வரலாற்றுவரைவியலில் சித்தாந்தங்கள் சரித்திர உண்மைகளை மறைக்கின்றன. சரித்திர முறையியலில் உண்மைகளே மறுக்கப் படுகின்றன. அந்நிலையில், உலகத்திலேயே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது இந்திய சரித்திரம் தான்
புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ் ஆக நடந்து முடிந்த விதம் (2)
மாணவர்களிடம் அடாவடி வசூல்: மாணவர்களிடம் பணம் [delegate fees] வசூலிக்கப் பட்ட முறை பரிதாபகரமான நிலையை அடைந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், ஒருவரால் ரூ.3500/- செல்லுத்துவது என்பது இயலாத விசயமாகும். குறைந்த அளவில் தான் டெலிகேட்டுகள் கலந்து கொண்டனர். ஆய்வுக்கட்டுரைகள் கூட அதிகமாக வரவில்லை. 150 வந்ததாகச் சொல்லிக் கொண்டாலும், அவ்ற்றை சமர்ப்பிக்க வந்தனரா இல்லையா என்ற விவரமும் தெரியாது. அந்நிலையில், ஒவ்வோரு மாணவரிடமும் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டதும், அவர்கள் செல்லுத்த முடியாத நிலை ஏற்பட்டதும் வருத்ததிற்கு உகந்ததாக இருக்கிறது. இரண்டு நாட்கள் மாநாடு என்று சொல்லிக் கொண்டாலும், ஒன்றரை நாட்களிலேயே முடித்து விட்டனர். அந்நிலையில் இம்மாந்நாட்டிற்கு நிச்சயமாக லட்சங்களில் கொடையாக, நன்கொடையாக, ஸ்பான்சர்சிப் என்று வசூல் செய்திருப்பர். அந்நிலையில், மாணவர்களுக்கு ரூ 1000/- என்று கூட வசூலித்திருக்கலாம். ஆனால், விடாப்பிடியாக ரூ. 2500/- வசூலித்தது அதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஆய்வுக் கட்டுரை வாசிக்க வரும் மாணவர்கள் வாசித்து விட்டு, சான்றிதழைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவர். ஆகவே, ஒரூ இரவு தங்கினாலும், அவர்களால் அந்த அளவுக்கு செலவினம் ஏற்படாது.
600 சரித்திராசிரியர்களும், 200 மாணவர்களும்: இப்படித்தான் கலந்து கொள்வதாக, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” அறிவித்துக் கொண்டது. பிறகு, மாணவர்களுக்கு இவர்கள் என்ன சலுகை கொடுத்தனர் என்று தெரியவில்லை. ஒவ்வொரு தலைவர், உபதலைவர், போன்றோர் தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ள முயன்றனரே தவிர, மாநாட்டைப் பற்றிக் கவலைப் படவில்லை. கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த முறைகளில் கவனம் செல்லுத்துவதில்லை என்று அவர்களது சுய-விளம்பர யுக்திகளில் வெளிப்பட்டது. பல மாணவ உறுப்பினர்கள் வராத அளவுக்கு கெடுபிடிகள் செய்யப் பட்டன[1]. ஆரம்பத்திலேயே இரண்டு-மூன்று குழுக்கள் இதில் உருவாகி விட்டதால், இப்பொழுதுள்ள ஆதிக்கக் குழு மற்றவர்களை அமுக்கி ஆதிக்கம் செல்லுத்தப் பார்க்கிறது. இதில், மாணவர்கள், உண்மையான ஆராய்ச்சியாளர்கள் பலிகடா ஆகின்றனர். ஸ்டேஜ் மேலே நின்று கொண்டு போட்டோ செல்பி எடுத்துக் கொள்வது ஓன்ற விசயங்களில் அதிகமாகவே ஆய்வம் காட்டியது புலப் பட்டது. ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்கும் அறைகளில் 10-20 பேர் தான் இருந்தனர். அவர்களும் பெப்பரைப் படித்து விட்டு ஓடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது போல தெரிந்தது. அந்தந்த துணைப்பிரிவு தலைவரும் அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
“புதுச்சேரிஉலகவரலாற்றுகாங்கிரஸ்,” உருவானகதை: ஏற்கெனவே குறிப்பிட்டது போல, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” “புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ்” ஆக மாறி, அதிலும் குறுகி, சிறுத்து விட்டது போலிருக்கிறது. “புதுச்சேரி வரலாற்றுப் பேரவை,” என்று ஒரு அம்மைப்பு ஏற்கெனவே இயங்கி வருகின்றது[2]. விவரித்ததில், திண்டுக்கல்லில், தென்னிந்திய வரலாற்று மாநாடு நடந்த பொழுது, சில குழுக்களில் ஏற்பட்ட அதிருப்தி, தேர்தலில் நடந்த முறைகேடுகள், முதலியவற்றை தட்டிக் கேட்ட போது நடந்த விவகாரங்கள் இவற்றால், சிலர் “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” துவங்க முடிவு செய்தனராம்[3]. “தேர்தல்” என்றால் அவர்களது நிர்வாகத்திற்கு நடத்தப் படுவது, ஆனால், அதில் கூட, அரசியல்வாதிகளைப் போன்று ஓட்டுகளை முறையாக போடாதது, எண்ணிக்கையில் மோசடி செய்வது, சண்டை போட்டுக் கொள்வது, டித்துக் கொள்ளும் நிலைக்குச் செல்வது என்றெல்லாம் நடக்கும் பொழுது அவர்களது நிலையை அறிந்து கொள்ளலாம்[4]. இது ஏதோ ஒரு பெரிய அமைப்பு போலவும், இதன் தலைவர் சரித்திரத்தையே ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்கி விட்டது போலவும் நடந்து கொள்கின்றனர்[5]. இதைப் பற்றி ஏற்கெனவே விவரமாக எழுதி பதிவு செய்துள்ளேன்[6]. அதற்காக, இந்திய வரலாற்று பேரவை இதர மாநாடுகள் நடந்த போது, அங்கெல்லாம் சென்று, இதைப் பற்றி விளக்கி, உறுப்பினர்களை சேர்த்ததாகத் தெரிகின்றது.
வரலாற்றுப்பேரவைகளிடம்ஒற்றுமைஇல்லை: ஏற்கெனவே சரித்திராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களிடையே ஒற்றுமை இல்லாதலால், இந்திய வரலாற்று பேரவை உடைந்து இந்திய கலை மற்றும் வரலாறு பேரவை, தென்னிந்திய வரலாற்று பேரவை, தமிழ்நாடு வரலாற்று பேரவை என பல மாநில “வரலாற்று பேரவைகள்” உருவாகி விட்டன. ஆகவே “உலக” என்று அடைமொழி வைத்துக் கொண்டாலும், குறுகிய, தன்னலம் கொண்ட ஆட்களால், இதுவும் சுறுங்கி விட்டது. மேலும் இப்பொழுதெல்லாம் சரித்திரம் என்றால் யாரும் மதிப்பதில்லை. அதனால், இவர்கள் அரசியலை கலந்து, அரசியல் கட்சிகளுக்கு ஜால்றா போட்டுக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டு வருகின்றனர். அவ்வாறுதான், இப்பொழுது, தென்னிந்திய வரலாற்று பேரவை, கேரளத்தவர்களின் ஆதிக்கத்திற்கு சென்று விட்டது. இதனால், அதனை “கேரள வரலாற்று பேரவை” என்று கூட சொல்லலாம். ஏற்கெனவே அதில் பிரச்சினை இருந்ததால், நீதிமன்றம் வரை சென்று மீட்டு வந்துள்ளது. இருப்பினும் அவர்களிடையே ஒற்றுமை இல்லை. சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவர். இல்லையென்றால் சண்டை ஆரமித்து விடும்.
ஆரம்பவிழாமுதல்நிறைவுவிழாவரைசுணக்கம்தான்: ஆரம்ப விழாவுக்கு காலாப்பேட்டை எம்.எல்.ஏ, ஒரு அமைச்சர் மற்றும் சபாநாயகர் வந்திருந்தனர். நிறைவு விழாவிற்கும் எந்த விஐபியும் வரவில்லை. இருந்தவர்களும் சென்று விட்டார்கள் போலும். 40-50 பெயர்கள் அழைப்பிதழ், இணைதளங்களில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் காணவில்லை, அதாவது வரவில்லை. இவர்களே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்கள். மாநாட்டிற்கு சேவை செய்பவர்களைப் பாராட்டி, நினைவு பரிசு வழங்கப் பட்டது. இருப்பினும், பலரை மறந்து விட்டனர் என்பதை அவர்களுக்கேப் புரியும் வண்ணம், மற்றவர்கள் இல்லாதது எடுத்துக் காட்டியது. துவக்க நிகழ்ச்சியில் இருந்த கூட்டமும் இல்லை. தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே சென்று விட்டனர். அந்த அளவுக்கு அவசர-அவசரமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டு முடித்து விட்டது போன்று தெரிந்தது. மதிய உணவுடன் முடித்த்க் கொண்டதால், இரவு உணவு செலவும் மிச்சம் என்று நினைத்திருப்பர்.
சுயநலம், விருப்பு-வெறுப்பு நீங்கி செயல்பட்டால் தான் அமைப்பு வளரும், நிலைக்கும்: ஆரம்பநிலையிலே இத்தகைய சுயநலம், தனிமனித விருப்பு-வெறுப்பு போன்றவை, சரித்திராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களிடம் இருப்பது திகைப்பாக இருக்கிறது. ஏற்கெனவே சரித்திர பாடத்திற்கு முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில், இவர்களது இத்தகைய நடத்தைகளும் வருத்த அளிப்படாக உள்ளது. இப்படியே தொடர்ந்தால், இந்த அமைப்புகள் எல்லாம் கூடிய சீக்கிரத்தில், நடைபெறா நிலைக்குச் சென்று மறைந்து விடும் போலிருக்கிறது. ஒரு சொசைடி, சங்கம் என்று பதிவு செய்து கொண்டு தான் இவை இயங்கி வருகின்றன. அந்நிலையில் உற்ப்பினர்களின் நலன்களை கண்டுகொள்ளாமல், தங்களுக்கு விளம்பரம் தேடும் முறைகளில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால், அவர்களுக்கு லாபம் கிடைக்குமே தவிர, உறுப்பின்னர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே, முதலில் இவ்ர்கள் தங்களைத் திருத்தி, மாறீக் கொள்ள வேண்டும்.
[1] குறிப்பிட்ட கெயிட் / எச்.ஓ.டி என்று அடையாளம் காணப்பட்டு, நடத்தப் பட்டதாக மாணவர்கள் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டார்கள். உண்மையில் மாணவர்களுக்கும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிகிறது.
புதுச்சேரிஉலகவரலாற்றுகாங்கிரஸ்: “உலக வரலாற்று காங்கிரஸ்” புதுச்சேரியில் குறுகி விட்ட நிலைதான் தென்படுகிறது. புதுச்சேரியின் வரலாற்று பின்னணியை விளக்கும் வகையில், இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[1]. உண்மையில், “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” [Puducherry World Histoy Congress, PWHC] என்ற அமைப்பு, உலக சரித்திரத்தை ஆய்வோம் என்றுதான் ஆரம்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால், இவ்வாறு செய்தி வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது[2]. இதன், ஆலோசனை கூட்டம், தாகூர் அரசு கல்லுாரி வளாகத்தில் 06-09-2023 அன்று நடந்தது[3]. அமைப்பின் பொதுச் செயலரான பேராசிரியர் சந்தீப் குமார் தாசரி தலைமை தாங்கினார்[4]. நிர்வாகிகள், இரண்டு நாள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கினர். தினமலர் மற்றும் ஏதோ ஒரு உள்ளூர் ஊடகத்தில் மட்டும் இதைப் பற்றிய செய்து வெளிவந்துள்ளது. மற்ற ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை போலும்.
சரித்திரப் பாடம், வரலாறு கல்வி முதலியவற்றிற்கு மவுசு குறைந்து வருகிறது: இப்பொழுதெல்லாம் சரித்திர பாடத்தை யாரும் கண்டுகொள்வதில்லை எனலாம். ஏனெனில், அதைப் படித்து என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், பெரும்பாலான பல்கலைக் கழகங்களில், இத்துறை மூடப் பட்டு வருகிறது. மேலும், சேரும் எண்ணிக்கை குறைவதுடன், போதிக்கும் ஆசிரியர்களும் குறைந்து வருகின்றனர். இந்நிலையில், சரித்திர மாநாடு, கருத்தரங்கம் என்றெல்லாம்நடத்தினால் யார் வருவார்கள் என்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக, சுற்றுலா போல, ஊரைச் சுற்ரிப் பார்க்க கூட்டம் வருவது சகஜமாக இருந்தது. ஆனால், இப்பொழுதெல்லாம், கலந்து கொள்ள ரூ 3000/-முதல் ரூ 5000/- வரை வசூலிக்கப் படுவதால், அத்தகைய கூட்டமும் குறைந்து விட்டது. அந்நிலையில், உண்மையில் ஆராய்ச்சி, கட்டுரை வாசிப்பு என்று வருவது சிலரே. இருப்பினும், ஓய்வு பெற்ற சரித்திராசிரியர்கள் முதலியோர்களுக்கு இது ஒரு கிளப் போன்றுசெயல்படுகிறது. வருடத்திற்கு மூன்று நாட்கள் வந்து ஜாலியாக தங்கி, பழைய நண்பர்களைப் பார்த்து செல்ல வசதியாக இருக்கிறது.
மாநாடுபற்றியவிவரம்: பின், வரலாற்று காங்கிரசின் பொதுச் செயலர் சந்தீப் தாசரி அளித்த பேட்டி: “புதுச்சேரிக்குசெழுமையானவரலாற்றுபின்னணிஉள்ளது. புதுச்சேரியின்கலாசாரமும்தனித்துவம்வாய்ந்தது. புகழ்பெற்றஅரவிந்தர்ஆசிரமம், ஆரோவில்உள்ளிட்டவைகள்இங்குஅமைந்துள்ளன. மேலும், பண்டையவாணிபதொடர்புக்கும், கடல்வழிவணிகத்துக்கும்சாட்சியாகவிளங்கும்அரிக்கமேடுபுதுச்சேரியில்அமைந்துள்ளது. புதுச்சேரியின்வரலாற்றைஉலகளவில்கொண்டுசெல்லும்நோக்கத்தில், உலகவரலாற்றுகாங்கிரஸ்கடந்தாண்டுஅக்டோபரில்துவங்கப்பட்டது. இந்நிலையில், அரசின்சுற்றுலாத்துறைமற்றும்புதுச்சேரிபல்கலைக்கழகசுற்றுலாபடிப்புகள்துறையுடன்இணைந்து, வரும் 9, 10 ஆகியதேதிகளில்மாநாட்டுக்குஏற்பாடுசெய்துள்ளோம். புதுச்சேரிபல்கலையில்நடக்கும்இந்தமாநாட்டில்நாடுமுழுதும்இருந்தும், உலகநாடுகளில்இருந்தும்வரலாறுசார்ந்தஅறிஞர்கள், பேராசிரியர்கள் 600 பேரும், வரலாற்றுதுறைமாணவர்கள் 200 பேரும்கலந்துகொள்கின்றனர். மாநாட்டை, பல்கலைதுணைவேந்தர்குர்மீத்சிங்துவக்கிவைக்கிறார். பழங்காலஉலகம், இடைக்காலஉலகம், நவீனகாலஉலகம், இந்தியாமற்றும்அயல்நாட்டுசமகாலவரலாறு, கடல்சார்உலகம், உலகசுற்றுலாஆகியதலைப்புகளில்அறிஞர்கள்பேசுகின்றனர். 150 ஆய்வுக்கட்டுரைகளும்சமர்ப்பிக்கப்படஉள்ளன,” இவ்வாறு அவர் கூறினார். ஆக, இவரும் இவ்வாறு குறுக்கி விளக்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
09-09-2023 அன்றுஇம்மாநாடுதுவக்கிவைக்கப்பட்டது. குறிப்பிட்டது போல, கவர்னர், முதலமைச்சர் என்றெல்லாம் யாரும் வரவில்லை. உள்ளூர் காலாப்பேட்டை எம்.எல்.ஏ மற்றும் சபாநாயகர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இவ்விவரமும் அந்த எம்.எல்.ஏ இணைதளத்திலிருந்து அறியப் படுகிறது. போதிய கூட்டமும் இல்லை. விசாரித்த போது, இந்த அமைப்பில் ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது. ஏற்கெனவே “புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ்” [Pucherry History Congress, PHC] என்று ஒரு அமைப்பு செயல்பட்டு வந்தது தெரிகிறது. ஆனால், ஏதோ காரணங்களுக்காக இப்பொழுது செயல்படவில்லை. மாற்றாக, இன்னொரு அமைப்பு ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதே பெயரை உபயோகிக்காமல், இவ்வாறு, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” என்று டாம்பீகமாக பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது. ஆனால், உன்மையில் வெளிநாட்டவர் யாரும் வரவில்லை, சுற்றுலாவுக்கு வந்தவர்களை, மாநாட்டுக்கு வந்தவர்கள் போன்று அறிவித்துள்ளனர். புதுச்சேரிக்கு சாதாரணமாக அயல்நாட்டவர் வந்து செல்வது சகஜம் தான். அதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
இந்தியாவில் “உலகவரலாற்றுக்காங்கிரஸின்” பரபரப்பானவிசயமானது: பங்கேற்கும் பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அமர்வுகள் என்று வைத்துக் கொன்உ, “உலக வரலாற்றுக் காங்கிரஸை” உலக அளவில் நடத்தலாம், இதில். கடந்த 100 ஆண்டுகளாக வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்கேற்புடன் “சர்வதேச” மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்போது, இது ஒன்று அல்லது சில NRIகள் பங்கேற்கும் நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது, உறுகியுள்ளது. அவர்கள் தங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடும், அதை இங்கே விவரிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அத்தகைய நபர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், உள்ளூர் கூட்டத்தை கூட அத்தகைய “சர்வதேச மாநாட்டிற்கு” மாற்றுவதற்கும் வழிகள் காணப்படுகின்றன. சென்னையில், மூன்று நட்சத்திர ஹோட்டலில் பல தலைப்புகளில் பல “சர்வதேச மாநாடுகளை” நடத்தும் குழுக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கின்றன. இதுபோன்ற பல “சர்வதேச,” “உலகளாவிய,” “கண்டங்களுக்கு இடையேயான,” “உலகளாவிய” போன்றவை தோன்றி மறைந்தன. எனவே, ஆரம்பிக்கப் பட்ட தமிழ்நாடு உலக வரலாற்று மாநாடு, ஆந்திரப் பிரதேச உலக வரலாற்று மாநாடு, தெலுங்கானா உலக வரலாற்று மாநாடு, கர்நாடகா உலக வரலாற்று மாநாடு, கேரள உலக வரலாற்று மாநாடு, ஒடிஷா உலக வரலாற்று மாநாடு போன்றவற்றின் எண்ணம் குறித்து ஆச்சரியப்பட முடியாது. சமீபகாலமாக, “உலகத் தமிழ் மாநாடு” போன்றவை பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. எனவே, ஒருவர் பேசுவது, செய்தது, நடப்பது பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும்.
இதுபொருளாதாரநடவடிக்கைகள்மற்றும்நுகர்வோர்கொண்டஎல்பிஜிஉலகம்: பொதுமக்கள் அல்லது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படும் போது, இயற்கையாகவே, அவர்கள் விலை மற்றும் தரத்தைப் பார்க்கிறார்கள். உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் “பொருட்கள் மற்றும் சேவைகளை” சந்தையில் கொட்டலாம், ஆனால் “நுகர்வோர்” தமது விருப்பத்திற்கு-தேவௌக்கு ஏற்ப வாங்கலாம் அல்லது வாங்காமல் இருக்கலாம், இருப்பினும் வாங்குபவர்களும் விற்பவர்களும் தங்கள் வணிகத்தைச் செய்கிறார்கள். எந்தவொரு நுகர்வோரும், “நான் 2,000, 3,000 அல்லது 5,000 ரூபாய் செலுத்தி, பயணத்திற்கும் மற்ற செலவுகளுக்கும் செலவழித்தால், அத்தகைய மதிப்புக்கு ஈடாக என்ன கிடைக்கும்?” என்று நினைப்பார்கள். நுகர்வோர் பெறவில்லை என்றால், அவர் ஏன் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்? எனவே, வரலாற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் நுகர்வோர் என்றால், நிச்சயமாக, அவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு செலுத்தியதை திரும்பப் பெற வேண்டும். மேலும், இங்கு, ஸ்பான்சர்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் லட்சங்கள் பெறப்படுகின்றன, எனவே, சேகரிக்கப்பட்ட பிரதிநிதி கட்டணத்தில் இருந்து அமைப்பாளர்கள் செலவிடுகிறார்கள் என்று யாரும் நினைக்க முடியாது. உண்மையில், பெறப்பட்ட லட்சக்கணக்கான நிதியில், அவர்கள் பிரதிநிதி கட்டணத்தை குறைக்கலாம்.
ஏறக்குறைய 100 உறுப்பினர்களுக்குபிரதிநிதிகட்டணவிலக்குகிடைக்கும், என்பதால், மற்றவர்கள்இலவசசவாரிக்குஅழைத்துச்செல்லப்படுவார்களா?: ஏற்கனவே “ஜம்போ சைஸ்” செயற்குழுவில் சுமார் 100 நபர்கள் இருக்கிறார்கள். உண்மையில் 100 உறுப்பினர்களுடன், படிப்பு-ஆராய்ச்சி, கல்வி ரீதியாகவும் ஒரு மாநாட்டை நடத்தலாம். இங்கு, பிரதிநிதிக் கட்டணமாக ரூ.100 கொடுப்பார்களா என்பது தெரியவில்லை. 3,500 அல்லது இல்லையா, அப்படியானால், ஒருவர் சிந்திக்க வேண்டும், அவர்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் தேவையில்லை, அவர்களில் 90% பேர் பார்வைக்காக வருகிறார்கள், மீதமுள்ள 10% பேர் ஆய்வுக்கட்டுரைகளில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் வாசித்து முடிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள். மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்குள் ஆய்வுக் கட்டுரையை முடித்து விட்டு, பீச், ரிசார்ட், கோவில் மற்றும் பலவற்றிற்குச் சென்று மகிழத் தான் சமயம் பார்ப்பார்கள். எனவே, கல்வி சாரா செயல்பாடுகளை விட, கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சிலபஸ் குறைப்பு-அதிகரிப்பு போன்றவை சாதாரண விசயங்கள்: “என்சிஇஆர்டி நிபுணர்களைக் கொண்ட பெரிய அமைப்பு. என்சிஇஆர்டி எந்த மாற்றங்களைச் செய்தாலும் அது பொதுவாக கல்வி அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகின்றன. வரலாற்றில் யாரேனும் தனது சொந்த சித்தாந்தத்தை வைத்தால் அது அகற்றப்பட வேண்டும். ஆனால் முகலாய வரலாறு உலகளாவிய வரலாறு, அதை முழுமையாக அகற்ற முடியாது. அது சீராக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடும்,” என்று பாஜகவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் முன்னாள் என்சிஇஆர்டி தலைவர் ஜே.எஸ்.ராஜ்புத் கூறினார். “வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பகுதிகள் விட்டுப்போய்விட்டனவா என்று ஆராயப்படுகிறது. முகலாயர் கால வரலாறு அதிகம் கற்பிக்கப்பட்டது என்று நானும் நினைக்கிறேன். முகலாயர் காலத்தில் மட்டுமே இந்தியா இருந்தது, அதைத் தவிர வேறெப்போதும் இருந்ததில்லை என்று அதை படிக்கும்போது தோன்றும். இப்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் புத்தகங்களில் இவை அனைத்தும் கவனிக்கப்படுகின்றன,’என்றார் அவர்.
இடதுசாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அவர்களின் பழமைவாதம்: முகலாயர்கள் இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய அங்கம், அவர்களை புத்தகங்களில் இருந்து நீக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக குறைக்க முடியும் என்று ஜே.எஸ்.ராஜ்புத் கருதுகிறார்.”1970 க்குப் பிறகு, இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் அமைப்புகளில் செல்வாக்கு பெற்றனர். இந்த செல்வாக்கைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று 1999 மற்றும் 2004 க்கு இடையில் NCERT தலைவராக இருந்த ஜேஎஸ் ராஜ்புத் குறிப்பிட்டார். இந்த வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான பாடம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. “எனது பதவிக்காலத்திலும் புத்தகங்களை சீராக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் அந்த நேரத்தில் இறுதி முடிவை புத்தகத்தின் எழுத்தாளர்களிடம் விட்டுவிட்டோம். அவர்கள் மாற்றத்திற்கு தயாராக இல்லை. பின்னர் புதிய எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.” என்றார் அவர்.
நடுநிலையோடு தான் சிலபஸ் குறைக்கப் பட்டுள்ளது: புத்தகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த சர்ச்சைக்குப் பிறகு என்சிஇஆர்டியின் நன்மதிப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்காக என்சிஇஆர்டி இத்தகைய மாற்றங்களைச் செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. “இதுபோன்ற சர்ச்சைகளால் பாதிக்கப்படாத அளவிற்கு என்சிஇஆர்டியின் நன்மதிப்பு மிகவும் அதிகம். என்சிஇஆர்டி என்ன செய்தாலும், அதை சிந்தித்தே செய்கிறது. இந்தியாவில் இடதுசாரி சித்தாந்தத்தின் தாக்கம் அமைப்புகள் மீது உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். அது குறைக்கப்பட்டால் அந்த முயற்சிகளுக்கும் ஆதரவு கிடைக்கும். பலர் இந்த மாற்றங்களை வரவேற்கிறார்கள்,”என்று ராஜ்புத் கூறுகிறார்.
‘அடுத்ததலைமுறைஅழிக்கப்படுகிறது’: ஆனால் புத்தகங்களில் செய்யப்படும் இந்த மாற்றங்களை, முகலாய வரலாற்றை இந்தியாவில் இருந்து அழிக்கும் முயற்சியாக பலர் பார்க்கிறார்கள்.”வரலாறு மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு கற்பிப்பதை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று சில காலத்திற்குப் பிறகு உணரப்படுகிறது. மாற்றங்களை செய்வது பெரிய விஷயமல்ல. அவை தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் எப்போதும் உண்மைகளின் அடிப்படையில் நடக்கின்றன. புதிய தகவல்களின் அடிப்படையில் நிகழ்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த பல ஆண்டுகளாக நம் வரலாற்றை நம் விருப்பப்படி எழுத முயற்சி நடக்கிறது. ஒரு வகையில் வரலாறு படிப்படியாக அழிக்கப்பட்டு கட்டுக்கதைகள் அதன் இடத்தை ஆக்கிரமிக்கின்றன,” என்று இந்திய வரலாற்று காங்கிரஸின் செயலாளரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியருமான சையத் அலி நதீம் ரெசாவி குறிப்பிட்டார்.
“2014 க்குபிறகு, வரலாற்றுக்குவித்தியாசமானகண்ணோட்டத்தைஅளிக்கமீண்டும்மீண்டும்முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. முன்னதாக, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில், வரலாற்று புத்தகங்களை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த மாற்றங்கள் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்டது. இப்போது ஒரு கற்பனை வரலாற்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்றார் அவர். முகலாயர்களின் வரலாறு, புத்தகத்தில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தொடர்பான விஷயங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற என்சிஇஆர்டியின் வாதத்தை பேராசிரியர் ரெசாவி நிராகரிக்கிறார். “வரலாற்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தை நீக்க முடியாது. இப்படி செய்தால், குழந்தைகளுக்கு தவறான வரலாற்றை கற்பித்து, தவறான தகவல்களை வழங்குகிறீர்கள் என்று பொருள். இது நடந்தால் சமூகத்திலும் இது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களின் குற்றச்சாட்டு: என்சிஇஆர்டியின் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து முகலாய மன்னர்களின் வரலாற்று பகுதி பாடம் நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 11-ம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி மற்றும் கலாச்சார மோதல் தொடர்பான பகுதிகளை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் பாடத் திட்டங்களை நீக்கக்கூடாது எனபலர் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்[1]. இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறும்போது, “மோடி அரசாங்கம் வரலாற்றுப் பாட நூல்களில் இருந்து முகலாய வரலாற்றை நீக்குகிறது. மேலும் இந்தியாவின் தற்போதைய வரலாற்றை சீனா அழித்துக் கொண்டிருக்கிறது” என்றார்[2].
மஹாராணாபிரதாப்பைஹீரோவாக்கமுயற்சிக்கிறார்கள்: புத்தகத்தில் இருக்கும் முகலாயர்கள் தொடர்பான பகுதி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். “அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளை வைத்திருக்கிறார்கள். முகலாயர்கள் இந்துக்களுடன் சண்டையிட்டதை வைத்திருக்கிறார்கள், ஆனால் முகலாயர்கள் இந்த சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப பணியாற்றினார்கள் என்று காட்டும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார். “மஹாராணா பிரதாப்பை ஹீரோவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவரை மட்டுமே வைத்து அவரை ஹீரோவாக்க முடியாது. அக்பரின் இருப்பு அங்கு அவசியம். எனவே அங்கு அக்பர் இருக்கிறார். ஆனால் அக்பர் பின்னாளில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சகிப்புத்தன்மை கொண்ட சமூகத்தை உருவாக்கினார் என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது,” என்று பேராசிரியர் அலி நதீம் ரெசாவி சுட்டிக்காட்டினார்.
என்.சி.இ.ஆர்.டி.,யின்விளக்கம்: பிளஸ் 2 வரலாற்று பாட புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்[3]. இப் பாட புத்தகத்தில் திருத்தங்கள் செய்வதாக என்.சி.இ.ஆர்.டி., என்ற கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அறிவித்தது[4]. இதன்படி வரலாற்று பாட புத்தகத்தில் முகலாயர்கள் தொடர்பான சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன[5]. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் முகலாயர் தொடர்பான வரலாற்றை மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன[6]. இது குறித்து என்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறியதாவது[7]: “பள்ளிக்கல்விபாடதிட்டங்கள்தொடர்பானஆலோசனைகளைஎன்.சி.இ.ஆர்.டி., வழங்கிவருகிறது[8]. கொரோனாபரவல்காரணமாகமாணவர்கள்பலபிரச்னைகளைசந்தித்தனர். பாடதிட்டங்கள்அதிகமாகஇருப்பதாகபுகார்கள்வந்தன. அதன்படியேபாடதிட்டங்கள்திருத்தப்பட்டன. பாடங்களின்அளவைக்குறைக்கவும், படிப்பதற்குசுலபமாகஇருக்கவும்ஒரேதகவல்பலஇடங்களில்வருவதைதவிர்க்கவும்இந்தநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாககடந்தாண்டே 2022, அறிவிப்புவெளியிட்டுநிபுணர்கள்உதவியுடன்பாடதிட்டங்கள்திருத்தப்பட்டன. மாணவர்களின்நலனுக்காகவேஇந்தநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவிரிவானவிளக்கம்கடந்தாண்டேஅளிக்கப்பட்டது. அந்தமாற்றங்களைசி.பி.எஸ்.இ., எனப்படும்மத்தியகல்விவாரியம்தற்போதுசெய்துள்ளது. இதற்காகபுதியபாடபுத்தகங்கள்ஏதும்வெளியிடப்படவில்லை. கடந்தாண்டுதிருத்தப்பட்டவையேதற்போதும்தொடர்கிறது. ஒருகுறிப்பிட்டபிரிவினரைதிருப்திபடுத்தும்வகையில்இந்ததிருத்தம்செய்யப்பட்டுள்ளதாககூறப்படுவதில்எந்தஉண்மையும்இல்லை[9]. அதுபோன்றஎந்தஅரசியல்எண்ணமும், நிபுணர்குழுவுக்குஇல்லை,” இவ்வாறு அவர் கூறினார்[10].
2022லேயே வெளியிட்டபோது, யாரும் கண்டுகொள்ளவில்லை: கொரோனாவால் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதித்திருக்கும் நிலையில், அதிக அளவிலான பாடங்களின் சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது[11]. குறைந்த பாடங்கள் கொண்ட பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணிகள் அடிப்படையில், சிலபஸ் மற்றும் பாடநூல்களின் பாடங்கள் குறைக்கப்படும் எனத் தெரிகிறது[12].
இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி, “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – 27-12-2022 அன்று மோடி, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது (4)
தமிழகத்தின்உண்மையானவரலாறுஎழுதப்படவேண்டும்; வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “இந்தவரலாற்றையும்முதலமைச்சர்ஸ்டாலின்அவர்கள், வரலாற்றுகாங்கிரஸ்மாநாட்டில்பேசியிருந்தால்நன்றாகஇருந்திருக்கும்.மதச்சார்பின்மை‘ என்பதுமதங்களை ‘மறுப்பது‘ அல்ல. அனைத்துமதங்களையும் ‘சமமாக‘ பேணுவதே. ஆனால், தி.மு.க.வின்மதச்சார்பின்மைஎன்பது, இந்துமதத்தற்குமட்டும்எதிராகசெயல்படுவது. அதனால்தான், மற்றமதங்களின்பண்டிகைகளுக்குவாழ்த்துகூறும்முதலமைச்சர்ஸ்டாலின்அவர்கள், இந்துமதபண்டிகைகளுக்குமட்டும்வாழ்த்துகூறுவதில்லை. இந்தமாநாட்டில், “பொய்வரலாறுகளைபுறந்தள்ளி, மக்களைமையப்படுத்தியஉண்மைவரலாறுஎழுதப்படவேண்டும்” என்றுமுதலமைச்சர்ஸ்டாலின்அவர்கள்பேசியதையேநானும்வலியுறுத்துகிறேன். தமிழகத்தின்உண்மையானவரலாறுஎழுதப்படவேண்டும். ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன்உள்ளிட்டசோழ, பாண்டிய, பல்லவமன்னர்கள்கட்டியஇந்துகோவில்கள்பற்றியும், அவர்கள்பின்பற்றியஇந்துதர்மம், கலாசாரம்பண்பாடுபற்றியும், ஆங்கிலேயர்களின்சூழ்ச்சிகள், மொகலாயமன்னர்கள், சுல்தான்கள்ஆட்சியில்இடிக்கப்பட்டகோவில்கள்பற்றியவரலாறும்எழுதப்படவேண்டும். இந்தஉண்மைகளைஎல்லாம்குறிப்பிடவாய்ப்பளிக்கும்வகையில், இந்தியவரலாற்றுகாங்கிரஸ்மாநாட்டில்பேசியமுதலமைச்சர்ஸ்டாலின்அவர்களுக்குநன்றி,” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
27-12-2022 அன்று மோடி, பினாராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது[1]: கடந்த நவம்பர் மாதம், 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் படைகளை வென்ற லச்சித் பர்புகானின் 400-ம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி[2], “நாடுசுதந்திரம்அடைந்தபிறகுஇந்தியவரலாறுஇந்தியப்பார்வையில்எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அந்நியர்கள்ஆட்சிக்காலத்துசதியின்ஒருபகுதியாகஎழுதப்பட்டவரலாறுதான்தொடர்ந்துகற்பிக்கப்படுகிறது. அந்நியர்களுக்குஎதிராகப்போராட்டங்களைமுன்னெடுத்து, தியாகம்புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்படவேண்டும். அதற்குஏற்பநாட்டின்வரலாறுமாற்றிஎழுதப்படவேண்டும்” என்றார். அதைத்தொடர்ந்து, டிசம்பர் 27-ம்தேதிநடைபெற்றவீரபாலகர்தினநிகழ்ச்சியில்பேசியபிரதமர்மோடி, “இந்தியாவின்வீரவரலாறுதன்னம்பிக்கையைவளர்க்கும். ஆனால், இந்தியவரலாறுஎன்றபெயரில்பொய்கதைகள்கற்பிக்கப்படுகின்றன” என்றுதன்ஆதங்கத்தைவெளிப்படுத்தினார். மேலும், “வீரபாலகர்தினம்என்பதுஇந்தியாவின்வீரம், தியாகம், சீக்கியபாரம்பர்யத்தின்அடையாளம். மூன்றுநூற்றாண்டுகளுக்குமுன்புசம்கவுர், சிர்ஹிந்த்போர்கள்நடைபெற்றன. மதஅடிப்படைவாதத்தைப்பின்பற்றியமுகலாயப்படைகளுக்குஎதிராகநமதுகுருக்கள்துணிச்சலாகப்போராடினர். சீக்கியகுருகோவிந்த்சிங்கும், அவரின்மகன்களும்எந்தஅச்சுறுத்தலுக்கும்அஞ்சவில்லை. யார்முன்பும்தலைவணங்கவில்லை. கோவிந்த்சிங்கின்சிறுவயதுமகன்கள்உயிருடன்சமாதிகட்டப்பட்டனர். ஒருபுறம்மிருகத்தனம், மறுபுறம்பொறுமை, வீரம்வெளிப்பட்டது,” என்றார்.
27-12-2022 அன்று கேரளாவின்முதல்வர்பினராயிவிஜயனும்இந்தியவரலாறுகுறித்துசமீபத்தில்பேசியது: இவ்வாறு இந்திய வரலாறு குறித்து பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பாறப்புறத்தில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய கேரளா முதல்வர், “சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் செய்தவர்களைத் துணிச்சலான தேசபக்தர்கள் என்றும், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் இன்றைய ஆட்சியாளர்கள் சித்திரித்துவருகின்றனர்” என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை விமர்சித்தார். “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பரிவாரங்களால் துணிச்சலான தேசபக்தர் என்று போற்றப்பட்ட சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு அந்தமான் சிறையிலிருந்து விடுதலை பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தை எந்தெந்த வழிகளில் சிதைக்கலாம் என்று சிந்தித்தார்கள். தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் முக்கியப் பங்கு வகித்தனர்” என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கேகூட இந்தக் கருத்தைக் குறிப்பிட்டார்.
27-12-2022 அன்று ஸ்டாலின் பேசியது: இந்தப் பின்னணியில்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். மேலும், “கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. அதை ஏற்கக் கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்” என்று பா.ஜ.க-வை மறைமுகமாகச் சாடினார் ஸ்டாலின். ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்ட வரலாற்று அறிஞர்களின் ஆய்வு நூல்களை பா.ஜ.க ஏற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களின் நூல்களையெல்லாம் மனதில் வைத்துத்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசுகிறார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 1990களில் சரித்திராசிரியர்கள் வேறுபட்டு சண்டை போட்டுக் கொண்டனர். இப்பொழுது அவர்களில் பாதி பேர் காலமாகி விட்டனர், சிலருக்கு 70-80-90 என்று வயாதாகி விட்டது. மற்றவர்களோ உண்மையினை மறைத்து பேசி வருகின்றனர்.
இந்தியவரலாற்றுகாங்கிரஸ், இந்தியவரலாற்றுகாங்கிரசுஆகி, “திராவிடசரித்திரகாங்கிரஸ்” மாநாடாகமாறியது – இந்திய சரித்திரத்திற்கு பதிலாக தமிழக சரித்திரம் பற்றி பேசியது! (3)
கோடிகளில்நிதியுதவிபெற்றுநடத்தப்படும்மாநாடுகள்: கல்லூரி முதல்வர் வில்சன் ஆங்கிலத்தில் பேசினாலும், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று வரவேற்று பேசி, அரசியல் ரீதியில் தான் பேசினார். தமிழ்நாடு அரசு ரூ.35 லட்சங்கள் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மற்ற கல்வி நிறுவனங்கள் முதலியனவும் நிதியுதவி அளித்துள்ளன. சுமார் 2500 பேர் பதிவு செய்ததாகச் சொல்லப் படுகிறது, அப்படியென்றால், சுமார் ரூ 75 லட்சம் மேலாக தொகை வந்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ரூ.35 லட்சங்கள் கொடுத்துள்ளது என்றால், ரூ 1 கோடிக்கு மேலாக வசூலாகியிருக்கிறது. ஆனால், நிச்சயமாக, இவ்வளவு தொகையும் செலவழிக்கப் படவில்லை. ஏனெனில், பாதிக்கு மேற்பட்டவர்கள் தங்காமல், ஆய்வு கட்டுரை கொடுத்து சென்று விட்டானர். 30-40% பேர் வழக்கம் போல சுற்றிப் பார்க்கச் சென்று விட்டனர். ஆய்வுக் கட்டுரை படிக்கும் அறைகளில் சுமார் 100 பேர் தான் இருந்தனர். மதியத்திற்கு மேல், 5-10 பேர் தான் இருந்தனர். பிறகு, ஒவ்வொருவரிடமிருந்து ஏன் ரூ 4750/-, 3,500/- என்றெல்லாம் வசூலிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
வழக்கம் போல நடந்த சடங்குகள்: மஹாலக்ஷ்மி ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஷிரீன் மூஷ்வி, சுப்பராயலு கேசவன் தலைவராக முன் மொழிந்தார். ஷிரீன் மூஷ்வி, வழி மொழிந்தார். டி.ஆர்.பாலு, அன்பரசு, தங்கம் தென்னரசு, பொன்முடி, ஸ்டாலின், முதலியோருக்கு நினைவு பரிசு கொடுக்கப் பட்டது. தங்கம் தென்னரசு, இந்திய சரித்திரம் தமிழகத்திலிருந்து தான் துவக்கப் பட வேண்டும். பல்லாவரம் கோடாளி, அத்திரம்பாகம் பழங்கற்கால எச்சங்கள், முதலியவற்றைக் குறிப்பிட்டு, தமிழ் வைவடிவம் முந்தியது என்றெல்லாம் பேசினார். எல்லாமே, ஸ்டாலின் ஆட்சியில் தான் நடந்தது போன்று பேசியது தமாஷாக இருந்தது. பொன்முடி “திராவிட மாடல்” பாணியிலேயே பேசி முடித்தார். கால்டுவெல் பற்றியெல்லாம் பேசினார். 1935ல் ஆரம்பித்தாலும் 81வது மாநாடு இப்பொழுது நடக்கிறது. உண்மையான சரித்திரம் எழுதப் படவேண்டும். அடுத்தது ஸ்டாலின் பேசினார். ராமானுஜன் நிதியுதவி அளித்தற்கு நன்றி தெரிவித்தார். எல்லா மந்திரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
“திராவிடசரித்திரகாங்கிரஸ்” மாநாடாகமாறியது: இப்படியாக முதலமைச்சர் பேசியது, சரித்திராசிரியர்களுக்குத் திகைப்பாகத் தான் இருந்தது. முந்தைய அமர்வுகளைப் போல, எந்த சரித்திராசிரியரும் பொங்கவில்லை, துடிக்கவில்லை, ஆவேசமாக எழுந்து பேசவில்லை, கத்தவில்லை. அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். சொல்லி வைத்தால் போல, இர்பான் ஹபீப் போன்றவர்களும், ரோமிலா தாபர் வகையறாக்களும் வரவில்லை. வந்திருந்தாலும், அமைதியாகத்தான் இருந்திருப்பர். கண்ணூர் போல, இர்பான் ஹபீப் ஒன்றும் ஸ்டாலினைத் தட்டிக் கேட்டிருக்க முடியாது. கத்தி ஆர்பாட்டம் போட்ட கும்பலும் இங்கு காணவில்லை. ஸ்டாலின் பேசியதை கூர்ந்து கவனித்தால், அவர் ஏதோ, “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசியது போன்று இருந்தது. அரசியல் மயமாக்கி, கொடுத்த பெரிய சொற்பொழிவை கேட்டுக் கொண்டு சும்மாதான் இருந்தனர். பொதுவாக ஆங்கிலத்தில் ஏசுவதைக் கூட விடுத்து, இவ்வாறு, “திராவிட மாடலில்” பேசியது, சரித்திராசிரியர்களுக்கு பாதித்ததாகத் தெரியவில்லை.
கண்ணாடிமுன்புநின்றுதனக்குதானேபேசியிருக்கவேண்டும். அதுதான்பொருத்தமானதாகஇருக்கும்: நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை என வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார்[1]. பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்[2];- “சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற, 81-வது ‘இந்திய வரலாற்று காங்கிரஸ்’ மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “கற்பனைகதைகளைசிலர்வரலாறாகசொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதனைநம்பிஏமாந்துவிடக்கூடாது. இன்றுநாட்டைச்சூழ்ந்துள்ளஆபத்துவரலாற்றுதிரிபுதான்,” என, பேசியுள்ளார்[3]. முதல்வரின் இந்த வரிகளோடு அப்படியே நான் உடன்படுகிறேன். இந்த வரிகளை அவர், கண்ணாடி முன்பு நின்று தனக்கு தானே பேசியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்[4].
நீதிக்கட்சி, திராவிடர்கழகம், திராவிடமுன்னேற்றக்கழகம்ஆகியஅமைப்புகளேகட்டுக்கதைகளால்உருவாக்கப்பட்டவை: நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை[5]. கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, ‘திராவிடம்’ என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக, கற்பனையாக சித்தரித்து உருவாக்கப்பட்ட கட்டுக்கதைதான், தி.மு.க.வின் அடிப்படை[6]. ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதை தான் திராவிட இனவாதம்[7]. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாத கட்டுக் கதையாக தங்கள் கட்சியின் அடிப்படை கொள்கையாக வைத்துக் கொண்டு, யாருக்கோ பாடம் எடுத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர்[8]. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள், ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ மூலமே, நம்மை ஆண்டனர். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாகவே, 1916-ல் தமிழகத்தில், ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ உருவானது. இதுவே பின்னாளில், நீதிக் கட்சி, திராவிடர் கழகமாகி, திராவிட முன்னேற்றக் கழகமானது. தமிழகத்தில் நீதிக் கட்சி செல்வாக்கு பெறத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுதந்திரப் போராட்டமே நீர்த்துப் போனது.
பெரியாரைவைத்துஉண்டாக்கியகட்டுக்கதைகள்: வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதியார் தங்கள் வாழ்வை தியாகம் செய்து எழுப்பிய சுதந்திரத் தீயை, நீதிக்கட்சி தனி தமிழ்நாடு, திராவிட நாடு என்று பிரிவினை பேசி அணைத்தது. அதனால்தான், 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளை, கருப்பு தினமாக பெரியார் ஈ.வெ.ரா. அறிவித்தார். இதுதான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், தி.மு.கவினர் இப்போது பேசுவதில்லை. உயிருக்கும் மேலான நம் தாய் மொழியை, ‘காட்டுமிராண்டி மொழி’ என்றும், உலகமே வியக்கும் திருக்குறளை, ‘தங்க தட்டில் வைத்த மலம்’ என்று விமர்சித்தவர் பெரியார் ஈ.வெ.ரா. கீழ்வெண்மணியில், பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம் தேசத்தையே உலுக்கியபோது, பண்ணையார்களுக்கு ஆதரவாக நின்றவர் பெரியார் ஈ.வெ.ரா. தி.மு.க. ஆட்சியில் காவிரி நதி நீர் பிரச்னை, கச்சத் தீவை தாரை வார்த்தது என அவர்கள், சுய நலத்திற்காக, தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுத்த வரலாறுகளை தனி புத்தகமாகத்தான் வெளியிட வேண்டும். பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு யுனைஸ்கோ விருது கிடைத்ததாக, ஒரு கட்டுக்கதையை பரப்பி, அதனை பாடப் புத்தகத்திலும் இடம் பெறச் செய்தவர்கள்தான் தி.மு.க.வினர். இவையெல்லாம் தான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், இப்போது தி.மு.க.வினர் பேசுவதில்லை.
[5] தமிழ்.ஏசியாநெட், இதெல்லாம்கற்பனைகதை.. முதல்வர்ஸ்டாலின்சொல்வதைநம்பிஏமாந்துவிடாதீங்க.. வானதிசீனிவாசன்..!, vinoth kumar, First Published Dec 29, 2022, 10:14 AM IST, Last Updated Dec 29, 2022, 10:16 AM IST
கற்பனைக்கதைகளைசிலர்வரலாறாகசொல்லிக்கொண்டுஇருக்கிறார்கள். அதனைநம்பிஏமாந்துவிடக்கூடாது. அதனைஏற்கக்கூடாது: கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும்தான், நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும்; எதிர்காலத்தைக் கணிக்க முடியும். அப்படி படிக்கப்படும் வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மையான வகையில் அது அமைந்திட வேண்டும். கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்[1]. கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும்[2]. இத்தகைய சூழலில், இந்திய வரலாற்று காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் பணி என்பது மிக மிக முக்கியமானது! 1994-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நான் இங்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
எந்தவொருகட்சியும்மதவாதக்கட்சியாகஇயங்கஅனுமதிக்கக்கூடாது: மதச்சார்பின்மை என்பது, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையாகும். அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது[3]. எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது[4]. பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி, அவர்களுக்குள்ளேயே படுகொலைகளைத் தூண்டுகிற சக்திகளை இயங்க அனுமதித்தால், ஜனநாயகமே இல்லாமல் போய்விடும்[5]. ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளைக் கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்” – என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது[6]. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள். இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி – மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்.
நாங்கள்பழம்பெருமைகள்மீதுபற்றுகொண்டவர்கள்தான். ஆனால்பழமைவாதிகள்அல்ல!: தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு! இங்கே இந்த மாநாடு நடப்பது மிகமிகப் பொருத்தமானது! நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான்[7]. ஆனால் பழமைவாதிகள் அல்ல! அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம்[8]. இங்கே அமைச்சர் தங்கம் தென்னரசு மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள். கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது[9]. தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், எழுத்தறிவு மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது[10]. சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட, உமி நீங்கிய நெல்மணிகளின் காலம், கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது.தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது, அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தஅகழாய்வுமுடிவுகளை, தமிழ்நாடுசட்டமன்றத்தில்நான்அறிவித்துள்ளேன்: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த நம்முடைய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏழு இடங்களில், இதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வுகளைத் தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. புனேயில் உள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம் – பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் துணையோடு அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்கிறோம். உலகளாவிய நிறுவனங்களின் பரிசீலனைக்கு எங்களது கண்டுபிடிப்புகளை அனுப்பி வைத்துக் கேட்கிறோம். இந்த அகழாய்வு முடிவுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்துள்ளேன். கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக ஓர் அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம்.
தமிழினத்தின் – தமிழ்நாட்டின்பெருமையைமீட்கும்அரசாகதிராவிடமுன்னேற்றக்கழகஅரசுசெயல்பட்டுவருகிறது: பொருநை நாகரிகத்தை நெல்லையில் காட்சிப்படுத்த இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரலாற்று உணர்வை விதைத்திருக்கிறது. இந்த பெருமைகள் அனைத்தும் மதச்சார்பற்ற, அறிவியல் வழிபட்ட வரலாற்றைப் பற்றிய பெருமிதங்கள்!இத்தகைய வரலாற்று உணர்வை – உண்மையான வரலாற்றை – ஆய்வின் அடிப்படையிலான வரலாற்றை, மக்களிடையே கொண்டு சேர்ப்பதை, தமிழ்நாடு அரசின் கடமையாக நினைத்து நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு பழந்தமிழக நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவதுதான் முறையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்[11]. தமிழினத்தின் – தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது[12]. வரலாறு அரசர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி, வெற்றி பராக்கிரமங்கள் பற்றிய ஆவணமாக மட்டும் இருக்கக் கூடாது. அது அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் பார்வை.
ஆக்கப்பூர்வமானஆலோசனைகளை, இந்தியவரலாற்றுகாங்கிரசுஅமைப்புவழங்கினால், அதனையும்ஏற்றுநாங்கள்செயல்படுத்தஇருக்கிறோம்: திராவிட கட்டடக்கலையினை பறைசாற்றும் வானுயரக் கோவில் கோபுரங்கள் குறித்து பெருமை கொள்கிறோம். அதேபோல் கீழடியில் “ஆதன்” என்றும் “குவிரன்” என்றும் சங்ககால மக்கள் தங்கள் பெயர்களை எழுதிப்பார்த்த சின்னஞ்சிறு மண்பாண்டங்கள் குறித்தும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.இவற்றை மேலும் செழுமைப்படுத்திட, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரசு அமைப்பு வழங்கினால், அதனையும் ஏற்று நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம். தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயல் தொடர்பான வல்லுநர்களை உருவாக்க, இளங்கலை பட்டப்படிப்பை சென்னை கிறித்துவக் கல்லூரி வழங்குகிறது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் வரலாற்றுத் துறை, இந்த அமர்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். எனவே, வரலாற்றைப் படிப்போம், மீண்டும் சொல்லுகிறேன் வரலாற்றைப் படிப்போம், வரலாற்றைப் படைப்போம்.” இவ்வாறு அவர் பேசினார்.
“திமுக–மாடல்” ஆரம்பித்து “திராவிடமாடலில்” முடிந்தது: இந்திய வரலாற்று காங்கிரஸ் சென்னையில் 27-12-2022 ஆரம்பித்து நடந்ததை அந்த அளவுக்கு மற்றவர்களால் (emeritus professors, elite-eminent historians, JNU-AMU experts), குறிப்பாக ஊடகங்களால் பொருட்படுத்தப் படாமல், நடந்து முடிந்தது வியப்பாக இருந்தது. அதாவது, இந்த மாநாடு ஜே.என்.யூ [ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்], ஏ.எம்.யூ [அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்] போன்ற கம்யூனிஸ மற்றும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் உள்ளது மற்றும் அத்தகைய சித்தாந்தங்களைப் பின்பற்றும் சரித்திர விற்பன்னர்கள், வித்தகர்கள் மற்றும் பண்டிதர்களால் நிறைந்திருக்கும் என்பது அறிந்த விசயமே. ஆனால், திமுகவின் ஆதிக்கம் முதல் நாளிலேயே பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. தாம்பரம் வழிநெடுக, டிஜிடல் பேனரே வால்போஸ்டராக பல இடங்களில் ஒட்டப் பட்டிருந்தன. “சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய வரலாறு காங்கிரஸைத் துவக்கி வைக்க வரும் முதலமைச்சரே வருக,” என்ற சுவரொட்டிகள் இருந்தன. முன்னர் முரசொலியில் இதே வகையில் விலம்பரங்கள்” வெளியிடப் பட்டிடருந்தன. அதற்கு முன்னர், கல்லூரி முதல்வர் வில்சன் முதல்வரைப் பார்த்து வரவேற்றிருக்கிறார். அப்பொழுது, இக்கல்லூரி தயாரித்த வீடியோ, “திமுக-மாடல்” அல்லது “திராவிட மாடலில்” இருந்தது எனலாம். ஏனெனில், அவ்வீடியோ “உதய சூரியனில்லாரம்பித்து முடிகிறது[1].
“திராவிடமாடலில்” ஆரம்பித்துவைக்கப்பட்டமாநாட்டில் “ஆரியர்” தொல்லைக்குஉன்டானது: 26-12-2022 மாலையிலிருந்து, 27-12-2022 வரை நாடெங்கிலும் இருந்து, பல மாநிலங்களிலிருந்து உறுப்பினர்கள் வந்து கொண்டிருந்தனர். என்ட்ரல், எழும்பூர், மீனம்பாக்கம் என்று அவரவர் வசதிக்கேற்றப் படி பஸ், ரெயில், விமானம் என்று பயணித்து வந்து சேர்ந்து கொன்டிருந்தனர். 27-12-2022 காலை, கல்லூரி வாசல், உள்வளாகம் மற்றும் அரங்கம் பாதுகாப்பு போலீசாரின் கட்டுப்பாட்டில் சென்றன. பல நூற்றுக் கணக்கான பேராசிரியர்கள், பேரளர்கள் (முதியவர், பெண்கள் உட்பட) உள்ளே அனுபப்படாமல் நிறுத்தப் பட்டனர். சுற்றி இன்னொரு வாயிலில் மூலமாக வரச் செய்தனர்[2]. பலர் வெளிமாநிலங்களிலிருந்து வந்து கொண்டிருந்ததால், தமது லக்கேஜுடன் சிரமப் பட்டனர். ஆட்டோ-டாக்ஸிகாரர்களுக்கு கொண்டாட்டம். கூடுதல் பணம் கேட்டு, நசசரித்துப் பிடுங்கிக் கொண்டனர். “இந்தி தெரியாது போடா,” என்றெல்லாம் சொல்லவில்லை, இந்தி பேசியே கறாராக வசூலித்து விட்டனர். அவர்களும், இதுதான் “திராவிட மாடல்’ என்றும் நினைத்திருக்கலாம். அரங்கத்திலும் ஏகப் பட்ட கெடுபிடிகள். உள்ளே சென்றவர்கள் வெளியே வரமுடியாது, உள்ளேயும் செல்ல முடியாது. ஒருவேளை கண்ணூர் போல ஏதாவது கலாட்டா ஆகிவிடும் என்று நினைத்தனரோ என்று தெரியவில்லை. இங்கு இர்பான் ஹபீப்பும் வரவில்லை[3].
பெயருக்கு அங்கிலத்தில் ஆரம்பித்து தமிழில் முழுமையாக படித்தது: சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.27) தொடங்கி வைத்தார்[4]. இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “It is my honour, to be among these great historians and inaugurate the 81st Annual Session of the Indian History Congress. After a gap of 26 years, the annual session of Indian History Congress is being held in Tamil Nadu[5]. தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்குமுன்பு, 1996-ஆம்ஆண்டு, இந்தியவரலாற்றுகாங்கிரஸ்மாநாடுநடந்துள்ளது. சென்னைப்பல்கலைக்கழகத்தில்நடந்தஅந்தமாநாட்டில், அன்றைக்குமுதலமைச்சராகஇருந்ததலைவர்கருணாநிதிகலந்துகொண்டுஉரையாற்றிஇருக்கிறார்கள்[6]. இப்போதுநடக்கும்இந்தமாநாட்டில், நான்கலந்துகொள்ளக்கூடியவாய்ப்பைப்பெற்றிருக்கிறேன்[7]. இந்தியவரலாற்றுகாங்கிரசின் 81-ஆவதுஅமர்வைநடத்துவதற்கு, தமிழ்நாட்டைத்தேர்வுசெய்தமைக்கு, நான்எனதுமகிழ்ச்சியைத்தெரிவித்துக்கொள்ளவிரும்புகிறேன்[8]. இதற்குக்காரணமாகஅமைந்திருக்கக்கூடியஅனைவரையும்இந்தநேரத்தில்நான்மனதாரப்பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்[9]. 1935-ஆம்ஆண்டுஉருவாக்கப்பட்டஇந்தவரலாற்றுஅமைப்பானது, 87 ஆண்டுகளைக்கடந்தும், வரலாறுபடைத்துக்கொண்டுஇருக்கிறது[10]. எந்தஅமைப்பாகஇருந்தாலும், அதனைஉருவாக்குவதுஎளிது. ஆனால்தொடர்ந்துநடத்துவதுதான்கடினம்.
மதச்சார்பற்ற – அறிவியல்பூர்வமானவரலாறு: தொடர்ச்சியாக இந்த அமைப்பின் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தவர்களின் ஆர்வத்தால், இது இத்தகைய மாபெரும் வளர்ச்சியையும் – தொடர்ச்சியையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உண்மையான வரலாற்றை – அறிவியல்பூர்வமான வரலாற்றை வடித்துத் தருவதுதான் இந்திய வரலாற்று காங்கிரசின் மிக முக்கியக் குறிக்கோளாக அமைந்துள்ளது. குறிப்பாக, மதச்சார்பற்ற – அறிவியல்பூர்வமான வரலாற்றை எழுதுவதை ஊக்குவித்து வருகிறீர்கள். பல தலைமுறைகளாக வரலாற்று ஆசிரியர்களை ஊக்குவிக்கும் அமைப்பாகவும், வரலாற்று உணர்வை ஏற்படுத்தி வரும் அமைப்பாகவும் இது விளங்கிக் கொண்டிருக்கிறது. ‘தத்துவ ஞானிகள் இதுவரை, உலகத்தைப் பற்றி, பல்வேறு முறைகளில் விளக்கம் சொல்லி வந்தார்கள். ஆனால் நாம், எப்படி அதை மாற்றி அமைப்பது என்று நினைப்பவர்கள்” – என்றார் பொதுவுடைமை ஆசான் காரல் மார்க்ஸ். இந்திய வரலாற்றுக் காங்கிரஸ் என்பது, வரலாற்று மாற்றத்திற்கு, சிந்தனை மாற்றத்திற்கு, அடித்தளம் அமைக்கும் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
வரலாற்றைப்படித்துஎன்னஆகப்போகிறது? அதைப்படித்தால்வேலைகிடைக்குமா? சம்பளம்கிடைக்குமா?: D.D.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஏ.எல்.பாஷம், ராகுல் சாங்கிருத்தியாயன், தேவி பிரசாத், கே.பி.ஜெய்ஸ்வால் ஆகிய மிக மூத்த வரலாற்றாசிரியர்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்க, கேசவன் வேலுதத், இர்பான் அபீப் ஆகியோர் இந்த அமைப்பை வழிநடத்தி வருவது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இன்றைய காலத்தின் தேவை என்பது வரலாற்று உணர்வை ஊட்டுதல், அறிவியல் பார்வையை உருவாக்குதல். வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது[11]. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, சம்பளத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும்[12]. இவ்வாறெல்லாம் ஸ்டாலின் பேச்சினார், பேச்சைத் தொடர்ந்தார்.
[1] The 81st session of the Indian History Congress will be held in Madras Christian College, Tambaram, Chennai between 27th and 29th of December 2022.
[2] முன்பு அர்ஜின் சிங் வாரங்கல் மநாட்டிற்கு வந்தபோது, செய்த அடாவடித் தனத்தை விட அதிகமாக செய்தனர் எனலாம். இங்கு, நக்ஸலைட்டுகள் பாதிப்பு என்றதால் அவ்வாறு செய்யப் பட்டது. இங்கு என்னவென்று தெரியவில்லை.
[3] திராவிட ஆரராய்ச்சிப் பேரவை – நாகநாதன், கே.பி. ஜகதீசன், சுப.வீரப் பாண்டியன், கருணாநந்தம் போன்றோர் முன்னரே சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.
[9] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், CM Stalin Speech: ‘கற்பனைகதையைவரலாறுஎன்கிறார்கள்’ –முதல்வர்ஸ்டாலின்பேச்சு!, Stalin Navaneethakrishnan, 27 December 2022, 16:10 IST.
[11] தமிழ்.ஒன்.இந்தியா, வரலாறுபடித்தால்வேலைகிடைக்குமா? சம்பளம்கிடைக்குமா? முதலமைச்சர்ஸ்டாலின்பேச்சு!, By Arsath Kan Published: Tuesday, December 27, 2022, 14:23 [IST]
திராவிடஇனம், ஹிராவிடஸ்டாக்மற்றும்திராவிடமாடல்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, “திராவிட” என்ற கோஷம் அதிகமாகி விட்டது, அது மட்டுமல்லாது, தன்னை “திராவிடியன் ஸ்டாக்,” (Dravidian stock) என்று குறிபிட்டுக் கொண்டு, “திராவிட மாடல்” (Drvidian model) ஆட்சிமுறை பின்பற்றப் போகிறோம் என்று ஸ்டாலின் அறிவித்தாகி விட்டது. அதிலிருந்து, அகழாய்வு அரசியலாக்கப் பட்டு, தொல்துறை திமுக அமைச்சர்கள் நடத்தி வருவது போல மாறிவிட்டது. கீழடி உச்சத்தில், எம்.பிக்கள், மந்திரிகள், அதிகாரிகள் என்று அடிக்கடி, அகழாய்வு நடக்கும் இடங்களுக்குச் சென்று பார்ப்பது, குழிகளில் இறங்குவது, பொருட்களைத் தொட்டுப் பார்ப்பது என்றெல்லாம் சகஜமாக நடந்து வருகின்றன. எந்த நியாவானும் இதையெல்லாம் தவறு என்று யோக்கியமாக எடுத்துக் காட்டவில்லை. மெற்குறிப்பிட்டவர்கள், தோண்டி கிடைத்தவற்றை, கைகளில் வைத்துக் கொண்டு அவற்றைப் பற்றி விவரிக்கின்றனர். இருப்பினும், கிடைத்த எல்லா பொருட்களையும் 6th.cent.BCE / 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று குறிக் கொள்வது தமாஷாக இருக்கிறது.
இந்தியதுணைகண்டத்தின்வரலாறுதமிழ்மண்ணில்இருந்துஎழுதப்படட்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் திருநெல்வேலியில் இலக்கிய திருவிழா முதன்முதலாக தொடங்கியது. தமிழ் மொழியின் இலக்கிய செழுமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அறிவு சார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்[1]. பாளையங்கோட்டையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.26, 27) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார்[2]. அப்போது, “தமிழ்ச்சமூகமானதுஇலக்கியமுதிர்ச்சியும், பண்பாட்டின்உச்சத்தையும்அடைந்தபெருமைக்குரியசமூகம்[3]. கீழடியைத்தொடர்ந்துசிவகளை, கொற்கைஎனபலஅகழ்வாய்வுகள்வழியாகவும்பல்வேறுமுன்னெடுப்புகள்வழியாகவும்அறிவியல்பூர்வமாகநிறுவப்படும்நமதுதொன்மைநம்முடையபெருமை[4]. இந்தப்பெருமையினைஅடுத்ததலைமுறைக்குஎடுத்துச்சென்று, அறிவுசார்சமூகத்தைவார்த்தெடுக்கும்இலக்குடன்இலக்கியத்திருவிழாக்கள்நடைபெறவுள்ளன[5]. தமிழின்செழுமைமிகுஇலக்கியமரபுகளைப்போற்றும்விதமாகபொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னைஎனஐந்துஇலக்கியத்திருவிழாக்களைத்தமிழ்நாடுஅரசுநடத்துகிறது[6]. இதில்முதல்நிகழ்வாக, அன்னைமடியானபொருநைஆற்றங்கரையில்முன்னெடுக்கப்பட்டிருக்கும்இந்தஇலக்கியத்திருவிழாசிறந்ததொருமுயற்சி. அறிவைவிரிவுசெய், அகண்டமாக்கு” என்றுபாவேந்தர்சொன்னதற்கிணங்கநமதுதமிழ்மண்ணின்செழுமைமிக்கஇலக்கியபண்பாட்டினைஉலகிற்குப்பறைசாற்றநடைபெறும்பொருநைஇலக்கியத்திருவிழாவிற்குஎனதுவாழ்த்துகள். இந்தியத்துணைக்கண்டத்தின்வரலாறுதமிழ்மண்ணிலிருந்துஎழுதப்படட்டும்,” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திராவிட மாடல் என்பது சித்தாந்தம். அதனை தமிழக முதல்வர் கையிலெடுத்துள்ளார் – பேசிய அமைச்சர்: அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்[7], “திருநெல்வேலி என்றால் தியாக வரலாறு உள்ள பூமி. இந்த மண்ணில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இது போன்ற விழாவை யாரும் நடத்தியதில்லை…….. திராவிட மாடல் என்பது சித்தாந்தம். அதனை தமிழக முதல்வர் கையிலெடுத்துள்ளார்………. ,” என்று பேசினார்[8]. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று கடந்த மே 2022லேயே சட்டசபையில் சொன்னதாக செய்தி வந்துள்ளது[9]. அதையே தான், நவம்பர் 2022லும் சொல்கிறார். அப்பொழுது, “அதேபோல், அகழாய்வுகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்களை ஆய்வு செய்திட (1) தொல் தாவரவியல் (Paleo Botany), (2) தொல் விலங்கியல் (Paleo Zoology), (3) தொல் மரபணு ஆய்வு (Ancient DNA Analysis) (4) சுற்றுச்சூழல் தொல்லியல் (Environmental Archaeology) (5) மண் பகுப்பாய்வு (Soil Analysis), (6) உலோகவியல் (Metallurgy Study), (7) கடல்சார் ஆய்வு (Marine Archaeology) போன்ற பல்துறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றிடப் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்றெல்லாமும் சொல்லியிருப்பதை கவனிக்கலாம்[10].
இனவாதக்கட்டுக்கதைகள்சரித்திரம்ஆகாது: .19-20 நூற்றாண்டுகளில், அரசியல் வாழ்க்கையில் கருத்துக்கள், விதிமுறைகள் மற்றும் கலாச்சாரம் போன்ற கருத்துக்கள் வகிக்கும் பங்கை அறிஞர்கள் மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளனர். உருவாக்கப் பட்ட கட்டுக் கதைகள், இட்டுக் கதைகள், கருதுகோள்கள் முதலியவற்றை ஆய்ந்து, பற்பல புனைந்த கோட்பாடுகளை நீக்கி வருகின்றனர். இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆதரங்களை வைத்துப் புனையப் பட்ட கட்டுக்கதைகளையும் ஒதுக்குகின்றனர். இந்த இலக்கியம் அரசியல் நடிகர்கள் மற்றும் விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை விமர்சன வழிகளில் மேம்படுத்தியிருந்தாலும், அது பல சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஒன்று இந்த “திராவிட மாடல்” தொந்தரவு ஆகும். இது அவ்வப்பொழுது சரித்திரம், அகழாய்வு, சரித்திராரைவியல் முதலியவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறது. அதன் நிலை சார்பு. சமூக ஜனநாயகத்தின் மறுபரிசீலனையை முன்வைத்து, கட்டமைப்பு மற்றும் நிறுவனம் ஆகிய இரண்டும் ஆற்றிய பங்கை கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை நினைவு கொண்டு, இப்பொழுதெல்லாம் எந்த சரித்திராசிரியரும் தட்டிக் கேட்பதில்லை, எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.
சித்தாந்தரீதியிலானசரித்திரவரைவியல்ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை: மேலும் சித்தாந்தங்களின் இரண்டு-நிலை செயல்முறையைப் புரிந்துகொள்வதற்காக பல்வேறு வகையான வரலாற்று பகுப்பாய்வு மற்றும் செயல்முறைத் தடயங்கள் தேவை. உயர்வு தாழ்வு. சித்தாந்தங்கள் எப்படி, ஏன் உருவாகின்றன என்பதைப் பற்றிய சிறந்த புரிதல், சமூக அறிவியலில் தற்போது பரவி வரும் கருத்தியல் “அலைக்கு” விமர்சன ரீதியாக பங்களிக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை. சமீபத்தில், இரண்டு முறை, தமிழ்நாட்டு சரித்திர பேரவை மாநாடுகள் நடந்துள்ளன. நூற்றுக் கணக்கான சரித்திராசிரியற்கள் கலந்து கொன்டுள்ளனர். ஆனால், இத்தகைய அரசியல் தலையீட்டைக் கண்டிக்கவில்லை, எந்த தீர்மானமும் போடவில்லை, நிறைவேற்றவில்லை. முன்பெல்லாம், மஸ்ஜித்-மந்திர் விவகாரத்தை வைத்துக் கொண்டு சரித்திராசிரியர்கள் சண்டை போட்டுக் கொள்வது சகஜமாக இருந்தது. பிரபலமான சரித்திராசிரியர்கள் காரசாரமாக பேசுவார்கள், விவாதிப்பார்கள், கோஷம் போடுவார்கள், தீர்மானம் போடுவார்கள், நிறைவெற்றுவார்கள்…..இப்பொழுது, திராவிட மாடலில், மூடிக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். திராவிட ஸ்டாக்கைக் கண்டு அஞ்சுகிறார்கள் போலும்.
“திராவிட” என்பதுஇனம்இல்லை, அதுமொழிஅல்லதுதிசையைக்குறிக்கும்சொல்: ரோமிலா தாபர் போன்ற சரித்திராசிரியர்கள் “திராவிட” என்பது இனம் இல்லை, அது மொழி அல்லது திசையைக் குறிக்கும் சொல் என்று எடுத்துக் காட்டியபிறகும், திராவீடத்துவ வாதிகள், அதை “இனம்” என்ற விததிலேயே உபயோகப் படுத்தி, வெறுப்பு அரசியல் நடத்தி வருகின்றனர். திராவிடம் என்பது ஒரு அரசியல் சொல்லாக, தமிழ்நாட்டின் பொதுப் பேச்சில் ஒரு நிலையான காரணியாக இருந்து வருகிறது, அதன் விமர்சகர்கள் தாமதமாக அதிகமாகக் குரல் கொடுத்தாலும் அது 60 ஆண்டுகள் கழித்து தான் கேட்கப் பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “திராவிட” என்ற அடைமொழி, அத்யாவசீயமானது. அரசியல்வாதி என்பது இல்லை, நடிகர் கூட அத்தகைய சித்தாந்தத்தைப் பேசலாம். கமல்ஹாசன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில், “திராவிட சித்தாந்தத்தை ஏற்காமல் எந்த கட்சியும் அரசியலில் ஈடுபட முடியாது,” என்பதெல்லாம் அத்தகைய உசுப்பேற்றும் வசனங்கள் தாம். தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பாரிஸைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும், நீதிக்கட்சி பற்றிய சமீபத்திய புத்தகத்தின் ஆசிரியருமான ஜே.பி. பிரசாந்த் மோர், திராவிடம் என்ற சொல் பல ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்று கூறினார். 1916 இல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டபோது, அப்போதைய மதராஸ் பிரசிடென்சியில் தமிழ் பேசும் பிராமணர் அல்லாதவர்களை மட்டுமே குறிக்கும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது[11]. “ஆனால், இப்போது, அது பாரதிய ஜனதா கட்சி என்று கூறுவதோடு, ‘வெளியுலக செல்வாக்கை’ எதிர்கொள்வதையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது,” என்று திரு. மோர் கூறினார்[12], தமிழர் அடையாளமும் கலாச்சாரமும் ஆபத்தில் உள்ளது என்ற கருத்து ஏற்படும் போதெல்லாம். , சொல்லின் பொருத்தம் முன்னுக்கு வருகிறது.
[1] தினமணி, இந்தியத்துணைக்கண்டத்தின்வரலாறுதமிழ்மண்ணிலிருந்துஎழுதப்படட்டும்: முதல்வர்ஸ்டாலின்!, By DIN | Published On : 26th November 2022 03:00 PM | Last Updated : 26th November 2022 03:05 PM.
[3] இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்..முதல்வர் ஸ்டாலின் By Jeyalakshmi C Published: Saturday, November 26, 2022, 11:32 [IST].
[5] ஜீடிவி.தமிழ், ‘துணைக்கண்டத்தின்வரலாறுதமிழ்மண்ணில்இருந்துஎழுதப்படட்டும்‘ – முதல்வர்ஸ்டாலின், Written by – Sudharsan G | Last Updated : Nov 26, 2022, 02:56 PM ISTச்.
[9] இ.டிவி.பாரத், இந்தியத்துணைக்கண்டத்தின்வரலாறு, இனிதமிழ்நிலப்பரப்பில்இருந்துதான்தொடங்கிஎழுதப்படவேண்டும் – முதலமைச்சர்ஸ்டாலின், Published on May 9, 2022, 2.24 PM IST.
[11] The Hindu, ‘Dravida’ has no racial connotation: historian, T. RAMAKRISHNAN,April 15, 2017 12:51 am | Updated April 18, 2017 04:10 pm IST – CHENNAI.
இத்தகையபிரச்சினைகள்எழுவதேன், பின்னணிஎன்ன?: உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ் மஹாலில் பூட்டியிருக்கும் 22 அறைகளை ஆய்வு செய்ய, இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அண்மையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுத்தாக்கல் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி, பா.ஜ.க நிர்வாகியின் இந்த முன்னெடுப்பை வரவேற்றிருக்கிறார். ஊடகங்கள் இவ்வாறு, இத்தகைய பிரச்சினைகளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் மட்டும் செய்து வருகிறார்கள், அதனால், நாட்டில், மத-அமைதி சீர்குலைகிறது, கலவரங்களுக்கு வழிவகுக்கும், அதன் மூலம் தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் விவரிக்கப் படுகிறது. இது ராமஜன்மபூமி விவகாரத்திலிருந்தே செய்யப் படும் பிரச்சாரமாகி விட்டது. இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற அமைப்புகள் கூட அரசியல் சார்புடன், இதைப் பற்றி விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இதிலிருந்து சரித்திராசிரியர்கள், அகழாய்வு நிபுணர்கள் முதலியவர்களும் பாரபட்சத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் என்றே தெரிகிறது.
ஜெய்ப்பூர்அரசகுடும்பத்தின்வாரிசுமானதியாகுமாரிதாஜ்மஹால்இடம்தமக்குசொந்தமானதுஎன்கிறார்: இது தொடர்பாகப் பேசிய தியா குமாரி[1], “தாஜ்மஹால்கட்டப்படுவதற்குமுன்புஅந்தஇடத்தில்என்னஇருந்ததுஎன்பதுகுறித்துஆய்வுமேற்கொள்ளப்படவேண்டும். அங்குஎன்னஇருந்ததுஎன்பதுகுறித்துஅறிந்துகொள்ளமக்களுக்குஉரிமையுள்ளது. மேலும், தாஜ்மஹால்இருக்கும்அந்தநிலம்எங்கள்அரசகுடும்பத்துக்குச்சொந்தமானது. ஆனால், அதைஷாஜஹான்கையகப்படுத்திக்கொண்டார். அந்தநிலத்துக்குப்பதிலாகஇழப்பீடுவழங்கப்பட்டதாகக்கூறப்படுகிறது. அதைஎன்குடும்பம்ஏற்றுக்கொண்டதாஎனத்தெரியவில்லை. அப்போதுநீதிமன்றமும்இல்லைஎன்பதால்மேல்முறையீடுசெய்யவும்வாய்ப்பில்லாமல்போனது. அதுதொடர்பானபதிவேடுகளைதற்போதுஆய்வுசெய்துவருகிறோம். அந்தஆய்வுக்குப்பிறகுஎன்னநடவடிக்கைஎடுப்பதுஎனமுடிவெடுப்போம்,” எனத் தெரிவித்தார்[2]. இவர் இதற்கு முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்போது, “எங்கள் குடும்பம் ராமர் மகனின் வாரிசு. அதற்கான ஆதாரத்தைத் தேவையெனில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்” எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானதொழிற்நுட்பங்கள்மூலம்பலஉண்மைகளைகண்டறியலாம்: இப்பொழுது அகழாய்வு மற்றும் பூமியின் மேற்பரப்பு, கட்டிடங்களில் உள்ளமைப்பு முதலியவற்றை தோண்டாமலேயே, இடிக்காமலேயே, நவீன விஞ்ஞானகருவிகளைக் கொண்டு கண்டறிய முடியும். சாடிலைட் இமேஜரி மூலம் பழைய நதியோட்டப் பாதைகள் எல்லாம் கண்டுபிடிக்கப் பட்டு அலசப் படுகிறது. LIDAR மூலம் பூமிக்குள் இருக்கும் பொருட்கள், பட்டிடங்கள் முதலியவற்றக் கண்டு பிடிக்க முடிகிறது. அதாவது பூமியைட் தோண்டாமலேயே, பூமிக்குள் இருக்கும் பொருட்கள், கட்டிடங்கள் முதலியவை இருப்பதை கண்டுபிடிக்கலாம். அதை வைத்து தாஜ்மஹால் போன்றவற்றை ஆராயலாம். சுவர்களில், அஸ்திவாரங்களில் என்னவுள்ளன என்பதை சுலபமாக அறியலாம். முகலாயர், முஸ்லிம்கள் இருக்கின்ற ராஜபுத்திரர் கோட்டைகள், அரண்மனைகள், கோவில்கள் முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டு, மேறுபுறம் மாற்றியமைத்து மற்றும் முழுவதுமாக இடித்து கட்டியுள்ளனர் என்பது உண்மையாகும். டில்லி, ஆக்ரா, போன்ற இடங்களில் உள்ள கட்டிடங்களுக்குச் சென்று பார்த்தாலே, இவ்வுண்மை புலப்படும். இதனை யாரும் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
3-D முறையில்ஒருகட்டிடத்தைபலவாறுஆராயலாம்: இக்கால இளைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுனர்களும் விஞ்ஞான முறையில் உண்மைகளை அறிந்து வெளியிடலாம், அப்பொழுது உண்மை தெரிந்து விடும். ஆகாயத்திலிருந்து பலவித கோணங்களில் பார்க்கும் போது, உள்ளே பார்க்க முடியும். குறிப்பிட்ட புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டால், 3-D முறையில் தலைகீழாகவும் பார்க்கலாம், எல்லா கோணங்களில்ம் பார்க்கலாம், அத்தகைய புகைப் படங்களையும் முப்பரிமாணங்களில் உருவாக்கலாம். அதனை நீதிமன்றம் தடுக்கமுடியாது. ஆனால், அனுமதி கொடுக்கப் பட மாட்டாது. ஆனால்சரித்திரத்தை, சரித்திரத் தன்மையினை, நடந்த உண்மையினை ஏன் மறைக்க, மறுக்க, மறக்க வேண்டும், தெரிந்து கொண்டால் என்ன தவறும் இல்லை. MA படி, PhD ஆராய்ச்சி செய், தனியாக வேண்டுமானால் இது பற்றி விவாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லும் பொழுது, இந்த நவீனமுறைகளும் தெரிந்திருக்க வேண்டுமே?
பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில்விக்கிரங்கள்இருக்கிறதாஇல்லையா?: தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் விக்கிரங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை விட பூட்டப் பட்ட அறைகள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகின்றது! தாஜ் மஹாலின் குறுக்குவெட்டுத் தோற்றம், தரைப்படம், பக்கவாட்டு அமைப்பு போன்ற புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளன. மூன்றடுக்குகள் கொண்ட இந்த கட்டிடத்தில் பல அறைகள் இருப்பது தெரிகிறது. எனவே அவை பொதும்மக்களின் பார்வைக்கு ஏன் அனுமதிப்பதில்லை என்று தெரியவில்லை. அறைகஐ திறப்பதினால் என்ன பிரச்சினை அல்லது முன்னமே ASI பார்த்திருந்து, ஆவணப் படுத்தியிருந்தால், அவற்றை அறிக்கையாக வெளியிடலாமே? வருடாவருடம் Indian Archaeology – A Review என்ற அறிக்கைகள் கொண்ட தொகுப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது. அவற்றில், இவை இடம் பெற்றிருந்தால், யாரும் கேட்கப் போவதில்லை. அதி பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடலாம்.
கட்டிடங்கள் மாற்றிக் கட்டப் படுவது தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிதான்: மக்கள் தொடர்ந்து வாழும் பகுதிகளின் மேற்பரப்பு, அவர்களின் தினசரி வாழ்க்கையினால், தொடர்ந்து அதிகமாகத்தான் ஏறிவருகிறது, அதற்கு தாஜ்மஹால் விதிவிலக்கல்ல, அவ்விடமும் கைமாறி இருக்கிறது அல்லது ஆண்ட அரசுகள் ஆக்கிரமித்து சொந்தமாக்கிக் கொண்டிருக்கும். இப்பொழுது ஒருவன் ஒரு இடம் தனக்கு சொந்த என்றால், இப்பொழுதுள்ள சட்டத்தின் படி சொந்தம். ஆக்கிரமிப்பு அதில் வருவதில்லை! அதுபோல, முகலாயர்கள் ஆக்ராவை ஆக்கிரமித்துக் கொண்டபோது, அது அவர்களுக்கு சொந்தமில்லை, ராஜபுத்திரர்களிடமிருந்து தான் பிடிங்கிக் கொண்டார்கள்! இருக்கின்ற கட்டிடத்தை மாற்றி அமைப்பது என்பது சாதாரண விசயம். இப்பொழுதும் அஸ்திவாரம் நன்றாக இருந்தால் அதன் மீது தான் கட்டிடம் எழுப்பப் படும்! சுவர்கள், கூரை வரை நன்றாக, பலமாக இருந்தால், அவற்றின் மீதும் கட்டிடங்கள் கட்டுவது வழக்கும். மசூதிகளில் அவற்றைக் காணலாம்! ASIன் கீழ் வரும் புராதன கட்டிடங்கள் ஒரே மாதிரியாகத்தான் வழக்கத்தில் செயல்படுத்த வேண்டும். உள்ளே சென்று எல்லாவற்றையும் பார்க்க அனுமதிக்க வேண்டும். பல்லவரத்தில் கோட்டை விட்டதால், பஞ்சப் பாண்டவர் குகைக்கோவில், இபொழுது மசூதியாகி விட்டது! இது 70 ஆண்டுகளில் நடந்தது!
புரதான கட்டிடங்கள் மாற்றப் படுவதை சட்டப் படி தடுக்க வேண்டும்: பொதுவாக இப்பிரச்சினை இந்து-முஸ்லிம் விவகாரத்தில் முடியும், அமைதி குலையும், கலவரங்கள் உண்டாகும் என்ற பயத்தில் தான் தயக்கம்/ காட்டப் படுகிறது. ஆனால், பல்லாவம் போன்று பல புராதன இடங்கள், கட்டிடங்கள், கோவில்கள் இன்றும் ஆக்கிரமிக்கப் படுகின்ற, மாற்றப் படுகிறன. காஞ்சிபுரத்தில் ஒரு சிவன் கோவிலையே மறைத்து கோடவுனாக உபயோகித்து வந்ததும், சமீபத்தில் தெரிய வந்துள்ளது. அதனால், இத்தகைய சர்ச்சைக்குரிய இடங்களுக்குள் செல்ல தயக்கம் காட்டப் படுகிறது. பிறகு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப் படுகிறது, இருக்கின்ற தூண்கள், சிலைகள் முதலியவையும் அழிக்கப் படும், சரித்திரம் மறைக்கப் படும்! புராதன பட்டிடங்கள், நினைவிடங்கள் பற்றி சட்டங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவை முறையாக செயல்படுத்தப் படுவதில்லை. Infra-structure development என்று வரும் பொழுதும், பலமுறை, பலவழிகளில் வளைக்கப் படுகின்றன, சரிசெய்யப் படுகின்றன! பிறகு மதம், மதவாதம் என்றெல்லாம் வரும்பொழுது, செக்யூலரிஸம் வெள்ளையடிக்கப் பட்ட கம்யூனலிஸம் தான் வெல்லும், எல்லாமே மறக்க-மறுக்கப் படும்!
பி. என். ஓக்என்பவரின்புத்தகத்திலிருந்து, இந்தவிவகாரம்தொடர்கிறது: இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன, என்று “தமிழ் இந்து” பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்தது, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பி.என். ஓக் (P.N.Oak) என்பவர் 50 வருடங்களுக்கு முன்னரே இதைப் பற்றி பல புத்தகங்களை, புகைப் படங்களுடன் எழுதியுள்ளார்[1]. பிறகு V.S. கோட்போல் என்பவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்[2] மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார். அங்கிருக்கும் ஒரு கதவின் சிறிய துண்டை தேதிக்காக சோதனை செய்த போது, அது ஷாஜகான் காலத்திற்கு முந்தையது என்று வந்தது. மூன்றடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தில் – கீழ் மற்றும் மேலே செல்ல யாரையும் அனுமதிக்கப் படுவதில்லை. அதுதான், வருகின்ற சுற்றுலா மற்றும் இதர பயணிகளுக்கு வியப்பாக இருக்கிறது. கேட்டாலும், “செல்லக் கூடாது,” என்று தான் சொல்கின்றனர், காரணம் எதையும் சொல்வதில்லை. இதனால், பழைய புகைப் படங்களை பார்ப்பவர்களுக்கு, மற்றும் பி.என்.ஓக் புத்தகங்களைப் படித்தவர்களுக்கு, அவற்றின் மீது சந்தேகம் எழுகின்றது.
C-14 தேதி 1300ல்அக்கட்டிடம்கட்டப்பட்டதைஎடுத்துக்காட்டுகிறது – அடாவதுஷாஜகானுக்கு 300 வருடங்கள்முன்பு: தாஜ் மஹாலின் மரக்கதவிலிருந்து ஒரு துண்டை C-14 (carbon 14) சோதனைக்கு உட்படுத்தியபோது அது ஷாஜகானுக்கு (1592-1666) ஆண்ட காலம் (1628-1658) 300 ஆண்டுகள் முந்தைய தேதியைக் கொடுத்தது. அதாவது சுமார் 1300ம் ஆண்டு என்று வந்தது. ராஜபுத்திர ஆட்சியாளர்களின் விவரங்களின் படி,500 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு யமுனை ஆற்றங்கரையில் அரண்மனைகள், கோவில்கள் இருந்திருக்கின்றன. கட்டிடக் கலை வல்லுனர்கள் இ.பி.ஹேவல் (E.B.Havell), கெனோயர் (Mrs.Kenoyer), சர். டபிள்யூ. டபில்யூ.ஹன்டர் (Sir W W Hunter) போன்றோர், தாஜ் மஹாலின் தரைப்படம் வைத்துப் பார்த்தால், அது ஒரு இந்து கோவில் அமைப்பில் உள்ளது தெரிகிறது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இ.பி.ஹேவல், ஜாவாவில் உள்ள ஒரு “சண்டி சேவா கோவில்” அமைப்பில் உள்ளது என்று எடுத்துக் காட்டினார். இதே போல பல ஆவணங்கள் அது முன்னரே இருந்தது என்று தெரிகிறது. ஷாஜஹான் அல்லது அவர் காலத்தில் மற்ற கோவில்களைப் போல மாற்றியமைத்துக் கட்டப் பட்டிருக்க வேண்டும்.
சித்தாந்தங்களினால்உண்மைஅறியமுடியாது: புதிதாக எழுந்துள்ள சர்ச்சையின்படி அதன் அடித்தளத்தில் சுமார் 22 அறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது[3]. இதற்காக உத்தர பிரதேசம் அலகாபாதின் லக்னோ அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவர்களின் புகாரில் உள்ள உண்மைகளை அறிய, தாஜ்மகால் கட்டிய காலத்தில் எழுதப்பட்ட முகலாயர்களின் வரலாற்று நூல்களையும் ஆதாரங்களாகக் கொள்ளலாம்[4], என்று “தமிழ் இந்துவில்” கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது. இங்கு, “இந்துத்துவர்களின்,” என்ற வார்த்தை பிரயோகத்தைக் கவனிக்கலாம். எழுதியவர் பெயர், “ஆர்.ஷபிமுன்னா” என்ருள்ளது. இதனால், ஒரு முஸ்லிம், முஸ்லிம் போலத்தான் எழுதியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. தாஜ் மஹாலின் மேற்புற அல்லது வெளிகட்டுமானம் (super structure) ஷாஜகானால் செய்யப் பட்டிருக்கலாம், ஆனால், உள்ளே இருக்கும் கட்டிடம் முஸ்லிம்களுடையது அல்ல என்பதனை அங்கிருக்கும் ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தாஜ்மஹாலில்பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத்திறந்துஆய்வுசெய்யவேண்டும்: இந்த நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்[5]. அந்த வழக்கு இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது[6]. அப்போது பேசிய மனுதாரர் தரப்பு, “தாஜ்மஹால்தொடர்பானஉண்மையைஅறியும்உரிமைமக்களுக்குஉண்டு. அதன்அடிப்படையில்தாஜ்மஹாலில்பூட்டியுள்ள 22 அறைகளின்கதவும்திறக்கப்பட்டுஆய்வுசெய்யப்படவேண்டும். இதுதொடர்பாகதொல்லியல்துறையிடம்பலமனுக்கள்கொடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில்வரலாறுஅதன்வயதுதொடர்பாகஉள்ளசந்தேகங்கள்தொடர்பானசிலஆவணங்களையும்இணைத்துள்ளேன்,” என வாதிட்டார்.
எந்தஉரிமையில்தாஜ்மஹாலின்அறைக்கதவைத்திறக்கநீதிமன்றத்தைஅணுகியுள்ளீர்? – நீதிபதிகள்கேள்வி: இந்த வாதத்துக்குக் கடுமையான ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், “தாஜ்மஹால்வயதில்சந்தேகம்என்றால்அதைஷாஜஹான்கட்டவில்லைஎனக்குறிப்பிடுகிறீர்களா? தற்போதுதாஜ்மஹால்யார்கட்டியதுஎன்பதைஆய்வுசெய்யவாஇப்போதுகூடியிருக்கிறோம்? வரலாற்றுத்தரவுகள்தொடர்பாகப்பேசவிரும்பவில்லை. மேலும், எதன்அடிப்படையில், எந்தஉரிமையில்தாஜ்மஹாலின்அறைக்கதவைத்திறக்கநீதிமன்றத்தைஅணுகியுள்ளீர்?,” எனக் கேள்விகளைத் தொடர்ந்தனர்[7]. இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, “நாட்டின் குடிமகன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,” எனக் கூறியதற்கு நீதிபதிகள்[8], “தகவல்அறியும்உரிமைச்சட்டத்தின்அடிப்படையில்ஒருவிஷயம்தொடர்பானதரவுகளைத்தான்அறியமுடியும். ஆனால்ஆய்வுசெய்யஉத்தரவிடவேண்டும், ஆராய்ச்சிசெய்யஉத்தரவிடவேண்டும்எனஅந்தசட்டத்தில்எந்தஇடத்தில்கூறப்பட்டுள்ளது?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்[9]. இதற்கும் பதிலளித்த மனுதாரர், “உண்மைஅறியும்குழுஅமைத்துதாஜ்மஹால்குறித்தானசந்தேகங்கள்தீர்க்கப்படவேண்டும்மற்றும்நமக்குத்தவறானவரலாறுகற்றுத்தரப்பட்டிருந்தால்திருத்தப்படவேண்டும். மேலும், பூட்டப்பட்டஅறைகளுக்குள்செல்லஅனுமதிக்கவேண்டும்,” என வாதிட்டார்[10].
பொதுநலவழக்குதாக்கல்செய்யும்நடைமுறையைகேலிக்கூத்தாக்காதீர்கள்–என்றுகூறிவழக்குதள்ளுபடி: இந்த வாதத்துக்குப் பின் நீதிபதிகள்[11], “தாஜ்மஹால்தொடர்பானசந்தேகங்கள்இருந்தால்ஆய்வுசெய்யஎம்.ஏ, நெட், ஜே.ஆர்.எஃப்உள்ளிட்டபடிப்புகளில்உங்களைஇணைத்துக்கொண்டுஆய்வைமேற்கொள்ளுங்கள். அதில்அனுமதிமறுக்கப்பட்டால்நீதிமன்றம்வாருங்கள். இன்றுதாஜ்மஹால்அறையைதிறக்கசொல்கிறீர்கள், நாளைநீதிபதிகளின்அறைகளுக்குள்செல்லவும், ஆய்வுசெய்யவும்அனுமதிக்கவேண்டும்எனநீதிமன்றத்திடம்கோருவீர்களா? பொதுநலவழக்குதாக்கல்செய்யும்நடைமுறையைகேலிக்கூத்தாக்காதீர்கள். நீதிமன்றத்தில்இதுபோன்றுநடந்துகொள்ளாதீர்கள். மேலும், எந்ததகவல்அறியும்உரிமைச்சட்டத்தின்கீழ்ஆய்வுசெய்யஅனுமதிக்கவேண்டும்எனக்கூறினீர்கள்எனவிளக்கமளியுங்கள்,” எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். பின்னர் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[12].