புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ் ஆக நடந்து முடிந்த விதம் (2)
மாணவர்களிடம் அடாவடி வசூல்: மாணவர்களிடம் பணம் [delegate fees] வசூலிக்கப் பட்ட முறை பரிதாபகரமான நிலையை அடைந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், ஒருவரால் ரூ.3500/- செல்லுத்துவது என்பது இயலாத விசயமாகும். குறைந்த அளவில் தான் டெலிகேட்டுகள் கலந்து கொண்டனர். ஆய்வுக்கட்டுரைகள் கூட அதிகமாக வரவில்லை. 150 வந்ததாகச் சொல்லிக் கொண்டாலும், அவ்ற்றை சமர்ப்பிக்க வந்தனரா இல்லையா என்ற விவரமும் தெரியாது. அந்நிலையில், ஒவ்வோரு மாணவரிடமும் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டதும், அவர்கள் செல்லுத்த முடியாத நிலை ஏற்பட்டதும் வருத்ததிற்கு உகந்ததாக இருக்கிறது. இரண்டு நாட்கள் மாநாடு என்று சொல்லிக் கொண்டாலும், ஒன்றரை நாட்களிலேயே முடித்து விட்டனர். அந்நிலையில் இம்மாந்நாட்டிற்கு நிச்சயமாக லட்சங்களில் கொடையாக, நன்கொடையாக, ஸ்பான்சர்சிப் என்று வசூல் செய்திருப்பர். அந்நிலையில், மாணவர்களுக்கு ரூ 1000/- என்று கூட வசூலித்திருக்கலாம். ஆனால், விடாப்பிடியாக ரூ. 2500/- வசூலித்தது அதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஆய்வுக் கட்டுரை வாசிக்க வரும் மாணவர்கள் வாசித்து விட்டு, சான்றிதழைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவர். ஆகவே, ஒரூ இரவு தங்கினாலும், அவர்களால் அந்த அளவுக்கு செலவினம் ஏற்படாது.
600 சரித்திராசிரியர்களும், 200 மாணவர்களும்: இப்படித்தான் கலந்து கொள்வதாக, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” அறிவித்துக் கொண்டது. பிறகு, மாணவர்களுக்கு இவர்கள் என்ன சலுகை கொடுத்தனர் என்று தெரியவில்லை. ஒவ்வொரு தலைவர், உபதலைவர், போன்றோர் தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ள முயன்றனரே தவிர, மாநாட்டைப் பற்றிக் கவலைப் படவில்லை. கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த முறைகளில் கவனம் செல்லுத்துவதில்லை என்று அவர்களது சுய-விளம்பர யுக்திகளில் வெளிப்பட்டது. பல மாணவ உறுப்பினர்கள் வராத அளவுக்கு கெடுபிடிகள் செய்யப் பட்டன[1]. ஆரம்பத்திலேயே இரண்டு-மூன்று குழுக்கள் இதில் உருவாகி விட்டதால், இப்பொழுதுள்ள ஆதிக்கக் குழு மற்றவர்களை அமுக்கி ஆதிக்கம் செல்லுத்தப் பார்க்கிறது. இதில், மாணவர்கள், உண்மையான ஆராய்ச்சியாளர்கள் பலிகடா ஆகின்றனர். ஸ்டேஜ் மேலே நின்று கொண்டு போட்டோ செல்பி எடுத்துக் கொள்வது ஓன்ற விசயங்களில் அதிகமாகவே ஆய்வம் காட்டியது புலப் பட்டது. ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்கும் அறைகளில் 10-20 பேர் தான் இருந்தனர். அவர்களும் பெப்பரைப் படித்து விட்டு ஓடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது போல தெரிந்தது. அந்தந்த துணைப்பிரிவு தலைவரும் அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
“புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” உருவான கதை: ஏற்கெனவே குறிப்பிட்டது போல, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” “புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ்” ஆக மாறி, அதிலும் குறுகி, சிறுத்து விட்டது போலிருக்கிறது. “புதுச்சேரி வரலாற்றுப் பேரவை,” என்று ஒரு அம்மைப்பு ஏற்கெனவே இயங்கி வருகின்றது[2]. விவரித்ததில், திண்டுக்கல்லில், தென்னிந்திய வரலாற்று மாநாடு நடந்த பொழுது, சில குழுக்களில் ஏற்பட்ட அதிருப்தி, தேர்தலில் நடந்த முறைகேடுகள், முதலியவற்றை தட்டிக் கேட்ட போது நடந்த விவகாரங்கள் இவற்றால், சிலர் “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” துவங்க முடிவு செய்தனராம்[3]. “தேர்தல்” என்றால் அவர்களது நிர்வாகத்திற்கு நடத்தப் படுவது, ஆனால், அதில் கூட, அரசியல்வாதிகளைப் போன்று ஓட்டுகளை முறையாக போடாதது, எண்ணிக்கையில் மோசடி செய்வது, சண்டை போட்டுக் கொள்வது, டித்துக் கொள்ளும் நிலைக்குச் செல்வது என்றெல்லாம் நடக்கும் பொழுது அவர்களது நிலையை அறிந்து கொள்ளலாம்[4]. இது ஏதோ ஒரு பெரிய அமைப்பு போலவும், இதன் தலைவர் சரித்திரத்தையே ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்கி விட்டது போலவும் நடந்து கொள்கின்றனர்[5]. இதைப் பற்றி ஏற்கெனவே விவரமாக எழுதி பதிவு செய்துள்ளேன்[6]. அதற்காக, இந்திய வரலாற்று பேரவை இதர மாநாடுகள் நடந்த போது, அங்கெல்லாம் சென்று, இதைப் பற்றி விளக்கி, உறுப்பினர்களை சேர்த்ததாகத் தெரிகின்றது.
வரலாற்றுப் பேரவைகளிடம் ஒற்றுமை இல்லை: ஏற்கெனவே சரித்திராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களிடையே ஒற்றுமை இல்லாதலால், இந்திய வரலாற்று பேரவை உடைந்து இந்திய கலை மற்றும் வரலாறு பேரவை, தென்னிந்திய வரலாற்று பேரவை, தமிழ்நாடு வரலாற்று பேரவை என பல மாநில “வரலாற்று பேரவைகள்” உருவாகி விட்டன. ஆகவே “உலக” என்று அடைமொழி வைத்துக் கொண்டாலும், குறுகிய, தன்னலம் கொண்ட ஆட்களால், இதுவும் சுறுங்கி விட்டது. மேலும் இப்பொழுதெல்லாம் சரித்திரம் என்றால் யாரும் மதிப்பதில்லை. அதனால், இவர்கள் அரசியலை கலந்து, அரசியல் கட்சிகளுக்கு ஜால்றா போட்டுக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டு வருகின்றனர். அவ்வாறுதான், இப்பொழுது, தென்னிந்திய வரலாற்று பேரவை, கேரளத்தவர்களின் ஆதிக்கத்திற்கு சென்று விட்டது. இதனால், அதனை “கேரள வரலாற்று பேரவை” என்று கூட சொல்லலாம். ஏற்கெனவே அதில் பிரச்சினை இருந்ததால், நீதிமன்றம் வரை சென்று மீட்டு வந்துள்ளது. இருப்பினும் அவர்களிடையே ஒற்றுமை இல்லை. சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவர். இல்லையென்றால் சண்டை ஆரமித்து விடும்.
ஆரம்ப விழா முதல் நிறைவு விழா வரை சுணக்கம் தான்: ஆரம்ப விழாவுக்கு காலாப்பேட்டை எம்.எல்.ஏ, ஒரு அமைச்சர் மற்றும் சபாநாயகர் வந்திருந்தனர். நிறைவு விழாவிற்கும் எந்த விஐபியும் வரவில்லை. இருந்தவர்களும் சென்று விட்டார்கள் போலும். 40-50 பெயர்கள் அழைப்பிதழ், இணைதளங்களில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் காணவில்லை, அதாவது வரவில்லை. இவர்களே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்கள். மாநாட்டிற்கு சேவை செய்பவர்களைப் பாராட்டி, நினைவு பரிசு வழங்கப் பட்டது. இருப்பினும், பலரை மறந்து விட்டனர் என்பதை அவர்களுக்கேப் புரியும் வண்ணம், மற்றவர்கள் இல்லாதது எடுத்துக் காட்டியது. துவக்க நிகழ்ச்சியில் இருந்த கூட்டமும் இல்லை. தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே சென்று விட்டனர். அந்த அளவுக்கு அவசர-அவசரமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டு முடித்து விட்டது போன்று தெரிந்தது. மதிய உணவுடன் முடித்த்க் கொண்டதால், இரவு உணவு செலவும் மிச்சம் என்று நினைத்திருப்பர்.
சுயநலம், விருப்பு-வெறுப்பு நீங்கி செயல்பட்டால் தான் அமைப்பு வளரும், நிலைக்கும்: ஆரம்பநிலையிலே இத்தகைய சுயநலம், தனிமனித விருப்பு-வெறுப்பு போன்றவை, சரித்திராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களிடம் இருப்பது திகைப்பாக இருக்கிறது. ஏற்கெனவே சரித்திர பாடத்திற்கு முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில், இவர்களது இத்தகைய நடத்தைகளும் வருத்த அளிப்படாக உள்ளது. இப்படியே தொடர்ந்தால், இந்த அமைப்புகள் எல்லாம் கூடிய சீக்கிரத்தில், நடைபெறா நிலைக்குச் சென்று மறைந்து விடும் போலிருக்கிறது. ஒரு சொசைடி, சங்கம் என்று பதிவு செய்து கொண்டு தான் இவை இயங்கி வருகின்றன. அந்நிலையில் உற்ப்பினர்களின் நலன்களை கண்டுகொள்ளாமல், தங்களுக்கு விளம்பரம் தேடும் முறைகளில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால், அவர்களுக்கு லாபம் கிடைக்குமே தவிர, உறுப்பின்னர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே, முதலில் இவ்ர்கள் தங்களைத் திருத்தி, மாறீக் கொள்ள வேண்டும்.
© வேதபிரகாஷ்
11-09-2023
[1] குறிப்பிட்ட கெயிட் / எச்.ஓ.டி என்று அடையாளம் காணப்பட்டு, நடத்தப் பட்டதாக மாணவர்கள் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டார்கள். உண்மையில் மாணவர்களுக்கும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிகிறது.
[2] புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, https://www.facebook.com/PuducherryHistoricalCouncil/
[3] வேதபிரகாஷ், 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1), ஆகஸ்ட் 30, 2022.
[4] https://indianhistoriography.wordpress.com/2022/08/30/south-indian-history-congress-session-held-at-tindigul/
[5] வேதபிரகாஷ், 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1), ஆகஸ்ட் 30, 2022.
[6] https://indianhistoriography.wordpress.com/2022/08/30/south-indian-history-congress-tindugal-session-mismanaged-and-not-handled-properly/