Archive for the ‘பாதுகாப்பு’ Category

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாத-விவாதங்கள்- C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது – விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்தால் உண்மைகள் விளங்கும்! (2)

மே14, 2022

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாதவிவாதங்கள்– C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறதுவிஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்தால் உண்மைகள் விளங்கும்! (2)

இத்தகைய பிரச்சினைகள் எழுவதேன், பின்னணி என்ன?: உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ் மஹாலில் பூட்டியிருக்கும் 22 அறைகளை ஆய்வு செய்ய, இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அண்மையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுத்தாக்கல் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி, பா.ஜ.க நிர்வாகியின் இந்த முன்னெடுப்பை வரவேற்றிருக்கிறார். ஊடகங்கள் இவ்வாறு, இத்தகைய பிரச்சினைகளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் மட்டும் செய்து வருகிறார்கள், அதனால், நாட்டில், மத-அமைதி சீர்குலைகிறது, கலவரங்களுக்கு வழிவகுக்கும், அதன் மூலம் தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் விவரிக்கப் படுகிறது. இது ராமஜன்மபூமி விவகாரத்திலிருந்தே செய்யப் படும் பிரச்சாரமாகி விட்டது.  இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற அமைப்புகள் கூட அரசியல் சார்புடன், இதைப் பற்றி விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இதிலிருந்து சரித்திராசிரியர்கள், அகழாய்வு நிபுணர்கள் முதலியவர்களும் பாரபட்சத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் என்றே தெரிகிறது.

ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி தாஜ் மஹால் இடம் தமக்கு சொந்தமானது என்கிறார்: இது தொடர்பாகப் பேசிய தியா குமாரி[1], “தாஜ் மஹால் கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு என்ன இருந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுள்ளது. மேலும், தாஜ் மஹால் இருக்கும் அந்த நிலம் எங்கள் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. ஆனால், அதை ஷாஜஹான் கையகப்படுத்திக்கொண்டார். அந்த நிலத்துக்குப் பதிலாக இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதை என் குடும்பம் ஏற்றுக்கொண்டதா எனத் தெரியவில்லை. அப்போது நீதிமன்றமும் இல்லை என்பதால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பில்லாமல் போனது. அது தொடர்பான பதிவேடுகளை தற்போது ஆய்வு செய்துவருகிறோம். அந்த ஆய்வுக்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுப்பது என முடிவெடுப்போம்,” எனத் தெரிவித்தார்[2]. இவர் இதற்கு முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்போது, “எங்கள் குடும்பம் ராமர் மகனின் வாரிசு. அதற்கான ஆதாரத்தைத் தேவையெனில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்” எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான தொழிற்நுட்பங்கள் மூலம் பல உண்மைகளை கண்டறியலாம்: இப்பொழுது அகழாய்வு மற்றும் பூமியின் மேற்பரப்பு, கட்டிடங்களில் உள்ளமைப்பு முதலியவற்றை தோண்டாமலேயே, இடிக்காமலேயே, நவீன விஞ்ஞானகருவிகளைக் கொண்டு கண்டறிய முடியும். சாடிலைட் இமேஜரி மூலம் பழைய நதியோட்டப் பாதைகள் எல்லாம் கண்டுபிடிக்கப் பட்டு அலசப் படுகிறது. LIDAR மூலம் பூமிக்குள் இருக்கும் பொருட்கள், பட்டிடங்கள் முதலியவற்றக் கண்டு பிடிக்க முடிகிறது. அதாவது பூமியைட் தோண்டாமலேயே, பூமிக்குள் இருக்கும் பொருட்கள், கட்டிடங்கள் முதலியவை இருப்பதை கண்டுபிடிக்கலாம். அதை வைத்து தாஜ்மஹால் போன்றவற்றை ஆராயலாம். சுவர்களில், அஸ்திவாரங்களில் என்னவுள்ளன என்பதை சுலபமாக அறியலாம். முகலாயர், முஸ்லிம்கள் இருக்கின்ற ராஜபுத்திரர் கோட்டைகள், அரண்மனைகள், கோவில்கள் முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டு, மேறுபுறம் மாற்றியமைத்து மற்றும் முழுவதுமாக இடித்து கட்டியுள்ளனர் என்பது உண்மையாகும். டில்லி, ஆக்ரா, போன்ற இடங்களில் உள்ள கட்டிடங்களுக்குச் சென்று பார்த்தாலே, இவ்வுண்மை புலப்படும். இதனை யாரும் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

3-D முறையில் ஒரு கட்டிடத்தை பலவாறு ஆராயலாம்: இக்கால இளைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுனர்களும் விஞ்ஞான முறையில் உண்மைகளை அறிந்து வெளியிடலாம், அப்பொழுது உண்மை தெரிந்து விடும். ஆகாயத்திலிருந்து பலவித கோணங்களில் பார்க்கும் போது, உள்ளே பார்க்க முடியும். குறிப்பிட்ட புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டால், 3-D முறையில் தலைகீழாகவும் பார்க்கலாம், எல்லா கோணங்களில்ம் பார்க்கலாம், அத்தகைய புகைப் படங்களையும் முப்பரிமாணங்களில் உருவாக்கலாம். அதனை நீதிமன்றம் தடுக்கமுடியாது. ஆனால், அனுமதி கொடுக்கப் பட மாட்டாது.  ஆனால்சரித்திரத்தை, சரித்திரத் தன்மையினை, நடந்த உண்மையினை ஏன் மறைக்க, மறுக்க, மறக்க வேண்டும், தெரிந்து கொண்டால் என்ன தவறும் இல்லை. MA  படி, PhD ஆராய்ச்சி செய், தனியாக வேண்டுமானால் இது பற்றி விவாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லும் பொழுது, இந்த நவீனமுறைகளும் தெரிந்திருக்க வேண்டுமே?

பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் விக்கிரங்கள் இருக்கிறதா இல்லையா?: தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் விக்கிரங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை விட பூட்டப் பட்ட அறைகள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகின்றது! தாஜ் மஹாலின் குறுக்குவெட்டுத் தோற்றம், தரைப்படம், பக்கவாட்டு அமைப்பு போன்ற புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளன. மூன்றடுக்குகள் கொண்ட இந்த கட்டிடத்தில் பல அறைகள் இருப்பது தெரிகிறது. எனவே அவை பொதும்மக்களின் பார்வைக்கு ஏன் அனுமதிப்பதில்லை என்று தெரியவில்லை. அறைகஐ திறப்பதினால் என்ன பிரச்சினை அல்லது முன்னமே ASI பார்த்திருந்து, ஆவணப் படுத்தியிருந்தால், அவற்றை அறிக்கையாக வெளியிடலாமே? வருடாவருடம் Indian Archaeology – A Review என்ற அறிக்கைகள் கொண்ட தொகுப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது. அவற்றில், இவை இடம் பெற்றிருந்தால், யாரும் கேட்கப் போவதில்லை. அதி பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடலாம்.

கட்டிடங்கள் மாற்றிக் கட்டப் படுவது தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிதான்: மக்கள் தொடர்ந்து வாழும் பகுதிகளின் மேற்பரப்பு, அவர்களின் தினசரி வாழ்க்கையினால், தொடர்ந்து அதிகமாகத்தான் ஏறிவருகிறது, அதற்கு தாஜ்மஹால் விதிவிலக்கல்ல, அவ்விடமும் கைமாறி இருக்கிறது அல்லது ஆண்ட அரசுகள் ஆக்கிரமித்து சொந்தமாக்கிக் கொண்டிருக்கும். இப்பொழுது ஒருவன் ஒரு இடம் தனக்கு சொந்த என்றால், இப்பொழுதுள்ள சட்டத்தின் படி சொந்தம். ஆக்கிரமிப்பு அதில் வருவதில்லை! அதுபோல, முகலாயர்கள் ஆக்ராவை ஆக்கிரமித்துக் கொண்டபோது, அது அவர்களுக்கு சொந்தமில்லை, ராஜபுத்திரர்களிடமிருந்து தான் பிடிங்கிக் கொண்டார்கள்! இருக்கின்ற கட்டிடத்தை மாற்றி அமைப்பது என்பது சாதாரண விசயம். இப்பொழுதும் அஸ்திவாரம் நன்றாக இருந்தால் அதன் மீது தான் கட்டிடம் எழுப்பப் படும்! சுவர்கள், கூரை வரை நன்றாக, பலமாக இருந்தால், அவற்றின் மீதும் கட்டிடங்கள் கட்டுவது வழக்கும். மசூதிகளில் அவற்றைக் காணலாம்! ASIன் கீழ் வரும் புராதன கட்டிடங்கள் ஒரே மாதிரியாகத்தான் வழக்கத்தில் செயல்படுத்த வேண்டும். உள்ளே சென்று எல்லாவற்றையும் பார்க்க அனுமதிக்க வேண்டும். பல்லவரத்தில் கோட்டை விட்டதால், பஞ்சப் பாண்டவர் குகைக்கோவில், இபொழுது மசூதியாகி விட்டது! இது 70 ஆண்டுகளில் நடந்தது!

புரதான கட்டிடங்கள் மாற்றப் படுவதை சட்டப் படி தடுக்க வேண்டும்: பொதுவாக இப்பிரச்சினை இந்து-முஸ்லிம் விவகாரத்தில் முடியும், அமைதி குலையும், கலவரங்கள் உண்டாகும் என்ற பயத்தில் தான் தயக்கம்/ காட்டப் படுகிறது. ஆனால், பல்லாவம் போன்று பல புராதன இடங்கள், கட்டிடங்கள், கோவில்கள் இன்றும் ஆக்கிரமிக்கப் படுகின்ற, மாற்றப் படுகிறன. காஞ்சிபுரத்தில் ஒரு சிவன் கோவிலையே மறைத்து கோடவுனாக உபயோகித்து வந்ததும், சமீபத்தில் தெரிய வந்துள்ளது. அதனால், இத்தகைய சர்ச்சைக்குரிய இடங்களுக்குள் செல்ல தயக்கம் காட்டப் படுகிறது. பிறகு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப் படுகிறது, இருக்கின்ற தூண்கள், சிலைகள் முதலியவையும் அழிக்கப் படும், சரித்திரம் மறைக்கப் படும்! புராதன பட்டிடங்கள், நினைவிடங்கள் பற்றி சட்டங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவை முறையாக செயல்படுத்தப் படுவதில்லை. Infra-structure development  என்று வரும் பொழுதும், பலமுறை, பலவழிகளில் வளைக்கப் படுகின்றன,  சரிசெய்யப் படுகின்றன! பிறகு மதம், மதவாதம் என்றெல்லாம் வரும்பொழுது, செக்யூலரிஸம் வெள்ளையடிக்கப் பட்ட கம்யூனலிஸம் தான் வெல்லும், எல்லாமே மறக்க-மறுக்கப் படும்!

© வேதபிரகாஷ்

14-05-2022


[1] விகடன், தாஜ் மஹால் நிலம் எங்களுக்குச் சொந்தமானதுஷாஜஹான் அபகரித்துக்கொண்டார்!” – பாஜக எம்பி தியா குமாரி, VM மன்சூர் கைரி, Published:11 May 2022 7 PMUpdated:11 May 2022 7 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-mp-diya-kumari-claimed-that-taj-mahal-land-belonged-to-her-family

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாத-விவாதங்கள்- C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது (1)

மே14, 2022

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாதவிவாதங்கள்– C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது (1)

பி. என். ஓக் என்பவரின் புத்தகத்திலிருந்து, இந்த விவகாரம் தொடர்கிறது: இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன, என்று “தமிழ் இந்து” பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்தது, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பி.என். ஓக் (P.N.Oak) என்பவர் 50 வருடங்களுக்கு முன்னரே இதைப் பற்றி பல புத்தகங்களை, புகைப் படங்களுடன் எழுதியுள்ளார்[1]. பிறகு V.S. கோட்போல் என்பவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்[2] மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார். அங்கிருக்கும் ஒரு கதவின் சிறிய துண்டை தேதிக்காக சோதனை செய்த போது, அது ஷாஜகான் காலத்திற்கு முந்தையது என்று வந்தது. மூன்றடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தில் – கீழ் மற்றும் மேலே செல்ல யாரையும் அனுமதிக்கப் படுவதில்லை. அதுதான், வருகின்ற சுற்றுலா மற்றும் இதர பயணிகளுக்கு வியப்பாக இருக்கிறது. கேட்டாலும், “செல்லக் கூடாது,” என்று தான் சொல்கின்றனர், காரணம் எதையும் சொல்வதில்லை. இதனால், பழைய புகைப் படங்களை பார்ப்பவர்களுக்கு, மற்றும் பி.என்.ஓக் புத்தகங்களைப் படித்தவர்களுக்கு, அவற்றின் மீது சந்தேகம் எழுகின்றது.

C-14 தேதி 1300ல் அக்கட்டிடம் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறதுஅடாவது ஷாஜகானுக்கு 300 வருடங்கள் முன்பு: தாஜ் மஹாலின் மரக்கதவிலிருந்து ஒரு துண்டை C-14 (carbon 14) சோதனைக்கு உட்படுத்தியபோது அது ஷாஜகானுக்கு (1592-1666) ஆண்ட காலம் (1628-1658) 300 ஆண்டுகள் முந்தைய தேதியைக் கொடுத்தது. அதாவது சுமார் 1300ம் ஆண்டு என்று வந்தது. ராஜபுத்திர ஆட்சியாளர்களின் விவரங்களின் படி,500 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு யமுனை ஆற்றங்கரையில் அரண்மனைகள், கோவில்கள் இருந்திருக்கின்றன. கட்டிடக் கலை வல்லுனர்கள் இ.பி.ஹேவல் (E.B.Havell), கெனோயர் (Mrs.Kenoyer), சர். டபிள்யூ. டபில்யூ.ஹன்டர் (Sir W W Hunter) போன்றோர், தாஜ் மஹாலின் தரைப்படம் வைத்துப் பார்த்தால், அது ஒரு இந்து கோவில் அமைப்பில் உள்ளது தெரிகிறது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இ.பி.ஹேவல், ஜாவாவில் உள்ள ஒரு “சண்டி சேவா கோவில்” அமைப்பில் உள்ளது என்று எடுத்துக் காட்டினார். இதே போல பல ஆவணங்கள் அது முன்னரே இருந்தது என்று தெரிகிறது. ஷாஜஹான் அல்லது அவர் காலத்தில் மற்ற கோவில்களைப் போல மாற்றியமைத்துக் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

சித்தாந்தங்களினால் உண்மை அறிய முடியாது: புதிதாக எழுந்துள்ள சர்ச்சையின்படி அதன் அடித்தளத்தில் சுமார் 22 அறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது[3]. இதற்காக உத்தர பிரதேசம் அலகாபாதின் லக்னோ அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவர்களின் புகாரில் உள்ள உண்மைகளை அறிய, தாஜ்மகால் கட்டிய காலத்தில் எழுதப்பட்ட முகலாயர்களின் வரலாற்று நூல்களையும் ஆதாரங்களாகக் கொள்ளலாம்[4], என்று “தமிழ் இந்துவில்” கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது. இங்கு, “இந்துத்துவர்களின்,” என்ற வார்த்தை பிரயோகத்தைக் கவனிக்கலாம். எழுதியவர் பெயர், “ஆர்.ஷபிமுன்னா” என்ருள்ளது. இதனால், ஒரு முஸ்லிம், முஸ்லிம் போலத்தான் எழுதியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. தாஜ் மஹாலின் மேற்புற அல்லது வெளிகட்டுமானம் (super structure) ஷாஜகானால் செய்யப் பட்டிருக்கலாம், ஆனால், உள்ளே இருக்கும் கட்டிடம் முஸ்லிம்களுடையது அல்ல என்பதனை அங்கிருக்கும் ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்: இந்த நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்[5]. அந்த வழக்கு இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது[6]. அப்போது பேசிய மனுதாரர் தரப்பு, “தாஜ்மஹால் தொடர்பான உண்மையை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. அதன் அடிப்படையில் தாஜ்மஹாலில் பூட்டியுள்ள 22 அறைகளின் கதவும் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக தொல்லியல் துறையிடம் பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் வரலாறு அதன் வயது தொடர்பாக உள்ள சந்தேகங்கள் தொடர்பான சில ஆவணங்களையும் இணைத்துள்ளேன்,” என வாதிட்டார்.

எந்த உரிமையில் தாஜ்மஹாலின் அறைக்கதவைத் திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்? – நீதிபதிகள் கேள்வி: இந்த வாதத்துக்குக் கடுமையான ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், “தாஜ்மஹால் வயதில் சந்தேகம் என்றால் அதை ஷாஜஹான் கட்டவில்லை எனக் குறிப்பிடுகிறீர்களா? தற்போது தாஜ்மஹால் யார் கட்டியது என்பதை ஆய்வு செய்யவா இப்போது கூடியிருக்கிறோம்? வரலாற்றுத் தரவுகள் தொடர்பாகப் பேச விரும்பவில்லை. மேலும், எதன் அடிப்படையில், எந்த உரிமையில் தாஜ்மஹாலின் அறைக்கதவைத் திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்?,” எனக் கேள்விகளைத் தொடர்ந்தனர்[7]. இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, “நாட்டின் குடிமகன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,” எனக் கூறியதற்கு நீதிபதிகள்[8], “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு விஷயம் தொடர்பான தரவுகளைத் தான் அறியமுடியும். ஆனால் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும், ஆராய்ச்சி செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த சட்டத்தில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்[9]. இதற்கும் பதிலளித்த மனுதாரர், “உண்மை அறியும் குழு அமைத்து தாஜ்மஹால் குறித்தான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் நமக்குத் தவறான வரலாறு கற்றுத்தரப்பட்டிருந்தால் திருத்தப்பட வேண்டும். மேலும், பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்,” என வாதிட்டார்[10].

பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக்கூத்தாக்காதீர்கள்என்று கூறி வழக்கு தள்ளுபடி: இந்த வாதத்துக்குப் பின் நீதிபதிகள்[11], “தாஜ்மஹால் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் ஆய்வு செய்ய எம்., நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் உங்களை இணைத்துக் கொண்டு ஆய்வை மேற்கொள்ளுங்கள். அதில் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றம் வாருங்கள். இன்று தாஜ்மஹால் அறையை திறக்க சொல்கிறீர்கள், நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக்கூத்தாக்காதீர்கள். நீதிமன்றத்தில் இது போன்று நடந்துகொள்ளாதீர்கள். மேலும், எந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறினீர்கள் என விளக்கமளியுங்கள்,” எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். பின்னர் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[12].

© வேதபிரகாஷ்

14-05-2022


[1]  அவரது புத்தகங்கள் இன்றும் பிரசித்தியாகவே இருக்கின்றன. இணைதளங்களில் இதுவரை லட்சக்கணக்கில் டவுன்லோன் செய்யப் பட்டுவருகின்றன.

P. N. Oak, Taj Mahal was a Rajput Palace, Hindi Sahitya Assad, New Delhi, 2003.

[2] Godbole, V.S, The Origin of the Taj Mahal, RIBA, Jornal of Rooyal Institute of British Architects, 87.9, 1980, pp. 23-23.

………………………, Taj Mahal?: A Simple Analysis of a Great Deception, Itihas Patrika Prakashan 1986, 2007.

[3] தமிழ்.இந்து, தாஜ்மகாலை வைத்து அரசியல் வேண்டாமே!, ஆர்.ஷபிமுன்னா, Published : 13 May 2022 06:34 AM; Last Updated : 13 May 2022 06:34 AM.

[4] https://www.hindutamil.in/news/opinion/columns/799377-do-not-keep-the-taj-mahal-and-do-politics.html

[5] விகடன், இன்று தாஜ்மஹால்நாளை நீதிபதிகள் அறையை திறக்க சொல்வீர்களா?” – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம், VM மன்சூர் கைரி, Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM

[6] https://www.vikatan.com/news/politics/today-taj-mahal-room-will-you-tell-me-to-open-the-judges-room-tomorrow-allahabad-court

[7] தினமலர், தாஜ்மஹாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி,  Updated : மே 12, 2022  19:55 |  Added : மே 12, 2022  19:53.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3028151

[9] தினாணி, தாஜ்மஹால் மீதான பொதுநல வழக்கு தள்ளுபடி, By DIN  |   Published On : 12th May 2022 05:00 PM  |   Last Updated : 12th May 2022 05:00

[10] https://www.dinamani.com/india/2022/may/12/allahabad-hc-dismisses-petition-on-taj-mahal-3843186.html

[11] தமிழ்.ஏபிபி.லைவ், விட்டா நீதிபதிகளோட அறைகளையும் திறக்க சொல்லுவீங்க” : தாஜ்மஹாலின் அறைகளை திறக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி, By: ABP NADU | Published : 13 May 2022 08:32 PM (IST)|Updated : 13 May 2022 08:38 PM (IST).

[12] https://tamil.abplive.com/news/india/taj-mahal-case-allahabad-high-court-rejects-petition-seeking-open-22-closed-doors-52003

ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியாரை (1894-1994) பல்லக்கை விடுத்து, காரில் செல்லுமாறு ஈவேரா (1879-1973) செய்தார் என்ற கதை எப்படி, ஏன், அவ்வாறு, எதற்காக உலா வருகிறது! (2)

மே5, 2022

ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியாரை (1894-1994) பல்லக்கை விடுத்து, காரில் செல்லுமாறு ஈவேரா (1879-1973) செய்தார் என்ற கதை எப்படி, ஏன், அவ்வாறு, எதற்காக உலா வருகிறது! (2)

காஞ்சி பெரியவர் கோவிலுக்குச் சென்று கும்பிட்டது, ஈவேரா கும்பலுக்கு ஆணை இட்டது: லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்து சொன்னது, “பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்புஅந்த நேரத்தில், .வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார். பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது”. இனி இன்னொரு கதையினைப் பார்ப்போம்.

1957ல் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது, வரவேற்கும் நிகழ்ச்சி. தி ஹிந்து ஆசிரியர்.

தந்தை பெரியாரும், காஞ்சி பெரியவரும்! பல்லக்கில் வந்தது, ஈவேரா விமர்சித்தது![1]: இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.  ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?,” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்,!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள். “இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்,” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன…

லஸ் கதையில் எழும் கேள்விகள்: கீழ்கண்ட முக்கியமான விசயங்களை எடுத்துக் கொள்ளலாம்:

  1. லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள்.
  2. காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே. (1899-1974), சதாசிவம் (1902-1997) போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள்.
  3. பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
  4. அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
  5. இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
  6. பிறகு, பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள்.

ஆக, டி.டி.கே., சதாசிவம், போலீஸ் அதிகாரிகள், ஈவேரா மற்ற ஊடகக்காரர்கள் யாருக்குமா இவ்விசயத்தை தங்களது டைரி அல்லது குறிப்புகளில் எழுதிவைக்கவில்லை என்ற வினா எழுகிறது. முக்கியமான பிரச்சினை என்னவென்றால், தேதி குறிப்பிடாதது தான்!

திருமயிலையில் எந்த கோவிலுக்கு பெரியவர் வந்தார்?: திருமயிலையில், கீழ்கண்ட சிவாலங்கள் பழமையானதும் முக்கியாமானவையும் ஆகும். ஆக, இவற்றிற்கு, ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி வந்திருக்கலாம்:

1.  ஶ்ரீ காரணீஸ்வரர் கோவில் Sri Karaneeswarar Temple

 2. ஶ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோவில் Sri Theerthapaleeswarar Temple

 3. ஶ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் Sri Velleeswarar Temple

 4. ஶ்ரீவிர்பாக்ஷேஸ்வரர் கோவில்  Sri Virupaksheeswarar Temple

 5.  ஶ்ரீ வாலீஸ்வரர் கோவில் Sri Valeeswarar Temple

 6.  ஶ்ரீ மல்லீஸ்வரர் கோவில் Sri Malleeswarar Temple

 7.  ஶ்ரீ கபாலீஸ்வரர் கோவில் Sri Kapaleeswarar Temple

லஸ் கார்னர் என்றால், கடைசி மூன்றுதான் வருகின்றன. டி.டி.கேவுக்கு லஸ் கார்னரில் பதிவுபெற்ற அலுவலகம் இருந்தது. ஆனால், தீர்மானமாக சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

1957ல் கபாலீஸ்வரர் கோவிலுக்கு புஷ்ப பல்லக்கில் ஊர்வலமாகச் சென்றது: செப்டம்பர் 1957ல் பெரியவர் வந்தபோது, கஸ்தூரி ஶ்ரீனிவாசன், தி ஹிந்துவின் தலைமை ஆசிரியர் வரவேற்று உபசாரம் செய்தார்[2]. 1958லும் சங்கர ஜெயந்தி தருணத்தில், சமஸ்கிருத கல்லூரியிருந்து கபாலீஸ்வரர் கோவில் வரை பல்லக்கில் அழைத்துச் செல்லப் பட்டார். ஆதிசங்கரரரின் விக்கிரகமும் தெருக்களில் சுற்றி எடுத்துச் செல்லப்பட்டது. இப்படி நடந்து கொண்டிருக்கும் போது, ஏதாவது பிரச்சினை உண்டாகியிருந்தால், நிச்சயம், தினசரி நாளிதழ்களில் செய்தி வந்திருக்கும். ஆனால், ஒன்றும் இல்லை.  ஆக, இத்தகைய பல்லக்கு பவனி, ஊர்வலங்கள் எல்லாம் சாதாரணமாக, நடந்திருக்கின்றன. இப்பொழுது, இத்தகைய நாத்திகக் கூட்டங்கள் பெருக, அரசு ஆதரவும் கொடுப்பதால், ஏதோ பிரச்சினை போல, இவையெல்லாம் மாற்றப் படுகின்றன.

1968ல் பல்லக்கை விடுத்து காரில் சென்ற கதை: ஒரு புறம் வீரமணியே, சங்கராச்சாரியார் நடந்து சென்றார் என்று கதை சொல்லும் போது, இல்லை காரில் திரும்பி சென்றார் திகவினர் இக்கதையை தமக்கேயுரிய பாணியில் மாற்றி சொல்லி, எழுதி வருகின்றனர். 1968ல் திருவானைக்காவில் அவர் மடத்திற்கு சென்று திரும்பிய போது நடந்தது என்கின்றனர். 72 சூத்திரர், முன்னர் 18, பின்னர் 18 என்று நாதஸ்வரம் முழங்க சென்றபோது, ஈவேரா திரும்ப அப்படி வந்தால், காவேரியில் தூக்கிப் போடுங்கள் என்றாராம்! உடனே பயந்து போய், பல்லக்கை விட்டுவிட்டு, காரில் திரும்பினாராம்! பாக்கி 36 என்ன செய்து கொண்டிருந்தனர் என்று விளக்கவில்லை. ஆனால், இக்கதைகளுக்கு எந்த ஆதாரங்களோ, செய்திகளோ இல்லை!  1968ல் ஈவேராவுக்கு வயது 89, ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதிக்கு74, அந்நிலையில் அவர்கள் ஒரே நாளில் அங்கிருந்தார்களா என்று தெரியாது! 74 வயதான ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி பல்லக்கில் போனார் என்றால் அதில் எந்த விசயமும் இல்லையே? ஈவேராவைத் தூக்கிச் சென்றது என்றதெல்லாம் 1960-70களில் இருந்தவர்களுக்குத் தெரிந்த விசயம். வயதானவர் என்றாதால், அதனை வித்தியாசமாக விமர்சித்ததில்லை! எனவே, இப்படி அநாகரிகமாக கட்டுக் கதைகளை உருவாக்குவது, துவேசம், வெறுப்பு, காழ்ப்பு போன்ற எதிர்மறை குணாதிசயங்களால் உண்டானவை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

05-05-2022


[1] இது அப்படியே பலரால் பதிவு செய்யப் பட்டுள்ளது, ஆனால், ஆதாரத்தை யாரும் கொடுக்கவில்லை. சிலர், பல்லாக்கு சமாசாரம் மட்டும் தனியாக போட்டிருக்கிறார்கள் இது “வேதம் புதிது” படத்திலும் சித்தரிக்கப் பட்டுள்ளது.

வேதபிரகாஷ், காஞ்சிப் பெரியவர்ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [2], மார்ச்.18, 2020.

[2] PRabhu S, Periyava Mylapore Kapali 1957, Thursday, March 19, 2020.

https://prtraveller.blogspot.com/2020/03/periyava-mylapore-kapali-1957.html