Posts Tagged ‘பிணம் புதைத்தல்’

கிருஷ்ணதேவராயர் மலை, கிருஷ்ணகிரி மலை, சையது மலை ஆகுமா? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் கதை இங்கும் அரங்கேற்றப் படுகிறதா?

பிப்ரவரி28, 2022

கிருஷ்ணதேவராயர் மலை, கிருஷ்ணகிரி மலை, சையது மலை ஆகுமா? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் கதை இங்கும் அரங்கேற்றப் படுகிறதா?

சரித்திரம் ஆதாரம் இல்லாத பெயர் மாற்றம் ஏன்?: துலுக்கர் மற்றும் கிருத்துவர் இந்தியாவில் பல இடங்களில் தெருக்கள், கிராமங்கள், ஊர்கள் முதலியவற்றின் பெயர்களை மாற்றி வருகிறார்கள். இதை அவர்கள் திட்டத்துடன் செயல் படுத்தி வௌகிறார்கள். முதலில், தாமாகவே முகவரியில் பாஷா தெரு, சையது வீதி, பெத்தேல் நகர், மைக்கேட்பட்டி, என்றெல்லாம் செய்வர். கடிதங்கள், ஆவணங்களில் அவ்வாறே குறிப்பிடுவர். பிறகு ஓரளவுக்கு தாக்கம் ஏற்பட்டவுடன், அரசு, அதிகாரம் ஆட்சி, கட்சி போன்றவற்றில் உள்லவர்களின் உதவியுடன், மாநில அரசு ஆவணங்களிலும் அவ்வாறே பெயர் மாற்றங்களை செய்வர். கடைகளின் போர்டுகளில் அவ்வாறே குறிப்பிடுவர். தமிழகத்தில் உள்ள ஊர்கள் எல்லாம் தொன்மையானவை, ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் இந்தியா முழுவதிலிருந்தும் பற்பல ஞானிஅகள், ரிஷிகள், முனிவர், பெரியார் என்று வந்துள்ளனர். அதனால், ஒவ்வொரு ஊரின் பெயரின் பின்னாலும், 2000, 21000 வருடங்கள் சரித்திரம் உள்ளது. அதனை இவ்வாறு பெயர் மாற்றத்தின் மூலம் அழிப்பது மறைப்பது முதலியவை மிகப்பெரிய குற்றம் ஆகும். மீபத்தில் மைக்கேல்பட்டி விவகாரத்தில், இத்தகைய பெயர் மாற்ற விவகாரம், நீதிபதியின் கவனதிற்கும் சென்றுள்ளது.

திருக்காட்டுப் பள்ளி, மைக்கேல்பட்டி ஆனதே கிறிஸ்தவ மதமாற்றத்திற்குச் சான்று:

திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட அக்னீஸ்வரர் திருக்கோவில் இங்கு உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது. இன்றைய செக்யூலார் மற்றும் நாத்திக-இந்து விரோத ஆட்சியில், தமிழக புராதன இடங்கள், ஊர்கள், கிராமங்கள் முதலியவற்றின் பெயர்க்ள் மாற்றப் படுவதிலிருந்தே, அங்கே எவ்வாறு துலுக்கர் மற்றும் கிருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில், திடீரென்று தஞ்சாவூர், கும்பகோணம், திருநெல்வேலி, கன்யாகுமரி போன்ற இடங்களில் அல்லாப்பேட்டை, மொஹம்மது நகர், அஹமது நகர், பெத்தேல் நகர், மைக்கேல் பட்டி என்றெல்லாம் தோன்றி விட முடியாது. இது, மக்கள் தொகை, ஜனத்தொகை மாற்றம், புவியியல், சரித்திரம் மற்றும் உள்ளூர் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் என்று எல்லாவற்றியும் மாற்றும், மறைக்கும் வேலைகள் ஆகும்[3]. இதற்கு உள்ளூர் அதிகாரிகளும் ஒத்துழைத்துள்ளார்கள் என்று தெரிகிறது[4]. பத்திரப் பதிவுகளில், 200 ஆண்டுகளாக இருந்து வரும் பெயர்களை இன்றும் உபயோகப் படுத்தப் படுகிறது. இல்லையென்றால், மூல்ங்களை அறிய முடியாது, சரிபார்க்கவும் முடியாது. இல்லையென்றால், அவ்வாறேல்லாம் பெயர்களை மாற்றி விட முடியாது. அவை அரசு ஆவணங்களிலும் இடம் பெற முடியாது

கிருஷ்ணதேவராய மலை, கிருஷ்ணகிரி மலை சையது மலை ஆகாது: கிருஷ்ணகிரிக் கோட்டை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரியில் உள்ள உள்ள ஒரு மலைக் கோட்டை ஆகும். இது இம்மாவட்டத்தில் உள்ள வலுவான கோட்டைகளுள் ஒன்று. இது ஒரு மலைக் கோட்டை. சுவர்களும், கொத்தளங்களும் பெருமளவுக்கு நல்ல நிலையில் உள்ள இக்கோட்டை தற்போது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஆகும். இக்கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் மேலாண்மையின் கீழ் உள்ளது. நகரத்தின் பழைய பேட்டையிலிருந்து மலை உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இக்கோட்டையுள்ள மலையானது கிருஷ்ணதேவராயர் மலை என்று அழைப்படுகிறது. ஆனால், திடீஎன்று, சையத் பாஷா மலை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டு இப்பொழுது அழைக்கப்படுகிறது. இந்த மலையில் சையத் பாஷா என்ற இசுலாமியரின் உடல் புதைக்கப் பட்டுள்ளதாக, ஒரு தர்கா கட்டப்பட்டுள்ளது. இதனால் இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது, என்று விளக்கமும் கொடுக்கப் படுகிறது. இப்படி கட்டுக்கதைகளை உருவாக்கி, மலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு, அடாவடித் தனம் செய்வது, கலவரங்களை உண்டாக்குவது துலுக்கர்-கிருத்துவர்களின் திட்டமாக உள்ளது. ஆனால், ஊடக பலம், பிரச்சார யுக்தி, அனைத்துலக பணபலம்-ஆதரவு முதலியவற்றால் இந்துக்களின் மீது ப்ழி போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விஜயநகர காலத்தில் கட்டப் பட்ட கோட்டை, துலுக்க பெயரில் தெரிய வைப்பது சரித்திர துரோகம் ஆகும்: இக்கோட்டை விஜயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது. அக்காலத்தில் “பரமகால்” என அழைக்கப்பட்ட இப்பகுதியையும் கோட்டையையும் ஜெகதேவிராயர் என்பவர் போர்களில் அவர் காட்டிய வீரத்துக்காக விஜயநகரப் பேரரசிடம் இருந்து பரிசாகப் பெற்றுக்கொண்டார். இவர் ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டுவந்தார். ஆதலால், துலுக்கருக்கும், இக்கோட்டைக்கும், மலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1670ல் இக்கோட்டையைச் சத்திரபதி சிவாஜி கைப்பற்றிக்கொண்டார் 17 ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் சுல்தான் கீழிருந்த பரமகாலும் கோட்டையும் ஷாஜிக்கு (Shaji) என்பவனுக்கு வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஷாஜி பெங்களூரைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டார். இவர் இறந்த பின்னர் இளைய மகன் வியாங்கோஜி அரசனானார்., என்பதெல்லாம் பிறகு உண்டான நிகழ்வுகள்.

ஆட்சிஅதிகாரம் மாறுவதால் கோட்டை பெயர் மாறாது: 18ம் நூற்றாண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராய உடையாரின் கட்டளைப்படி ஐதர் அலி இக்கோட்டையையும் பரமகாலையும் கைப்பற்றினார். பின்னர் மைசூர் அரசரிடம் இருந்து பிரிந்த ஐதர் அலி ஶ்ரீரங்கப்பட்டினத்தைத் தலைநகரமாக்கி ஆண்டபோது இக்கோட்டையையும் தன்வசமே வைத்துக்கொண்டார். முதலாம் ஆங்கில மைசூர்ப் போரின்போது இடம்பெற்ற நீண்ட முற்றுகையைத் தொடர்ந்து இக்கோட்டை பிரிடிஷார் கைப்பற்றிக் கொண்டனர். 1791 ஆம் ஆண்டில், மூன்றாவது ஆங்கில மைசூர்ப் போரின்போது, திப்பு சுல்தானின் வசம் இருந்த இக்கோட்டையை தளபதி மாக்ஸ்வெல்லின் தலைமையிலான பிரிடிஷ் படைகள் தாக்கின. ஆனாலும் பிரிடிஷ் படைகள் கடும் இழப்புகளுடன் பின்வாங்கவேண்டி ஏற்பட்டது. 1792ல் ஶ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தப்படி இக்கோட்டை பிரிடிஷாரிடம் சென்றது. மேலும், ஒரு இடத்தில் நடக்கும் தீவிரவாத நிகழ்வுகளை மறைத்து, வெள்ளையடித்து, தம்மை “புனிதர்” போல காட்டிக் கொள்ளவும் அத்தகைய பெயர்-மாற்றம் மோசடிகளை செய்து வருகின்றனர். ஆமாம், இதே மலையில், இஸ்லாமிய தீவிரவாதிகள் மறைந்து கொண்டு, வெடிகுண்டுகள் தயாரித்தனர், பயிற்சியும் கொடுத்தனர்.

படம் – இந்து முன்னணி – நன்றி

வங்காள பயங்கரவாதிகள் இம்மலையில் வந்து தங்கியிருந்தனர்: மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டும், பீகார் மாநிலம் புத்தகயாவில் கடந்த 2018-ம் ஆண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. அவ்வழக்கில், ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டான்[1]. குற்றப்பத்திரிகையில், இந்திய அரசு மற்றும் வங்கதேச அரசுகளுக்கு எதிராக போர் தொடுக்க, ஜமாத் உல் முஜாஹிதீன், பங்களாதேஷ் அமைப்பு சதி செய்து வருவதாகவும், அதில் ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் முக்கிய உறுப்பினர் என்றும் கூறப்பட்டது[2]. இந்த தாக்குதலில் வங்கதேச நாட்டை சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாத்உல் முஜாஹிதீன் வங்காளதேசம் (ஜே.எம்.பி.) என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த ஜே.எம்.பி. அமைப்பின் தலைவர் கவுசா என்கிற முனீர் என்கிற ஜஹிதுல் இஸ்லாம் (வயது 39) என்பவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி, 2019 அன்று கைது செய்தனர். விசாரணையில் அவர், வங்காளதேசத்தில், ஜமால்பூர் மாவட்டம், சோகாவிக்கே கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், பர்த்வான், புத்தகயா ஆகிய இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், கர்நாடக மாநிலம், சோலதேவனஹள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பு வழக்கு உள்பட சில வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

படம் – இந்து முன்னணி – நன்றி

இரண்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் இம்மலையில் தங்கியிருந்தது தெரிந்தது: தொடர் விசாரணையில் கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணதேவராயர் என்கிற சையத் பாஷா மலையில் பயங்கரவாதி கவுசா பதுங்கி இருந்தபோது, வெடிகுண்டுகள் தயாரித்ததும், வெடிகுண்டு பரிசோதனை செய்ததும் தெரியவந்தது[3]. இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் சி.வி.சுப்பாரெட்டி தலைமையில் 4 வாகனங்களில் 14 பேர் அடங்கிய குழுவினர், பயங்கரவாதி கவுசாவை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்[4]. விசாரணையில் இவர் மட்டுமல்ல மேலும் சில பயங்கரவாதிகள் கிருஷ்ணகிரி மலையில் 10 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி பெற்றது தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிந்தது[5]. மேலும் மலையில் இருந்து வெடிபொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு சோதனை நடத்த பயன்படுத்திய பைப்புகள், 4 பேட்டரி, வயர்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர். இந்த வெடிபொருட்களை சப்ளை செய்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடந்தது[6].

படம் – இந்து முன்னணி – நன்றி

இந்து முன்னணிக்கு நன்றி: மேலே குறிப்பிட்ட விவரங்களிலிருந்து, துலுக்கர் இவ்விசயத்தில் எவ்வாறு செயல்பட்டனர் என்பது வெளிப்படுகிறது. இந்து முன்னணி இதற்காக போராடியுள்ளது. அதனால், அவர்களுக்கு உரிய நன்றியை சொல்லியாக வேண்டும். களத்தில் இறங்கி போராடும் இந்துவீரர்கள் அவர்கள். சரித்திரத்தையும் காக்கப் பாராடுகிறார்கள். குமுதம் ரிப்போர்டர், மார்ச்1 2022 இவ்விரங்களைக் கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவராக இருந்த பரிதா நவாப் பெயர் மாற்றம் தீர்மானத்தை செய்தார். பெயர் மாற்றப் பின்னணியில் திமுக மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், பரிதா நவாப் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் உள்ளன. 2010க்குப் பிறகு எந்த பிரச்சினையும் இல்லை. இப்பொழுது, ம்றுபடியும் பெயர்மாற்ற முயற்சி, தீர்மானம் என்று வந்துள்ளதால், விவகாரம் ஆகியுள்ளது. 2006ல் லோகோ / சின்னம் பெயரில், கூகுளில் அவ்வாறான பெயரை வைத்து ஆரம்பிக்கிறர்கள் என்று தெரிகிறது. எனவே, கூகுள் பெயர்களையும் கவனிக்க வேண்டும் என்றாகிறது.

.

© வேதபிரகாஷ்

28-02-2022

படம் – இந்து முன்னணி – நன்றி

[1] தினமலர், கிருஷ்ணகிரி மலையில் வெடிகுண்டு? தீவிரவாதியை அழைத்து வந்து விசாரணை,  Added : ஜூலை 07, 2019  10:15.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2314699

[3] மாலைமலர், கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றது அம்பலம், பதிவு: செப்டம்பர் 25, 2019 11:37 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2019/09/25113704/1263231/militants-trained-in-Krishnagiri-mountain.vpf

[5] தமிழ்.இந்து, கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்துவந்து தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல், செய்திப்பிரிவு, Published : 24 Sep 2019 08:40 AM; Last Updated : 24 Sep 2019 08:40 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/517052-investigation-on-terrorist-in-krishnagiri.html

படம் – இந்து முன்னணி – நன்றி