் மொழிந்தார். ஷிரீன் மூஷ்வி, வழி மொழிந்தார். டி.ஆர்.பாலு, அன்பரசு, தங்கம் தென்னரசு, பொன்முடி, ஸ்டாலின், முதலியோருக்கு நினைவு பரிசு கொடுக்கப் பட்டது. தங்கம் தென்னரசு, இந்திய சரித்திரம் தமிழகத்திலிருந்து தான் துவக்கப் பட வேண்டும். பல்லாவரம் கோடாளி, அத்திரம்பாகம் பழங்கற்கால எச்சங்கள், முதலியவற்றைக் குறிப்பிட்டு, தமிழ் வைவடிவம் முந்தியது என்றெல்லாம் பேசினார். எல்லாமே, ஸ்டாலின் ஆட்சியில் தான் நடந்தது போன்று பேசியது தமாஷாக இருந்தது. பொன்முடி “திராவிட மாடல்” பாணியிலேயே பேசி முடித்தார். கால்டுவெல் பற்றியெல்லாம் பேசினார். 1935ல் ஆரம்பித்தாலும் 81வது மாநாடு இப்பொழுது நடக்கிறது. உண்மையான சரித்திரம் எழுதப் படவேண்டும். அடுத்தது ஸ்டாலின் பேசினார். ராமானுஜன் நிதியுதவி அளித்தற்கு நன்றி தெரிவித்தார். எல்லா மந்திரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

 “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியது: இப்படியாக முதலமைச்சர் பேசியது, சரித்திராசிரியர்களுக்குத் திகைப்பாகத் தான் இருந்தது. முந்தைய அமர்வுகளைப் போல, எந்த சரித்திராசிரியரும் பொங்கவில்லை, துடிக்கவில்லை, ஆவேசமாக எழுந்து பேசவில்லை, கத்தவில்லை. அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். சொல்லி வைத்தால் போல, இர்பான் ஹபீப் போன்றவர்களும், ரோமிலா தாபர் வகையறாக்களும் வரவில்லை. வந்திருந்தாலும், அமைதியாகத்தான் இருந்திருப்பர். கண்ணூர் போல, இர்பான் ஹபீப் ஒன்றும் ஸ்டாலினைத் தட்டிக் கேட்டிருக்க முடியாது. கத்தி ஆர்பாட்டம் போட்ட கும்பலும் இங்கு காணவில்லை. ஸ்டாலின் பேசியதை கூர்ந்து கவனித்தால், அவர் ஏதோ, “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசியது போன்று இருந்தது. அரசியல் மயமாக்கி, கொடுத்த பெரிய சொற்பொழிவை கேட்டுக் கொண்டு சும்மாதான் இருந்தனர். பொதுவாக ஆங்கிலத்தில் ஏசுவதைக் கூட விடுத்து, இவ்வாறு, “திராவிட மாடலில்” பேசியது, சரித்திராசிரியர்களுக்கு பாதித்ததாகத் தெரியவில்லை.

கண்ணாடி முன்பு நின்று தனக்கு தானே பேசியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்: நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை என வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார்[1]. பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்[2];- “சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற, 81-வது ‘இந்திய வரலாற்று காங்கிரஸ்’ மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “கற்பனை கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபுதான்,” என, பேசியுள்ளார்[3]. முதல்வரின் இந்த வரிகளோடு அப்படியே நான் உடன்படுகிறேன். இந்த வரிகளை அவர், கண்ணாடி முன்பு நின்று தனக்கு தானே பேசியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்[4].

நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை: நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை[5]. கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, ‘திராவிடம்’ என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக, கற்பனையாக சித்தரித்து உருவாக்கப்பட்ட கட்டுக்கதைதான், தி.மு.க.வின் அடிப்படை[6].  ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதை தான் திராவிட இனவாதம்[7].  அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாத கட்டுக் கதையாக தங்கள் கட்சியின் அடிப்படை கொள்கையாக வைத்துக் கொண்டு, யாருக்கோ பாடம் எடுத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர்[8]. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள், ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ மூலமே, நம்மை ஆண்டனர். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாகவே, 1916-ல் தமிழகத்தில், ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ உருவானது. இதுவே பின்னாளில், நீதிக் கட்சி, திராவிடர் கழகமாகி, திராவிட முன்னேற்றக் கழகமானது. தமிழகத்தில் நீதிக் கட்சி செல்வாக்கு பெறத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுதந்திரப் போராட்டமே நீர்த்துப் போனது.

பெரியாரை வைத்து உண்டாக்கிய கட்டுக் கதைகள்: வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதியார் தங்கள் வாழ்வை தியாகம் செய்து எழுப்பிய சுதந்திரத் தீயை, நீதிக்கட்சி தனி தமிழ்நாடு, திராவிட நாடு என்று பிரிவினை பேசி அணைத்தது. அதனால்தான், 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளை, கருப்பு தினமாக பெரியார் ஈ.வெ.ரா. அறிவித்தார். இதுதான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், தி.மு.கவினர் இப்போது பேசுவதில்லை. உயிருக்கும் மேலான நம் தாய் மொழியை, ‘காட்டுமிராண்டி மொழி’ என்றும், உலகமே வியக்கும் திருக்குறளை, ‘தங்க தட்டில் வைத்த மலம்’ என்று விமர்சித்தவர் பெரியார் ஈ.வெ.ரா. கீழ்வெண்மணியில், பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம் தேசத்தையே உலுக்கியபோது, பண்ணையார்களுக்கு ஆதரவாக நின்றவர் பெரியார் ஈ.வெ.ரா. தி.மு.க. ஆட்சியில் காவிரி நதி நீர் பிரச்னை, கச்சத் தீவை தாரை வார்த்தது என அவர்கள், சுய நலத்திற்காக, தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுத்த வரலாறுகளை தனி புத்தகமாகத்தான் வெளியிட வேண்டும். பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு யுனைஸ்கோ விருது கிடைத்ததாக, ஒரு கட்டுக்கதையை பரப்பி, அதனை பாடப் புத்தகத்திலும் இடம் பெறச் செய்தவர்கள்தான் தி.மு.க.வினர். இவையெல்லாம் தான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், இப்போது தி.மு.க.வினர் பேசுவதில்லை.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதை தான் திராவிட இனவாதம்‘ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு, By: பிரசாந்த் | Updated at : 28 Dec 2022 06:40 PM (IST), Published at : 28 Dec 2022 06:40 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/coimbatore/vanathi-srinivasan-accused-dravidian-racism-as-a-myth-created-by-the-british-93327

[3] தமிழ்.ஒன்.இந்தியா, திராவிட நாடு, பெரியார், கீழவெண்மணி.. சீமான் குரலில் முதல்வர் மு..ஸ்டாலினுக்கு பதில் சொன்ன வானதி!, By Mathivanan Maran Published: Wednesday, December 28, 2022, 17:53 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/bjp-mla-vanathi-srinivasan-replies-to-cm-mk-stalin-on-dravidam-491788.html

[5] தமிழ்.ஏசியாநெட், இதெல்லாம் கற்பனை கதை.. முதல்வர் ஸ்டாலின் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீங்க.. வானதி சீனிவாசன்..!, vinoth kumar, First Published Dec 29, 2022, 10:14 AM IST, Last Updated Dec 29, 2022, 10:16 AM IST

[6] https://tamil.asianetnews.com/politics/don-t-be-fooled-by-what-cm-stalin-says-vanathi-srinivasan-rnmyhh

[7] கூடல்.காம், தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்: வானதி சீனிவாசன்!, 2022 December 29.

[8] https://koodal.com/news/2022/12/29/dravidian-race-is-a-myth-contrived-by-the-british-says-vanathi-srinivasan/

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது (1)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியது (1)

திமுகமாடல்ஆரம்பித்துதிராவிட மாடலில்முடிந்தது: இந்திய வரலாற்று காங்கிரஸ் சென்னையில் 27-12-2022 ஆரம்பித்து நடந்ததை அந்த அளவுக்கு மற்றவர்களால் (emeritus professors, elite-eminent historians, JNU-AMU experts), குறிப்பாக ஊடகங்களால் பொருட்படுத்தப் படாமல், நடந்து முடிந்தது வியப்பாக இருந்தது. அதாவது, இந்த மாநாடு ஜே.என்.யூ [ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்], ஏ.எம்.யூ [அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்] போன்ற கம்யூனிஸ மற்றும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் உள்ளது மற்றும் அத்தகைய சித்தாந்தங்களைப் பின்பற்றும் சரித்திர விற்பன்னர்கள், வித்தகர்கள் மற்றும் பண்டிதர்களால் நிறைந்திருக்கும் என்பது அறிந்த விசயமே. ஆனால், திமுகவின் ஆதிக்கம் முதல் நாளிலேயே பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. தாம்பரம் வழிநெடுக, டிஜிடல் பேனரே வால்போஸ்டராக பல இடங்களில் ஒட்டப் பட்டிருந்தன. “சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய வரலாறு காங்கிரஸைத் துவக்கி வைக்க வரும் முதலமைச்சரே வருக,” என்ற சுவரொட்டிகள் இருந்தன. முன்னர் முரசொலியில் இதே வகையில் விலம்பரங்கள்” வெளியிடப் பட்டிடருந்தன. அதற்கு முன்னர், கல்லூரி முதல்வர் வில்சன் முதல்வரைப் பார்த்து வரவேற்றிருக்கிறார். அப்பொழுது, இக்கல்லூரி தயாரித்த வீடியோ, “திமுக-மாடல்” அல்லது “திராவிட மாடலில்” இருந்தது எனலாம். ஏனெனில், அவ்வீடியோ “உதய சூரியனில்லாரம்பித்து முடிகிறது[1].

திராவிட மாடலில்ஆரம்பித்து வைக்கப் பட்ட மாநாட்டில்ஆரியர்தொல்லைக்கு உன்டானது: 26-12-2022 மாலையிலிருந்து, 27-12-2022 வரை நாடெங்கிலும் இருந்து, பல மாநிலங்களிலிருந்து உறுப்பினர்கள் வந்து கொண்டிருந்தனர். என்ட்ரல், எழும்பூர், மீனம்பாக்கம் என்று அவரவர் வசதிக்கேற்றப் படி பஸ், ரெயில், விமானம் என்று பயணித்து வந்து சேர்ந்து கொன்டிருந்தனர். 27-12-2022 காலை, கல்லூரி வாசல், உள்வளாகம் மற்றும் அரங்கம் பாதுகாப்பு போலீசாரின் கட்டுப்பாட்டில் சென்றன. பல நூற்றுக் கணக்கான பேராசிரியர்கள், பேரளர்கள் (முதியவர், பெண்கள் உட்பட) உள்ளே அனுபப்படாமல் நிறுத்தப் பட்டனர். சுற்றி இன்னொரு வாயிலில் மூலமாக வரச் செய்தனர்[2]. பலர் வெளிமாநிலங்களிலிருந்து வந்து கொண்டிருந்ததால், தமது லக்கேஜுடன் சிரமப் பட்டனர். ஆட்டோ-டாக்ஸிகாரர்களுக்கு கொண்டாட்டம். கூடுதல் பணம் கேட்டு, நசசரித்துப் பிடுங்கிக் கொண்டனர். “இந்தி தெரியாது போடா,” என்றெல்லாம் சொல்லவில்லை, இந்தி பேசியே கறாராக வசூலித்து விட்டனர். அவர்களும், இதுதான் “திராவிட மாடல்’ என்றும் நினைத்திருக்கலாம். அரங்கத்திலும் ஏகப் பட்ட கெடுபிடிகள். உள்ளே சென்றவர்கள் வெளியே வரமுடியாது, உள்ளேயும் செல்ல முடியாது. ஒருவேளை கண்ணூர் போல ஏதாவது கலாட்டா ஆகிவிடும் என்று நினைத்தனரோ என்று தெரியவில்லை. இங்கு இர்பான் ஹபீப்பும் வரவில்லை[3].

பெயருக்கு அங்கிலத்தில் ஆரம்பித்து தமிழில் முழுமையாக படித்தது: சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.27) தொடங்கி வைத்தார்[4]. இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “It is my honour, to be among these great historians and inaugurate the 81st Annual Session of the Indian History Congress. After a gap of 26 years, the annual session of Indian History Congress is being held in Tamil Nadu[5]தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு, 1996-ஆம் ஆண்டு, இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாடு நடந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த அந்த மாநாட்டில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார்கள்[6]. இப்போது நடக்கும் இந்த மாநாட்டில், நான் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்[7]. இந்திய வரலாற்று காங்கிரசின் 81-ஆவது அமர்வை நடத்துவதற்கு, தமிழ்நாட்டைத் தேர்வு செய்தமைக்கு, நான் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்[8]. இதற்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடிய அனைவரையும் இந்த நேரத்தில் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்[9]. 1935-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வரலாற்று அமைப்பானது, 87 ஆண்டுகளைக் கடந்தும், வரலாறு படைத்துக் கொண்டு இருக்கிறது[10]. எந்த அமைப்பாக இருந்தாலும், அதனை உருவாக்குவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் கடினம்.

மதச்சார்பற்றஅறிவியல்பூர்வமான வரலாறு: தொடர்ச்சியாக இந்த அமைப்பின் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தவர்களின் ஆர்வத்தால், இது இத்தகைய மாபெரும் வளர்ச்சியையும் – தொடர்ச்சியையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உண்மையான வரலாற்றை – அறிவியல்பூர்வமான வரலாற்றை வடித்துத் தருவதுதான் இந்திய வரலாற்று காங்கிரசின் மிக முக்கியக் குறிக்கோளாக அமைந்துள்ளது. குறிப்பாக, மதச்சார்பற்ற – அறிவியல்பூர்வமான வரலாற்றை எழுதுவதை ஊக்குவித்து வருகிறீர்கள். பல தலைமுறைகளாக வரலாற்று ஆசிரியர்களை ஊக்குவிக்கும் அமைப்பாகவும், வரலாற்று உணர்வை ஏற்படுத்தி வரும் அமைப்பாகவும் இது விளங்கிக் கொண்டிருக்கிறது. ‘தத்துவ ஞானிகள் இதுவரை, உலகத்தைப் பற்றி, பல்வேறு முறைகளில் விளக்கம் சொல்லி வந்தார்கள். ஆனால் நாம், எப்படி அதை மாற்றி அமைப்பது என்று நினைப்பவர்கள்” – என்றார் பொதுவுடைமை ஆசான் காரல் மார்க்ஸ். இந்திய வரலாற்றுக் காங்கிரஸ் என்பது, வரலாற்று மாற்றத்திற்கு, சிந்தனை மாற்றத்திற்கு, அடித்தளம் அமைக்கும் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா?: D.D.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஏ.எல்.பாஷம், ராகுல் சாங்கிருத்தியாயன், தேவி பிரசாத், கே.பி.ஜெய்ஸ்வால் ஆகிய மிக மூத்த வரலாற்றாசிரியர்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்க, கேசவன் வேலுதத், இர்பான் அபீப் ஆகியோர் இந்த அமைப்பை வழிநடத்தி வருவது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இன்றைய காலத்தின் தேவை என்பது வரலாற்று உணர்வை ஊட்டுதல், அறிவியல் பார்வையை உருவாக்குதல். வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது[11]. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, சம்பளத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும்[12]. இவ்வாறெல்லாம் ஸ்டாலின் பேச்சினார், பேச்சைத் தொடர்ந்தார்.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] The 81st session of the Indian History Congress will be held in Madras Christian College, Tambaram, Chennai between 27th and 29th of December 2022.

[2] முன்பு அர்ஜின் சிங் வாரங்கல் மநாட்டிற்கு வந்தபோது, செய்த அடாவடித் தனத்தை விட அதிகமாக செய்தனர் எனலாம். இங்கு, நக்ஸலைட்டுகள் பாதிப்பு என்றதால் அவ்வாறு செய்யப் பட்டது. இங்கு என்னவென்று தெரியவில்லை.

[3]  திராவிட ஆரராய்ச்சிப் பேரவை – நாகநாதன், கே.பி. ஜகதீசன், சுப.வீரப் பாண்டியன், கருணாநந்தம் போன்றோர் முன்னரே சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.

[4] முழு பேச்சை, தமிழக அரசு செய்தி வெளியீடாக, இங்கிருந்து டவுன்லோட் செய்து படிக்கலாம்: https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr271222_2363_0.pdf

[5] தமிழ்.இந்து, வரலாற்றுத் திரிபுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின், செய்திப்பிரிவு, Published : 27 Dec 2022 01:37 PM, Last Updated : 27 Dec 2022 01:37 PM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/920591-m-k-stalin-speech-indian-history-congress.html

[7] பிபிசி.தமிழ், வரலாறை திரிக்கும் கதைகளை நம்பாதீர்கள்” – வரலாற்றுக் காங்கிரஸ் அமர்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?, 27 டிசம்பர் 2022

[8] https://www.bbc.com/tamil/articles/clj2r16jw1go

[9] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், CM Stalin Speech: ‘கற்பனை கதையை வரலாறு என்கிறார்கள்’ –முதல்வர் ஸ்டாலின் பேச்சு!, Stalin Navaneethakrishnan, 27 December 2022, 16:10 IST.

[10] https://tamil.hindustantimes.com/tamilnadu/tn-cm-stalin-participated-81th-indian-history-congress-conference-131672136209346.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, வரலாறு படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!, By Arsath Kan Published: Tuesday, December 27, 2022, 14:23 [IST]

[12] https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-stalin-s-speech-about-history-and-keezhadi-excavation-491567.html

‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற காணொளி வெளியீட்டு விழா – இந்திய சரித்திரம் உண்மையாக பாரதத்துவத்துடன் எழுதப் பட வேண்டிய முக்கியத்துவம்!

ஓகஸ்ட்8, 2022

‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற காணொளி வெளியீட்டு விழா – இந்திய சரித்திரம் உண்மையாக பாரதத்துவத்துடன் எழுதப் பட வேண்டிய முக்கியத்துவம்!

அசோக் குமார் குந்த்ரா, செயலாளர் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரி, விளக்கேற்றுகிறார்.

ஓலம்சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற காணொளி வெளியீட்டு விழா: ‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரியில் 7-08-2022 அன்று நடைபெற்றது[1]. ஏ.சி.சண்முகம், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக வேந்தர், அசோக் குமார் குந்த்ரா, செயலாளர் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரி, விநோத் பி. செல்வம், கரு. நாகரஜன், சென்டர் பார் சவுத் இன்டியன் ஸ்டெடீஸ் (Centre for South Indian Studies[2]), முதலியோர் கலந்து கொண்டனர். குமரேசன்[3] இந்த வீடியோ பற்றி அறிமுகம் செய்து, பின்னணியை விளக்கினார். பிறகு, ‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளியின் “ப்ரோமஸன்” (Promotion) வீடியோவும் காட்டப் பட்டது, பென்-ட்ரிவில் விற்கப் படும் இதன் விலை ரூ.500/- இந்த விடீயோ எடுத்தவர்-தொகுத்தவர் ஆனந்த் – இதைப் பற்றி சுருக்கமாக விளக்கினார். 12 நபர்கள் பேசிய வீடியோக்களைத் தொகுத்து, தேவையான இடங்களில் புகைப் படங்கள்-சித்திரங்கள், இசை முதலியவற்றை சேர்த்து, இந்த காணொலி தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த வீடியோவில் சரித்திரத் தகவல்களைப் பற்றி பேசியவர்கள்: கே. வி. ராமகிருஷ்ண ராவ், பிரபாகரன், பிரகாஷ், விஸ்வநாதன், முதலியோர். பிறகு இந்த வீடியோ எடுத்த குழு அங்கத்தினர், மற்ற எடிடிங், சித்திரம், முதலிய பணிகளை செய்தவர் அனைவருக்கும் நினைவு பரிசு கொடுக்கப் பட்டது. பிறகு, கல்லூரி செயலாளர் மற்றும் அமைச்சர் பேசினர். நன்றியுரையுடன் விழா முடிந்தது.

கலந்து கொண்டவர்கள்- மேடையிலிருந்து இடது பக்கம்
கலந்து கொண்டவர்கள்- மேடையிலிருந்து வலது பக்கம்
கலந்து கொண்டவர்கள்- மேடையிலிருந்து நடு பக்கம்
குமரேசனின் அறிமுகம்
காணொளி வெளியீடு
மத்திய அமைச்சர் பேசுகிறார்….

மத்திய அமைச்சர் பேசியது: இதில் கலந்து கொண்ட மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது[4]: “உலகின் தலை சிறந்த நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் .. சிதம்பரனார். அவரது தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி கொண்டு இருக்கிறார். நாடு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் இது ஆங்கிலேயர்கள் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும்[5]. இளைஞர் மத்தியில் அக்னிபத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னிபத் திட்டத்திற்கு பதிவு செய்து வருகின்றனர்[6]. அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும்[7]. ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு எப்படி இந்தியர்கள் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்தார்களோ, அதேபோல நாட்டின் 100-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும்[8]. 2047-ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமையை பெற்றிருக்கும்.. ,”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசோக் குமார் குந்த்ரா, பேசுகிறார்

பலவிதங்களில், பலநிலைகளில் நடக்கும் வேலை: 75ம் சுதந்திர விழா கொண்டாட்ட விழா ஆண்டாக, பலவித நிகழ்சிகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று மத்திய அரசு ஏற்பாடு செய்திள்ளது. இதற்கு நித்யுதவியும் அளித்து வருகிறது. இதனால், பல நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் பலவிதமாகக் கொண்டாடி வருகின்றன. அவற்றில் பலரின் பங்களிப்பு பலவிதங்களில், பலநிலைகளில் உள்ளது. பலருக்கு தெரிந்தும்-தெரியாத நிலை கூட ஏற்படலாம். ஏனெனில், பல வேலைகள் பலரால் செய்துத் தரப் படும் பொழுது, அவை வியாபார ரீதியிலும் மாறுகின்றன. அபொழுது, செய்பவர்கள் தனது வேலையை செய்து, கூலி, சம்பளம், பணம் வாங்கிக் கொள்கிறான், ஆனால், அவன், அந்த வேலையின் முடிவு அல்லது பயன்பாடு பற்றி கவலைப் படுவதில்லை. பல நேரங்களில், அது அவனுக்குத் தேவையும் இல்லை அல்லது இல்லாத நிலை ஏற்படுகிறது. 1000 பேனர்களை தயார் செய்து கொடு என்றால், மரச்சட்டம் தயாரிப்பவன், கான்வாஸ் துணி கிழிப்பவன், தைப்பவன், படம் வரைபவான் தன் வேலைகளை செய்து கூலி, சம்பளம், பணம் வாங்கி சென்று விடுகிறான். அதற்கு மேல் அவன் கவலைப் படுவதில்லை.

வீடியோ / காணொளி முன்னோட்ட அறிமுகம்

1857லிருந்து1947 வரை வசதிகள் இல்லாத காலத்தில் நடந்த போராட்டங்கள்: இப்பொழுது 2022ல், பலவித தொழில் நுட்பங்கள் உள்ள நிலையில், இந்த 75ம் சுதந்திர விழா கொண்டாட்ட விழா நடைபெறுகிறது. ஆனால், 1857லிருந்து, எந்த வசதியும் இல்லாத காலத்தில், நாடு முழுவதும் சுதந்திர உணர்வை மக்களுக்கு உண்டாக்கி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பலவித போராட்டங்களை நடத்திய தலைவர்களை, வீரர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதும் கோடி கணக்கான மக்களுக்கு செய்தி சென்றுள்ளது, மக்கள் ஒன்று திரண்டு போராடியிருக்கின்றனர். அதற்காக பாமர மக்கள், படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரர், என்று எந்த வேறுபாடும் இல்லாமல் உழைத்துப் போராடியுள்ளனர். வெள்ளையர்களின் அடக்குமுறைகளைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இந்த முக்கியமான அம்சத்தைக் கவனிக்க வேண்டும். இது தான் ஒட்டு மொத்த மக்களின் ஒருமித்த சுதந்திர பொராட்டம் ஆகும். அதில் சத்தியாகிரஹம், அஹிம்சை போன்றவை முக்கிய பங்கு வகித்தன. அவைக் கண்டு தான் வெள்ளையர்- ஆங்கிலேயர் பயந்தனர். பாரத சித்தாந்தம், சனாதனக் கொள்கைகள், இந்துமத சிறப்பு அவற்றில் வெளிப்பட்டன. மற்ற மதங்கள் தங்களது மதநம்பிக்கைகளை வைத்துக் கொண்டு போரிட்டன, மக்களைக் கொன்றன, அழிவை உண்டாக்கின. இன்றின் மீது மற்றது பழிபோட்டு குறை சொல்லிக் கொண்டன. ஆனால், பாரதத்தில் உண்மையான ஞானம் வேலை செய்தது.

பாரத சித்தாந்தம் வென்றது: பீரங்கிகள்-துப்பாக்கிக் குண்டுகள் முன்பு பயப்படாமல் நின்று வீரமரணம் எய்தினர். கர்மா சித்தாந்தம் கூட ஏசப் பட்டது. தியாகம், உயிர்தியாகம், புனிதபோர், என்றெல்லாம் பற்றவர்கள் பேசினாலும், பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய உண்மையான தியாகம், உயிர்தியாகம், புனிதபோர்- யுத்தத்தினை எங்கும், எப்பொழுதும், யாருக் கண்டதில்லை. இதனால் தான் அஞ்சி நடுங்கினர். அதிலும் வஞ்சகத்துடன் வேலை செய்து, இந்தியர்களைப் பிரிக்க பார்த்தனர். அதுதான், விடுதலை போராட்ட வீரர்களில் ஏற்பட்ட சிற்சில வேறுபாடுகள்………..இது தான் வெள்ளையர்கள் ஓட வித்திட்டன. இன்றும் வெள்ளையர்களின் அடிமைகள், கூலிகள், அடிவருடிகள் இந்தியாவை, இந்தியர்களை, இந்திய மதத்தினை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை குறைகூஈ வருகின்றன, விமர்சிக்கின்றன, சரித்திரத்தை மறைத்து, பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்நிலையில், நிச்சயமாக, பாரதத்தில் உண்மையான சரித்திரத்தை சொல்ல வேண்டிய அத்தியாவசியம், தேவை மற்றும் முக்கியத்துவம் உண்டாகியுள்ளது. இதைப் போன்ற முயற்சிகள் இன்னும் தேவையாகின்றன. இந்திய சரித்திரம் உண்மையாக பாரத்துவத்துடன் எழுதப் பட வேண்டிய முக்கியத்துவம் உள்ளது.

© வேதபிரகாஷ்

08-08-2022


[1] தினத்தந்தி, சுதந்திர வீரர்களின் வாழ்கை வரலாறு – ‘ஓலம்காணொளியை வெளியீட்டு அமைச்சர் எல். முருகன் உரை, By தந்தி டிவி 7 ஆகஸ்ட் 2022 7:12 PM.

[2] Centre for South Indian Studies (CSIS) is a public charitable trust established in Delhi, engaged in academic study, research and analysis of economic, social, historical and political developments, both past and contemporary. CSIS commissions scientific research on various subjects and topics pertaining to South India, directly by its researchers and funds studies of interests that conform to its aims and objectives. It also motivates academicians and students to take up new research initiatives to rework on conventional narratives on South India to enable understanding these topics scientifically. Apart from organising research programmes, CSIS also brings out publications periodically and carries out social awareness programmes. CSIS regularly organises lectures, debates, panel discussions and talks on various subjects related to South India. We also organise seminars and workshops, as part of our academic activity.https://csisindia.com/about/

[3] Kumaresan served in the advertising industry for over two decades. He is now the Centre Co-ordinator of CSIS Chennai operations.https://csisindia.com/associates/

[4] https://www.thanthitv.com/latest-news/life-history-of-freedom-fighters-olam-video-launched-by-minister-l-murugan-text-130092

[5] மாலைமலர், அக்னிபாத் திட்டத்தை வரவேற்கும் இளைஞர்கள்மத்திய இணை மந்திரி பேச்சு Byமாலை மலர். 8 ஆகஸ்ட் 2022 12:40 AM.

[6] https://www.maalaimalar.com/news/district/among-youth-welcome-to-agnibad-program-union-joint-minister-speech-496859

[7] நியூஸ்7.தமிழ்.லைவ், அப்துல் கலாம் கண்ட கனவுபடி இந்தியா வல்லரசாகும்எல்.முருகன், by Dinesh AAugust 7, 2022

[8] https://news7tamil.live/india-is-a-superpower-as-per-abdul-kalams-dream-l-murugan.html